Advertisment

Vijay TV Serial; டாக்குமெண்ட்ஸ் தப்புனு ஏன் பொய் சொன்ன, கேள்வி கேட்கும் ராதிகா… மாட்டிக்கொண்டு முழிக்கும் கோபி

Vijay TV serial bakiyalakshmi today episode radhika confronts gopi: அம்ரிதாவின் உண்மையான பெற்றோரை பற்றி கேட்கும் எழில், டாக்குமெண்ட்ல தப்பு இல்லை, வீட்டை வாங்க போறேன் என சொல்லும் ராதிகா இன்றைய எபிஷோடில்…

author-image
WebDesk
New Update
Vijay TV Serial; டாக்குமெண்ட்ஸ் தப்புனு ஏன் பொய் சொன்ன, கேள்வி கேட்கும் ராதிகா… மாட்டிக்கொண்டு முழிக்கும் கோபி

விஜய் டிவியில் ஒளிப்பரப்பாகும் பாக்கியலட்சுமி சீரியலில் இன்று என்ன நடந்தது என்பதைப் பார்ப்போம்.

Advertisment

இன்றைய எபிஷோடில்…

ஆபிஸ் செல்லும் வழியில் அம்ரிதாவும் எழிலும் சந்தித்துக் கொள்கிறார்கள். அப்போது, எழிலிடம் சாப்பிட்டிங்களா என கேட்கும் அம்ரிதாவிடம் நீங்க எங்க அம்மா மாதிரி எப்ப பார்த்தாலும் சாப்பிட்டியானு கேட்குறீங்க என்கிறான். பின்னர் உங்க வீட்டில் எங்ககூட சேர்ந்து வேலை பார்க்குறத சொல்லிட்டிங்களா, என எழில் கேட்க, இல்ல எப்படி சொல்றது என கேட்கிறாள் அம்ரிதா. அதற்கு எழில் டென்ஷனாக வேண்டாம், சும்மா தான் கேட்டேன் என்கிறான். உங்க வீட்ல ஏன் இப்படி பயப்படுறாங்க என எழில் கேட்க, கணேஷ் இல்லாத்தால என்ன நம்புறாங்க அதான் பயப்படுறாங்க என சொல்கிறாள் அம்ரிதா.

publive-image

அம்ரிதாவிடம் அவளது சொந்த ஊர் பற்றியும், அவளது உண்மையான பெற்றோர் பற்றியும் கேட்கிறான் எழில். சொந்த ஊர் தஞ்சாவூர் பக்கம் ஒரத்தநாடு, என்றும் அப்பா அஸ்ஸாமில் வேலைப்பார்ப்பதாகவும், இரண்டு தங்கச்சிங்க இருப்பதாகவும் அம்ரிதா சொல்கிறாள். உங்க கதையே ஒரு படம் எடுக்கற அளவுக்கு இருக்கு என சொல்கிறான் எழில்.

அடுத்ததாக, இனியாவும் பாக்கியாவும் பிரின்சிபலைச் சந்திக்கிறார்கள். பாக்கியாவின் சமையலை பாராட்டும் பிரின்சிபல், அடுத்த எல்லா ஃப்ங்க்ஷனுக்கும் நீங்க தான் சமைக்கிறீங்க எனக் கூறி, இப்போது சமைத்ததற்கான பணத்தை கொடுக்கிறார்.

ஆபிஸில் சூப்பரா வேலை செய்வதாக அம்ரிதாவை பாராட்டுகிறான் எழில். நேரமானதால், வீட்டுக்கு கிளம்புகிறாள் அம்ரிதா, அவளிடம் டைம் ஆயிட்டா பயப்படாதீங்க உங்க வீட்ல நான் பேசி சரி பண்றேன் என சொல்கிறான் எழில்.

அடுத்ததாக ராதிகா வீட்டுக்கு வரும் கோபியிடம் டாக்குமெண்ட்ஸை சரியா செக் பண்ணிங்களா என கேட்கிறாள் ராதிகா. அதைக்கேட்டு அதிர்ச்சியாகும் கோபி, நல்ல செக் பண்ணிட்டேன் என்கிறான். அதற்கு ராதிகா நா வேற வக்கீல் கிட்ட செக் பண்ணேன் எல்லாம் சரியா இருக்குறதா சொல்றாங்க என்கிறாள். உடனே கோபி என்னை நீ நம்பலையா என கேட்க, ராதிகா நா இரண்டு வக்கீல் கிட்ட கேட்டுடேன் எல்லாம் சரியா இருக்குனு சொல்றாங்க என்கிறாள். பதற்றமாகும் கோபி, என்னோட வக்கீல் சீனியர் நா வேணா உன்ன அவர்கிட்ட கூட்டி போறேன் என்கிறான். ராதிகா எல்லோரும் டாக்குமெண்ட் சரியா இருக்கு சொல்றாங்க, டீச்சரும் டாக்குமெண்ட்ல எந்த பிரச்சனையும் இல்லைனு சொல்லி என்கிட்ட சங்கடப்பட்டாங்க என சொல்கிறாள். அதன் பின் உங்களுக்கு நா அந்த வீட்ட வாங்குறதில் விருப்பம் இல்லாம பொய் சொல்லிட்டீங்களா என ராதிகா கேட்க அதிர்ச்சியாகிறான் கோபி. பின்னர் ஒருவாறு சமாளித்தவாறு, நீ வீடு வாங்குறதுல எனக்கு சந்தோஷம் தான், அதனால வேற ஒரு நல்ல வக்கீல் கிட்ட கேட்டுட்டு வாங்கலாம் என கோபி சமாளிக்கிறான். அதற்கு ராதிகா நா அந்த வீட்ட வாங்குறத முடிவு பண்ணிட்டேன் என அடுத்த குண்டை தூக்கி போடுகிறாள்.

இதைக்கேட்டு கோபமடையும் கோபி, டாக்குமெண்ட்ல பிரச்சனை இருந்தும் நீ வாங்க போறியா என கேட்க, ராதிகா ஆமா வாங்க போறேன் என்கிறாள். பின்னர் கோபி கடைசியா ஒருமுறை வேற ஒரு வக்கீல்கிட்ட கேட்டுட்டு வாங்கலாம் என்று கெஞ்சுகிறான் கோபி. மேலும் நீ என்ன நம்பலையா என கேட்க, ராதிகா அதெல்லாம் இல்லை என்கிறாள். பின்னர் நீ வீடு வாங்குறதுல எனக்கு அவ்வளவு சந்தோஷம், எதிர்காலத்துல எந்த பிரச்சனையும் வந்துவிட கூடாது, யோசிச்சு முடிவெடு என ஐஸ் வைக்கிறான் கோபி. உடனே ராதிகா காபி எடுத்து வர உள்ளே போக, இவ ஏன் என்ன நம்ப மாட்டேங்கிறா, என டென்ஷன் ஆகிறான் கோபி.

publive-image

அடுத்ததாக, பாக்கியா எல்லோருக்கும் டிரஸ் வாங்கிட்டு வருகிறாள். எல்லோருக்கும் எடுத்துக் கொடுக்கையில், இனியா எனக்கு எங்க என கேட்க, உனக்கு நா வாங்குனா பிடிக்காதுல அதனால வாங்கல என்கிறாள் பாக்கியா. இத்துடன் இன்றைய எபிஷோடு நிறைவடைகிறது.

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Vijay Tv Bakiyalakshmi Serial Today Episode
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment