ராதிகா பெயரை சொன்னதும் கோபி நடுங்கியதை பார்த்து குடும்பத்தினர் அனைவரும் சிரிக்க, மொத்த குடும்பத்தின் முன்பும் கோபியை எழில் பாடாய்படுத்தி வருகிறார்.
Advertisment
விஜய் டிவியில் வெற்றிகரமாக ஒளிபரப்பாகி வரும் சீரியல் பாக்கியலட்சுமி. ரசிகர்களின் பெரிய வரவேற்பு காரணமாக ப்ரைம் டைமில் இந்த சீரியல் ஒளிப்பரப்பாகி வருகிறது. கதையில் அடுத்தடுத்த திருப்பங்கள் காரணமாக விறுவிறுப்பாக சென்றுக் கொண்டிருக்கும் சீரியலை ரசிகர்கள் ஆர்வத்துடன் ரசித்து வருகின்றனர்.
இந்தநிலையில் பாக்கியலட்சுமி சீரியலின் மே 29 ஆம் தேதி முதல் ஜூன் மூன்றாம் தேதி வரை இந்த வாரத்திற்கான ப்ரோமோ வெளியாகி இருக்கிறது.
அந்தப் ப்ரோமோவில், மொத்த குடும்பமும் டைனிங் ஹாலில் உட்கார்ந்து பாக்யாவோடு பேசி சிரித்து கொண்டிருக்கிறார்கள். அப்போது ரூமில் இருந்து கீழே வரும் கோபி மொத்த குடும்பமும் சிரித்து பேசி கொண்டிருப்பதை பார்த்து, இது என்னுடைய ஃபேமிலி நானும் ஜாயின் பண்ணுவேன் என்று தனக்கு தானே கூறிக்கொண்டு, பாக்யா மற்றும் எழில் இருவருக்கும் நடுவில் வந்து உட்கார்கிறார்.
மேலும், என்ன ஜோக்னு சொன்னா, நானும் சிரிப்பேன் என்று கூறுகிறார். அதைப் பார்த்து பாக்யா கடுப்பாக, அப்போது அருகில் இருக்கும் எழில் கண்ணை காட்டி ஜாடை செய்து எச்சரிக்கிறார், அதை புரிந்து கொள்ளாத கோபி என்னது என்று கேட்க, அவங்க வராங்க என்று எழில் சொல்கிறார். அதற்கு, எவங்க என்று கோபி கேட்க, அதான் ராதிகா என்று சொல்ல, என்ன ராதிகாவா என்று கோபி கதறுகிறார்.
மேலும், நான் காபி குடிக்கல, நான் ஒண்ணுமே செய்யல, நான் சும்மாதான் இருக்கேன் என்று பயந்து அலறிக் கொண்டிருப்பதை பார்த்து மொத்த குடும்பமும் சிரித்துக் கொண்டே இருக்கிறது. பாக்யா இவரா இப்படி பேசுவது என்று குழப்பமாக பார்க்கிறார். எழில் வாயில் கை வைத்து சிரிக்கிறார். மொத்த குடும்பமும் சிரித்துக் கொண்டிருக்க கோபி தான் பல்பு வாங்கியதை உணர்கிறார். உடனே என்ன சொல்வது என்று தெரியாமல் அந்த இடத்தை விட்டு நைசாக விலகி போகிறார் கோபி. இவ்வாறு அந்த ப்ரோமோ வெளியாகியுள்ளது.
இந்த நிலையில் பாக்யா அருகில் கோபி உட்கார்ந்து இருந்ததை ராதிகா பார்த்துவிட்டதால், இனி அடுத்து என்ன பிரச்சனையை கிளப்புவார் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் எழுந்துள்ளது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil