விஜய் டிவி நடிகைக்கு அடித்த ஜாக்பாட்; புதிய சீரியலில் ஹீரோயின் வாய்ப்பு

சக்தி ஐ.பி.எஸ் என்ற புதிய சீரியலில் ஹீரோயினாகும் விஜய் டிவி நடிகை; ஈகோ பார்க்காமல் சிறிய பாத்திரத்தில் நடித்தவருக்கு கிடைத்த சூப்பர் சான்ஸ்

author-image
WebDesk
New Update
swathika senthilkumar

சக்தி ஐ.பி.எஸ் என்ற புதிய சீரியலில் ஹீரோயினாகும் விஜய் டிவி நடிகை; ஈகோ பார்க்காமல் சிறிய பாத்திரத்தில் நடித்தவருக்கு கிடைத்த சூப்பர் சான்ஸ்

விஜய் டிவி சீரியல் நடிகை ஸ்வாதிகா செந்தில்குமார் புதிய சீரியலில் ஐ.பி.எஸ் அதிகாரியாக களமிறங்குகிறார்.

Advertisment

விஜய் டிவியில் விறுவிறுப்பாக ஒளிப்பரப்பாகி வருகிறது தமிழும் சரஸ்வதியும் சீரியல். இந்த சீரியலில் தீபக் மற்றும் நட்சத்திரா முன்னணி கதாப்பாத்திரங்களில் நடிக்கின்றனர். இந்த சீரியலில் வில்லியாக நடித்து வருபவர் ஸ்வாதிகா. அதுவும் மெயின் வில்லனின் தங்கையாகத் தான் நடித்து வருகிறார்.

இந்தநிலையில் ஸ்வாதிகாவுக்கு அடித்தது ஜாக்பாட். புதிய சீரியலில் ஹீரோயினாக நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார் ஸ்வாதிகா. அதுவும் ஐ.பி.எஸ் அதிகாரி வேடத்தில் நடிக்க உள்ளார். இந்த சீரியலுக்கு சக்தி ஐ.பி.எஸ் என்று பெயரிடப்பட்டுள்ளது.

இந்த சீரியல் பொதிகை சேனலில் ஒளிப்பரப்பாக உள்ளது. ஒரு சிறிய கிராமத்து பெண் ஐ.பி.எஸ் அதிகாரி ஆவது தொடர்பாக கதை இருக்கும் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்தச் சீரியலை இயக்குனர் சுரேஷ் கிருஷ்ணா இயக்க உள்ளார்.

Advertisment
Advertisements

இந்தத் தகவலை ஸ்வாதிகா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மகிழ்ச்சியுடன் பகிர்ந்துள்ளார். யூடியூப் வீடியோக்கள் மற்றும் இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் மூலம் பிரபலமான ஸ்வாதிகா துணை நடிகையாக நடித்து, தற்போது ஹீரோயினாக உயர்ந்துள்ளார்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  https://t.me/ietamil

Vijay Tv

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: