Advertisment

34 வயது இளைஞர் மரணம்; சீரியல் நடிகை கம்பம் மீனா வீட்டில் துயரம்: உருக்கமான பதிவு

சீரியல் நடிகை கம்பம் மீனா வீட்டில் சோகம்; 34 வயது அக்கா மகன் மின்சாரம் தாக்கியதில் மரணம்; சமூக வலைதளத்தில் உருக்கமான பதிவு

author-image
WebDesk
New Update
cumbam meena

சீரியல் நடிகை கம்பம் மீனா வீட்டில் சோகம்; 34 வயது அக்கா மகன் மின்சாரம் தாக்கியதில் மரணம்; சமூக வலைதளத்தில் உருக்கமான பதிவு

Listen to this article
0.75x 1x 1.5x
00:00 / 00:00

குடும்பத்தில் நிகழ்ந்த சோக நிகழ்வு குறித்து சீரியல் நடிகை கம்பம் மீனா உருக்கமான பதிவை சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளார்.

Advertisment

விஜய் டிவியின் டாப் சீரியல்களான பாக்கியலெட்சுமி மற்றும் பாண்டியன் ஸ்டோர்ஸ் ஆகிய இரண்டிலும் நடித்து வருபவர் கம்பம் மீனா. பாக்கியலெட்சுமியில் செல்வி அக்காவாக நடித்து வரும் கம்பம் மீனா பாண்டியன் ஸ்டோர்ஸில் கஸ்தூரி அத்தாச்சியாக நடித்து வருகிறார்.

தெற்கத்தி பொண்ணு என்ற சீரியல் மூலம் அறிமுகமான கம்பம் மீனா, தனது வட்டார வழக்கு பேச்சுக்காக பிரபலமானவர். சீரியல்கள் மட்டுமல்லாது திரைப்படங்களிலும் கம்பம் மீனா நடித்துள்ளார். ஏழ்மையான பின்னனியில் இருந்து வந்தவர், தனது கடினமான உழைப்பில் முன்னுக்கு வந்துள்ளார். வாழ்வில் நிறைய சோகங்கள் இருந்தாலும், சீரியல்களிலும் திரைப்படங்களிலும் மக்களை மகிழ்த்து வருகிறார்.

இந்த நிலையில் கம்பம் மீனா சமூக வலைதளத்தில் பகிர்ந்திருக்கும் சோகமான பதிவு இணையத்தில் வைரலாக வருகிறது. அதாவது, இவருடைய அக்கா மகன் 34 வயதில் மரணமடைந்து விட்டார். அந்த பிரிவை தாங்க முடியாமல் தான் கம்பம் மீனா சோகமான பதிவை சமூக வலைதளத்தில் பகிர்ந்து இருக்கிறார்.

அதில் கம்பம் மீனா, என்னடா அவசரம். நீ தானடா காரியக்காரன்... தீஷிதனுக்கு அஞ்சு வயசு ஆகட்டும். அவன எப்படி கொண்டு வர்றேன் பாரு சித்தின்னு சொல்லி 4 நாள் தானடா ஆகுது... நீ அடுத்த தடவ வரும்போது நான் எப்படி இருக்கே பாரு சித்தின்னு சொன்னியே.... நாளே நாள்ல என்னையே வரவச்சுட்டியே பாண்டி... அய்யோ என்னடா இது காலக்கொடுமை. இப்படி 34 வயசுலயே எமனுக்கு பலி கொடுத்துட்டோமேடா பாண்டி... நான் வந்துட்டு இருக்கேன் டா. வாசல்ல வந்து என்னைய வா சித்தின்னு சொல்லுவியா பாண்டி” என்று பதிவிட்டுள்ளார்.

மற்றொரு பதிவில், பெத்தவங்களுக்கு பிள்ளைக கொல்லி போடனுமே தவிர பிள்ளைகளுக்கு பெத்தவங்க கொல்லிபோடுற நிலைமை எந்த பெற்றோருக்கும் வரகூடாது… என் உடன் பிறந்த அக்கா மகன் செல்லபாண்டி (வயது 34) நேற்று இதே நேரம் மின்சாரம் தாக்கி இறந்து விட்டான்.. உன் ஆன்மா சாந்தியடைய இறைவனை வேண்டுகிறேன் பாண்டி என்றும் உன் நினைவுடன்” என்று பதிவிட்டுள்ளார்.

Meena Vijaytv
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment