/tamil-ie/media/media_files/uploads/2022/07/Baakiyalakshmi-4.jpg)
விஜய் டிவியின் பாக்கியலட்சுமி சீரியல் பரபரப்பான திருப்பங்களுடன் அரங்கேறி வரும் நிலையில், கோபி தனது அடுத்த பிளான் குறித்து பேசியுள்ள ப்ரமோ தற்போது வைரலாகி வருகிறது.
விஜய் டிவியின் பாக்கியலட்சுமி சீரியல் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வரும் நிலையில், பாக்யாவுக்கு தெரியாமல் ராதிகாவுடன்தொடர்பில் இருந்த போகி தற்போது வீட்டில் மாட்டிக்கொண்டு பெரிய பிரச்சினை ஏற்பட்டுள்ளது. இந்த உண்மை தெரிந்த பாக்யாவும் வீட்டைவிட்டு வெளியேறிவிட்டார்.
இதனால் பாக்கியாவின் குடும்பமே அவரை நினைத்து ஃபீல் பண்ணிக்கொண்டிருக்கும் நிலையில், பாக்கியாவை நினைத்து இனியா மிகவும் கஷ்டப்பட்டு வருகிறார். இதனால் என்ன செய்வது என்று தெரியாமல் வழித்துக்கொண்டிரக்கும் கொபி, பாக்கியாவை அழைப்பதற்கு அவர் இருக்கும் இடத்திற்கு வருகின்றார்
அப்போது வழியில் தனது நண்பனை சந்திக்கும் கோபி, அவரிடம் பேசிக்கொண்டிருக்கிறார். அப்போது கோபியின் நண்பர், நீ உன்குடும்பத்துக்காக நிறைய செய்திருக்கிறாய். நீ கடின உழைப்பாளி தான் ஆனால் இது உன் வாழ்க்கை பிரச்சினை ஒரு தடவைக்கு 4 தடவை யோசித்து முடிவு பண்ணு என்று சொல்கிறார்.
இதை கேட்ட கோபி, இந்த பிரச்சினைக்கு தற்காலிகமாக ஒரு முடிவு கட்டவேண்டும். அங்க இனியா அம்மா அம்மா என்று அழுதுகொண்டே இருக்கிறாள். இப்போது தற்காலிகமாக பாக்யாவை சமானதப்படுத்தி வீட்டிற்கு அழைத்து செல்ல வேண்டும். அப்புறம் ராதிகாவை சமாதானப்படுத்த வேண்டும்.
ராதிகா கல்யாணத்திற்கு ஒப்புக்கொள்ளும்போது பாக்யாவுக்கு டைவர்ஸ் கொடுத்து விட்டு சென்றுவிடுவேன் இது தான் என் பிளான் என்று சொல்கிறார். இதை கேட்டு கோபியின் ப்ரண்டு வாயடைத்து போய் நிற்க அத்துடன் ப்ரமோ முடிவடைகிறது. இதனால் இன்றைய எபிசோட்டில் என்ன நடக்கப்போகின்றது என்பது குறித்த பெரிய எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.