ராதிகாவை வீட்டை விட்டு ஈஸ்வரி துரத்த, போலீஸ் அனுமதியுடன் மீண்டும் வீட்டிற்குள் வருகிறார். இதனால் மொத்த குடும்பமும் செய்வதறியாமல் நிற்கின்றனர். இப்படியாக இந்த வார பாக்யலட்சுமி சீரியல் ப்ரோமோ வெளியாகியுள்ளது.
Advertisment
விஜய் டிவியில் வெற்றிகரமாக ஒளிபரப்பாகி வரும் சீரியல் பாக்கியலட்சுமி. ரசிகர்களின் பெரிய வரவேற்பு காரணமாக ப்ரைம் டைமில் இந்த சீரியல் ஒளிப்பரப்பாகி வருகிறது. கதையில் அடுத்தடுத்த திருப்பங்கள் காரணமாக விறுவிறுப்பாக சென்றுக் கொண்டிருக்கும் சீரியலை ரசிகர்கள் ஆர்வத்துடன் ரசித்து வருகின்றனர்.
இந்தநிலையில் பாக்கியலட்சுமி சீரியலின் ஜூன் 5 ஆம் தேதி முதல் ஜூன் 10 தேதி வரை இந்த வாரத்திற்கான ப்ரோமோ வெளியாகி இருக்கிறது.
ராதிகா காஃபி குடிக்கும்போது, அதை தட்டிவிட்டு, உனக்கு காஃபி ஒரு கேடா? இங்க எப்படி இருக்குறனு பாக்குறேன், ராதிகாவை கழுத்தைப் பிடித்து, வீட்டை விட்டு வெளியே தள்ளுகிறார் ஈஸ்வரி. பின்னர் அங்கு வரும் கோபியிடம் நடந்ததைச் சொல்லி கதறுகிறார் ராதிகா. கோபப்படும் கோபி ராதிகாவை அழைத்து வந்து தனது அம்மாவிடம் நியாயம் கேட்கிறார். அப்போது ஈஸ்வரி, இங்க நான் இருக்கணுமா? இல்ல அவ இருக்கணுமா? என்று கேட்கிறாள்.
அப்போது அங்கு போலீஸ் உடன் நுழைகிறார் ராதிகாவின் அம்மா. வந்து ஈஸ்வரியை அரெஸ்ட் பண்ணச் சொல்கிறார். வாக்குவாதம் நடக்க, போலீஸ் அதிகாரி பாக்யாவின் புருஷன் இன்னொரு கல்யாணம் பண்ணிக்கிட்டார். அவங்க இங்க இருக்க கூடாதுனு சொல்ல யாருக்கும் உரிமை கிடையாது என்கிறார். இதைக்கேட்டதும் கெத்தாக வீட்டிற்குள் செல்கிறார் ராதிகா. பாக்யா உள்ளிட்ட மொத்த குடும்பமும் கோபத்துடன் நிற்க, இத்துடன் ப்ரோமோ முடிவடைகிறது.
ராதிகா இந்த வீட்டில் தங்கலாம் என போலீஸே சொல்லிவிட்டதால், ராதிகா இனி என்னச் செய்யப்போகிறார் என்ற எதிர்ப்பார்ப்பு எழுந்துள்ளது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil