Advertisment

Tamil TV Serial: பாக்யா வீட்டில் மயூ; ராதிகா வீட்டில் கோபி!

கோபி ராதிகா வீட்டில் இருக்கும்போது, பாக்யலட்சுமி கோபிக்கு போன் செய்கிறார். உடனே கோபி, “டீச்சர் ஏன் எனக்கு போன் பண்றாங்க. என் நம்பர் கொடுத்தியா” என உளறி மாட்டிக்கொள்கிறார்.

author-image
WebDesk
New Update
Vijay TV, baakiyalakshmi serial, baakiyalakshmi, விஜய் டிவி, பாக்யலட்சுமி சீரியல், பாக்யலட்சுமி சீரியல் இன்றைய எபிசோடு, கோபி, மயூ, ராதிகா, எழில் அமிர்தா, vijay tv serial, tamil tv serial, baakiyalakshmi, gopi, mayu, radhika, amirtha, ezhil

Vijay TV Baakiyalakshmi Serial: விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் பாக்யலட்சுமி சீரியல் இன்றைய எபிசோடு ஒரு பரபரப்பான திருப்பத்தை எட்டியுள்ளது. கோபி ராதிகா வீட்டிலும், மயூ ராதிகா வீட்டிலும் இருக்கிறார்கள். பாக்யலட்சுமி வீட்டுக்கு வந்துள்ள ராதிகாவின் மகள் மயூ பாக்யா குடும்பத்தினரிடம், “அம்மாதான் (ராதிகா) பாவம் தனியா தூங்கியிருப்பாங்க..” என்று கூறுகிறாள். அதற்கு வேலைக்காரி, “அம்மாதான் பெரியவங்க இல்ல, பயப்படாம நல்லா தூங்கியிருப்பாங்க” என்று சிறுமி மயூவுக்கு ஆறுதல் கூறுகிறாள்.

தொடர்ந்து பேசும் மயூ, “அப்பா வருவாரு… அதை நினைச்சாதான் பயமா இருக்கு… எங்கம்மா பாவம், எங்கப்பா ரொம்ப மோசம்…” என்று கூறுகிறாள்.

Advertisment

அதற்கு, பாக்யாவின் மாமியார், நல்ல பொண்டாட்டி இருக்கா, குழந்தை இருக்கா, இப்படியா குடிப்பான் என்று சொல்கிறார். இதையடுத்து பேசும் மயூ, “அவர் கத்துவார், எனக்கும் எங்க அம்மாவுக்கும் பயமா இருக்கும். ஒரு தடவை ஸ்கூல்ல இருந்து எங்கம்மாவுக்கு தெரியாம என்னை கூட்டிட்டு போய்விட்டார் தெரியுமா? நான் எங்கம்மாவ தேடி அழுதேன்… எங்கம்மாவும் என்னை தேடி ரொம்ப அழுதாங்க… அப்புறம் எங்கம்மாவும் என்னை தேடி ஒருவழியா வந்துட்டாங்க” என்று கூறுகிறாள்.

பாக்யாவின் மாமியார், மாமனார், குடும்பத்தினர் எல்லோரும் மயூவின் கதையைக் கேட்டு வருத்தப்படுகின்றனர்.

பாக்யலட்சுமி, “பாவம் அத்தை ராதிகா, அவள் இதை சொல்லிதான் கவலைப்பட்டா. அவங்க தங்கியிருக்கிற வீட்டுக்கு போய் கலாட்டா பண்ணி, பிறகு, பக்கத்துவீட்ல போய் கலாட்டா பண்ணி, பிறகு, எல்லோரும் வீட்டை காலி பண்ணிட சொல்லிட்டாங்கலாம்” என்று வருத்தத்துடன் கூறுகிறாள். இதைக்கேட்டு பாக்யாவின் மாமியாரும் அய்யய்யோ என்று வருத்தப்படுகிறார்.

தொடர்ந்து பேசுகிற மயூ, “எங்கப்பா வீட்டுக்கு பக்கத்துல வந்து கலாட்டா பன்றதால, பக்கத்துவீட்ல எந்த பசங்களும் எங்கூட விளையாட மாட்டாங்கறாங்க…” என்று சோகமாக சொல்கிறாள்.

பாக்யலட்சுமி, “ஆமா அத்தை ராதிகா இதையும்கூட எங்கிட்ட சொல்லி வருத்தப்பட்டாங்க… அங்கப் பிரச்னைனு சொல்லிதா ரிலேட்டிவ் வீட்ல போய் தங்கியிருக்காங்க… அங்கியும் போய் பிரச்னை பண்ணியிருக்கான் அந்த ஆளு… ” என்று கூறுகிறாள்.

“ஆமாம், எங்கம்மா பாவம், எங்கப்பா புடிச்சி தள்ளிவிட்டுட்டாரு…” என்று ராதிகாவின் மகள் மயூ வருத்தத்துடன் கூறுகிறாள்.

மயூவை ஆறுதல்படுத்தும் விதமாக, பாக்யலட்சுமி, “நீ வருத்தப்படாத மயூ… உனக்கு நாங்க எல்லோரும் இருக்கோம் இல்ல. நாம் ஏதாவது செய்யலாம்” என்று ஆறுதல் கூறுகிறாள்.

அதற்கு மயூ, “அப்பா மட்டும் வீட்டுக்கு வராமல் இருந்தாலே போதும்… அம்மாகூட சண்டை போடாமல் இருந்தாலே போதும்…” என்று கூறுகிறாள்.

இதற்கு, பாக்யாவின் மாமியார், “கோபிகிட்ட சொல்லி அந்த ஆளுகிட்ட பேசிப் பார்க்கலாமங்க…” என்று கேட்க, பாக்யா, “சொன்னா செய்வாரா அத்தை” என்று கேட்கிறாள். அதற்க் பாக்யவின் மாமியார் அதெல்லாம் செய்வான் என்று நம்பிக்கை அளிக்கிறார்.

இதைக் கேட்ட சிறுமி மயூ, “யாரு கோபி” என்று கேட்கிறாள். அதற்கு, பாக்யா “இனியா அக்காவுடைய அப்பாதான் கோபி” என்கிறாள். அதற்கு, மயூ, “எங்க வீட்டுக்கு கோபினு ஒரு அங்கிள் வருவாரு அவரு பேரும் கோபிதான். அவரு ரொம்ப நல்லவரு” என்று கூறுகிறாள். அதற்கு கோபினும் பேர் உள்ளவர்கள் எல்லாம் நல்லவர்களாகத்தான் இருப்பார்கள் என்று கோபியின் அம்மா கூறுகிறார்.

வீட்டில் இருந்தால், மயூ தன்னை பார்துவிட்டால் யார் என்று சொல்லிவிடுவாள் என்பதால், சிறுமி மயூவுப்பு பயந்து கோபி பெங்களுருவுக்கு செல்வதாக கிளம்பி நேராக ராதிகா வீட்டுக்கு போகிறார். கோபி அங்கே, மகள் இல்லாமல் தனியாக இருக்கும் ராதிகா உடன் இனி இருக்கப்போவதாக கூறுகிறார். அதுமட்டுமில்லாமல், அங்கே தங்குவதற்கு அவருடைய உடைகளையும் எடுத்துக்கொண்டு வந்திருப்பதாக கோபி சொல்ல ராதிகா பெரிய ஆச்சர்யம் அடைகிறாள்.

கோபி ராதிகாவிடம், “மயூ திரும்ப வரும்வரை இங்கே தான் இருக்கப்போகிறேன்” என்று சொல்கிறார்.

வழக்கம்போல, அமிர்தா எழிலிடம் போனில் பேசிக்கொண்டிருக்கிறாள். ஏற்கனவே, அவர் அலுவலகம் சென்று பேசிவிட்டு வந்தாள். போனில் அமிர்தா சிரித்து பேசிக்கொண்டிருப்பது பற்றி அப்பாவும் அம்மாவும் வந்து திட்டுகிறார்கள்.

அம்மா அமிர்தாவிடம், “உன் ஆசையை அடக்க முடியலையா?” என திட்டுகிறாள். “அழகான சேலை கட்டிக்கொண்டு அன்னைக்கு எங்கே போனாய், கல்லூரியில் வந்து விசாரித்தால் நீ வரவேயில்லனு சொன்னார்கள்” என்று அப்பா கேட்கிறார்.

பிறகு, அமிர்தாவின் அப்பாவும் அம்மாவும், “எங்களை எந்த முடிவையும் எடுக்க வைத்துவிடாதே” என்று அமிர்தாவை என எச்சரித்துவிட்டு செல்கிறார்கள்.

டீச்சர் ஏன் எனக்கு போன் பன்றாங்க.. உளறி மாட்டிக்கொண்ட கோபி

“மயூ அம்மாவை பார்க்க வேண்டும்” என்று கூறியதால் பாக்யலட்சுமி ராதிகாவுக்கு போன் செய்கிறார். ராதிகா பேசும்போது “நான் இப்போவே வரவா” என கேட்கிறார். மயூ, “இப்போது வேண்டாம்” என்று கூறுகிறாள்.

ராதிகாவுடன் பேசிமுடித்த பிறகு, பாக்யலட்சுமி கோபிக்கு போன் செய்கிறார். உடனே இவர், “டீச்சர் ஏன் எனக்கு போன் பண்றாங்க. என் நம்பர் கொடுத்தியா” என கோபி உளறிவிடுகிறார். அதை கேட்டு ராதிகா கடும் அதிர்ச்சி அடைகிறார். இத்துடன் இந்த எபிசோடு நிறைவடைகிறது.

இனிவரும் எபிசோடில், கோபி ராதிகாவுடன் தொடர்பில் இருப்பது பாக்யலட்சுமிக்கும் குடும்பத்தினருக்கும் தெரியவருமா? அப்படி தெரியவந்தால் என்ன ஆகும்? குடும்பத்தில் எப்போது பூகம்பம் வெடிக்கும் என்ற விருவிருப்பான திருப்பங்களுடன் அமையும் என்பதில் சந்தேகமில்லை.

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil"

Vijay Tv Baakiyalakshmi Serial Baakiyalakshmi
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment