New Update
/tamil-ie/media/media_files/uploads/2021/09/barathikannamma-sep-27-epi.jpg)
Vijay TV barathikannamma serial today episode anjali bond with hema: ஹேமா பற்றிய உண்மையை தெரிந்துக்கொண்ட அஞ்சலி, பாரதியையும் கண்ணம்மாவையும் சேர்க்க ப்ளான் பண்ணும் சௌந்தர்யா, இன்றைய எபிஷோடில்…
விஜய் டிவியில் ஒளிப்பரப்பாகும் பாரதி கண்ணம்மா சீரியலில் இன்று என்ன நடந்தது என்பதைப் பார்ப்போம்.
இன்றைய எபிஷோடில்…
ஹேமா பற்றிய சந்தேகத்தை தயக்கத்துடன் சௌந்தர்யாவிடம் கேட்கிறாள் அஞ்சலி. கண்ணம்மாவை நினைச்சு கஷ்டமா இருக்கு, உண்மையை சொல்லுங்க ஹேமா யாரு, கண்ணம்மாவோட குழந்தையா என கேட்க, ஆமாம் என்கிறாள் சௌந்தர்யா. இதைக்கேட்டு அதிர்ச்சியும் ஆச்சரியமுமாகிறாள் அஞ்சலி. பின்னர் நடந்ததை எல்லாம் சொல்லி, பாரதியும் கண்ணம்மாவும் ஒண்ணு சேருவதற்கு தான் இப்படி செஞ்சேன் என்கிறாள் சௌந்தர்யா. கண்ணம்மாவை நினைத்து வருத்தப்பட்டாலும், நீங்க செஞ்சது சரி தான் என்கிறாள் அஞ்சலி. அப்போது அங்கு வரும் ஹேமாவை ஆசையாக கொஞ்சுகிறாள் அஞ்சலி.
அடுத்ததாக, பாரதியை டைவர்ஸ் பண்ணிடு என வெண்பா சொன்னதை பற்றி யோசித்துக் கொண்டிருக்கிறாள் கண்ணம்மா. அப்போது புருஷனா, குழந்தையா என யோசிக்கும், கண்ணம்மா டைவர்ஸ் செய்யலாம் என முடிவெடுக்கிறாள்.
அடுத்ததாக, பாரதியையும் கண்ணம்மாவையும் சேர்த்து வைக்க ஏதாவது செய்யணும் என அகில் சொல்ல, நிதானமாக தான் முடிவெடுக்கணும் என்கிறாள் சௌந்தர்யா. குழந்தைங்கள நினைச்சா ரொம்ப கஷ்டமா இருக்கு என அகில் சொல்ல, அது எனக்கும் கஷ்டமா தான் இருக்கு என்கிறாள் சௌந்தர்யா. அப்போது வேணுவும் அவசரப்பட்டு எதுவும் செய்யக்கூடாது என்கிறார். பின்னர் சௌந்தர்யா, பாரதியும் கண்ணம்மாவும் அடிக்கடி சந்திப்பதை உருவாக்குனா தான் அவங்க ஒண்ணு சேர வாய்ப்பிருக்கு என்கிறாள். அது சாத்தியமா என அகில் கேட்க, அவங்க காதலிச்சு கல்யாணம் பண்ணிக்கிட்டவங்க தானே, அவங்களுக்குள்ள திரும்பவும் அந்த காதல் வரும் என உறுதியுடன் சொல்கிறாள் சௌந்தர்யா.
அடுத்ததாக, நான் மாறிட்டேனா என அஞ்சலி கேட்க, கண்டிப்பா நீ நிறைய நல்லவளா மாறிட்ட என்கிறான் அகில். அப்போது ஹேமாவ பத்தி ஏன் என்கிட்ட சொல்லல என கேட்க, உன்கிட்ட மறைக்க கூடாதுனு சொல்லல நிறைய பேருக்கு தெரிய வேணாம்னு நினைச்சேன் என்கிறான் அகில். இருந்தாலும், சொல்லாததை நினைத்து அகிலிடம் வருத்தப்படுகிறாள் அஞ்சலி. அப்போது அங்கு ஹேமா வர, இருவரும் ஹேமாவை கொஞ்சுகிறார்கள். அப்போது அஞ்சலி ஹேமாவுக்கு கிஃப்ட் கொடுத்து ஆச்சரியப்படுத்துகிறாள். பின்னர் ஹேமாவை இனி என்னை அம்மானு கூப்பிடு என சொல்ல, ஆச்சரியாகும் ஹேமா கண்டிப்பா கூப்பிடுறேன் என்கிறாள். இத்துடன் இன்றைய எபிஷோடு நிறைவடைகிறது.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.