கோபிக்கு வேலை கொடுக்கும் பாக்யா... கடுப்பான ராதிகா : பாக்கியலட்சுமி சீரியலில் இன்று

பாக்கியலட்சுமி சீரியலின் இன்றைய எபிசோடு குறித்து பார்ப்போம்

பாக்கியலட்சுமி சீரியலின் இன்றைய எபிசோடு குறித்து பார்ப்போம்

author-image
WebDesk
New Update
Baakiyalakshmi Serial 12

பாக்கியலட்சுமி சீரியல்

விஜய் டிவியின் பாக்கியலட்சுமி சீரியல் ரசிகர்கள் மத்தியில் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி வரும் நிலையில், தினசரி எபிசோடுகள் விறுவிறுப்பை அதிகரித்து வருகிறது. அந்த வகையில், பாக்கியலட்சுமி சீரியலின் இன்றைய எபிசோடு குறித்து பார்க்கலாம்.

Advertisment

கோபி ஆபீஸை இழுத்து மூடியதை தெரிந்துகொண்ட ராதிகா, வீட்டுக்கு வரும்போதே கோபியுடன் சண்டை போட்டுக்கொண்டு வருகிறார். இதை பார்த்த ஈஸ்வரி ராமமூர்த்தி இருவரும், என்ன என்று விசாரிக்க, கோபி ஒன்றும் இல்லை என்று சொல்லி விடுகிறார். மீண்டும் மீண்டும் விசாரிக்க, சின்ன பிரச்சனை தான் அம்மா, அதுக்காக கார்ல வரும்போதே சண்டை போட்டுக்கிட்டே வருகிறாள் என்று ஈஸ்வரியிடம் ராதிகாவை போட்டு கொடுக்கிறார்.

கோபியின் பேச்சை கேட்ட ஈஸ்வரி, ராதிகாவை அழைத்து உன்னால் தான் அவனுக்கு ஹார்ட் அட்டாக் வருகிறது. நீ சும்மாவே இருக்கமாட்டியா என்று கேட்க, உங்க பையன் மட்டும் ஒழுக்கமா இருக்கிறாரா என்று கேட்க, அவனுக்கு என்ன, தங்கம் மாதிரி பொய் பேசமாட்டான், பொறுப்பான அமைதியான பையன் என்று சொல்ல, அப்போ உங்க பையன் ஆபீஸை இழுத்து மூடிய விஷயம் உங்களுக்கு தெரியுமா என்று ராதிகா கேட்க, அனைவரும் ஷாக் ஆகின்றனர்.

இதை கேட்ட ஈஸ்வரி, இதை ஏன்டா என்ட சொல்லவே இல்லை என்று கேட்க, நான் ஆபீஸ் வச்சிதான் எல்லாம் சாதிச்சேன். இப்போ திடீரென அந்த ஆபீஸ் இழுத்து மூடிட்டேனு எப்படி சொல்றது என்று பீல் பண்ண, இன்னைக்கு சொல்றேன் கேட்டுக்கோங்க, கோபிநாத் ஆபீஸை இழுத்து மூடிட்டான் என்று சொல்லிவிட்டு சோபாவில் நெஞ்சை பிடித்துக்கொண்டு விழுந்து அழுகிறான் கோபி. அதே சோபாவில் உட்கார்ந்து, ஈஸ்வரி அவனுக்கு ஆறுதல் சொல்கிறாள்.

Advertisment
Advertisements

இன்னைக்கு கிரீடிட் கார்டு பில் கட்டலனு ரெண்டு மூனு தடவை வந்தாங்க. அப்போவே எல்லா பிரச்சனையும் சரி பண்ணிருப்பேனு நினைச்சேன். ஆனால் இப்படி நடக்கும் என்று எதிர்பார்க்கலையே என்று சொல்ல, வீட்டில் இருப்பவர்கள் அனைவரும் அதிர்ச்சியாகி இதெல்லாம் எங்களிடம் சொல்லவே இல்லையே என்று சொல்கின்றனர். அப்போது உனக்கு சந்தோஷமா இருக்குமே நீ ரெஸ்டாரண்ட் வக்கிர அளவுக்கு வளந்துட்ட, நான் ஒன்னும் இல்லாம நிக்கிறேன்.

இப்போ உனக்கு மகிழ்ச்சியாக இருக்குமே என்று கோபி சொல்ல, பாக்யா எதுவும் பேசாமல் சென்றுவிடுகிறாள். அதன்பிறகு பாக்யா கிச்சனில் நிற்கும்போது, கோபி, போனில் வேலை பற்றி பேசிக்கொண்டிருக்கிறான். அதன்பிறகு, பாக்யாவிடம், நான் போனில் பேசியதை கேட்டுருப்ப, உனக்கு இப்போ ரொம்ப சந்தோஷமா இருக்குமே என்று மீண்டும் பாக்யாவை வம்பிழுக்க, அவள் நாங்கள் ரெஸ்டாரண்ட் திறக்கிறோம். அங்கே மேனேஜர் வேலை தருகிறேன் என்று சொல்கிறாள்.

அப்போது ராதிகா அங்கு வந்துவிட, பாரு ராதிகா நான் இவங்க ரெஸ்டரண்டில் வேலை செய்யனுமாம். நான் ஒன்னும் அந்த அளவுக்கு அதளபாதாளத்திற்கு போய்டல என்று சொல்லி கோபப்பட அத்துடன் இன்றைய எபிசோடு முடிவடைகிறது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Baakiyalakshmi Serial

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: