Advertisment

வார்த்தையால் குத்திக் கிழிக்கும் கோபி... இவ்ளோ ஏமாளியா இருக்காரே பாக்யா?

செழியனிடம் இனி பணம் வாங்க கூடாது என முடிவெடுக்கும் பாக்கியா, மாமனாரின் மருத்துவ செலவுக்காக பணம் கேட்கும் பாக்கியாவை திட்டும் கோபி; பாக்கியலட்சுமி சீரியல் ப்ரோமோ

author-image
WebDesk
New Update
வார்த்தையால் குத்திக் கிழிக்கும் கோபி... இவ்ளோ ஏமாளியா இருக்காரே பாக்யா?

Vijay TV Baakiyalakshmi serial new promo: விஜய் டிவியில் ஒளிப்பரப்பாகி வரும் பாக்கியலட்சுமி சீரியலுக்கு ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு இருந்து வருகிறது. பாரதி கண்ணம்மா சீரியலுக்கு அடுத்தப்படியாக விறுவிறுப்பாக சென்றுக் கொண்டிருக்கும் சீரியல் இதுதான். டிஆர்பி ரேட்டிங்கிலும் இந்த சீரியல் முன்னனியில் உள்ளது. ஒரு இல்லத்தரசி படும் கஷ்டங்களையும், அதை சமாளித்து அவள் எப்படி முன்னேறுகிறாள் என்பதாகவும் அமைப்பட்டுள்ள கதையை தமிழ் குடும்பங்கள் வெகுவாக ரசித்து வருகின்றன.

Advertisment

சீரியலில் எப்படியாவது பாக்கியாவிடம் இருந்து விவாகரத்து வாங்கிவிட்டு, ராதிகாவை திருமணம் செய்து கொள்ள முயற்சிக்கிறார் கோபி. ஒரு புறம் கோபியின் சுயரூபம் தெரிந்த அவனது அப்பா, இப்போது பேச முடியாத நிலையில் இருக்கிறார். இதனிடையே, ராதிகா ஏற்கனவே ராஜேஷிடம் இருந்து விவாகரத்து வாங்கிவிட்டதால், கோபியை விவாகரத்து வாங்கச் சொல்லி வற்புறுத்தி வருகிறார். ஆனால் உண்மையைச் சொல்லி விவாகரத்து வாங்க முடியாததால், பொய் சொல்லி விவாகரத்து பேப்பரில் பாக்யாவிடம் கையெழுத்து வாங்குகிறார் கோபி. இந்த எபிசோடுகள் விரைவில் வெளியாக உள்ளன. இதற்கான ப்ரோமோ ஏற்கனவே வெளியிடப்பட்டுள்ளது.

இந்தநிலையில், தாத்தாவின் மருத்துவச் செலவுக்கு செழியனிடம் பாக்கியா பணம் வாங்கியிருந்த நிலையில், செழியன் கணக்கு பார்த்து கொடுக்க மனமில்லாமல் கொடுத்ததை பாக்கியா தெரிந்துக் கொண்டார். இதனால் செழியனிடம் இனி பணம் வாங்க கூடாது என முடிவெடுக்கிறார் பாக்கியா.

இதையும் படியுங்கள்: திடீரென ஏன் கல்யாண கோலம்? லைக்ஸ் அள்ளும் ராஜலட்சுமி- செந்தில்

இந்த நிலையில், தற்போது வெளியாகியுள்ள ப்ரோமோவில், கோபியிடம் பணம் கேட்கிறார் பாக்கியா. அப்பா எல்லா சொத்தையும் உன் பேரில் தானே எழுதி வச்சிருக்கார். அப்புறம் ஏன் எங்கிட்ட வந்து எக்ஸ்ட்ரா பணம் கேட்குற. உனக்கு எதுக்கு அவ்வளவு பணம் என்று கேள்வி கேட்கிறார். அப்போது பாக்கியா நான் எனக்காக கேட்கல, உங்க அப்பா மருத்துவ செலவுக்கு பணம் கட்டுனதுக்கு செழியன் கணக்கு பார்க்குறான், அத திருப்பி கொடுக்கத்தான் கேட்குறேன், இத்தன வருஷம் எங்கூட இருந்து, என் மனசு புரிஞ்சுக்காம பேசுறிங்கல்ல என அழுதவாறே செல்கிறாள் பாக்கியா. பாக்கியாவுக்கு கோபி பணம் கொடுக்காத நிலையில், அவள் கலங்கி நிற்க எழில் வந்து உதவுகிறான்.

இந்த பிரச்சனை ஒரு புறம் இருக்க, மறுபுறம் விவாகரத்து வாங்க கோபி துடித்து வருவதால், பாக்கியலட்சுமி சீரியலின் எபிசோடுகளை பார்க்க ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Vijay Tv Baakiyalakshmi Serial
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment