Advertisment

Vijay TV Serial; கண்ணம்மா குழந்தைகள் பற்றிய உண்மை… அதிர்ச்சியில் வெண்பா

Vijay TV barathikannamma serial today episode anjali console akil: அகிலனிடம் பாதி உண்மையை சொல்லும் அஞ்சலி, கண்ணம்மாவுக்கு உண்மை தெரிஞ்சா என்ன நடக்கும் என யோசிக்கும் சௌந்தர்யா, இன்றைய எபிஷோடில்…

author-image
WebDesk
New Update
Vijay TV Serial; கண்ணம்மா குழந்தைகள் பற்றிய உண்மை… அதிர்ச்சியில் வெண்பா

விஜய் டிவியில் ஒளிப்பரப்பாகும் பாரதி கண்ணம்மா சீரியலில் இன்று என்ன நடந்தது என்பதைப் பார்ப்போம்.

Advertisment

இன்றைய எபிஷோடில்…

கண்ணம்மா வந்து விசாரித்ததை சௌந்தர்யாவிடம் போனில் சொல்கிறாள் துளசி. கண்ணம்மாவிடம் பொய் சொன்னது வருத்தமாக இருக்கு எனவும் சொல்கிறாள். பின்னர் இதனை வேணுவிடம் சொல்ல, கண்ணம்மா புத்திசாலிதனமான பொண்ணு என பாராட்டுகிறார். அப்போது திடீரென ஹேமாவுடன் வருகிறான் பாரதி. என்ன விஷயம் என கேட்க, வேற விஷயத்தைச் சொல்லி சமாளிக்கிறாள் சௌந்தர்யா. பின்னர் பாரதி, ஹேமாவுக்கு எடுத்த டிரஸ்களை காட்டுகிறான். அப்போது ஹேமா, லட்சுமிக்கும் சேர்த்து டிரஸ் எடுத்திருக்கோம் என்று சொல்ல, வேணுவும் சௌந்தர்யாவும் சந்தோமாகிறார்கள். பின்னர் சௌந்தர்யா, நீயே லட்சுமிக்கிட்ட கொடுத்துடு என சொல்ல, பாரதி கோபமாக கிளம்புகிறான்.

அடுத்ததாக, ஏதோ தப்பா நடக்குது, போட்ட ப்ளான் எல்லாம் எப்படி சொதப்புது என யோசிக்கிறாள் வெண்பா. அப்போது துளசியை சௌந்தர்யா பாக்குறாங்கனா, கண்ணம்மா சம்பந்தமா ஏதோ ஒரு விஷயம் இருக்கு, அத கண்டுப்பிடிக்கணும் என்று முடிவெடுக்கிறாள்.

publive-image

அடுத்து, கண்ணம்மா மீண்டும் துளசியை பார்க்க வருகிறாள். கண்ணம்மா துளசியிடம் பேசிக்கொண்டிருக்கும் போது, அங்கு வரும் வெண்பா, அவர்கள் பேசுவதை மறைந்திருந்து கேட்கிறாள். அப்போது கண்ணம்மா, இவ்வளவு நாளா ஹேமா, வெண்பாவோட குழந்தைனு நினைச்சிட்டு இருந்தேன். இப்ப என்னோட இன்னொரு குழந்தைனு தோணுது என்கிறாள். அப்போது வெண்பா, ஹேமா உன்னோட குழந்தை தான், உனக்கு இப்பதான் சந்தேகம் வருதா என மனதுக்குள் நினைக்கிறாள். உங்க அத்தை இரண்டு குழந்தைகளில் ஒரு குழந்தையை எடுத்துட்டு போயிருப்பாங்கணு தோணுதா என துளசி கேட்க, தெரியலை ஆனா சந்தேகமா இருக்கு என்கிறாள் கண்ணம்மா.

அப்போது தான் வெண்பாவுக்கு இரட்டை குழந்தைகள் விஷயம் தெரியவர அதிர்ச்சியாகிறாள். கண்ணம்மாவோ அத்தை தான் இன்னொரு குழந்தைய எடுத்துட்டு போயிருக்கனும் என உறுதியாக நம்புகிறாள். ஆனால் துளசியோ சௌந்தர்யா அப்படி பண்ணமாட்டாங்க என சமாளிக்கிறாள். சௌந்தர்யா எனக்கு தெரியாமா நிறைய வேலை பார்த்துருக்காங்க என ஆச்சரியமாகிறாள் வெண்பா.

அடுத்து, அஞ்சலிக்கு ஐஸ்கிரீம் வாங்கிக் கொடுக்கும் அகிலை வருத்தமாக பார்க்கிறாள். என்ன பிரச்சனை என அகில் கேட்க, உண்மையை சொல்வதா வேண்டாமா என யோசிக்கும் அஞ்சலி, கைராசி பார்ப்பவங்க குழந்தைக்கு ஆபத்துனு சொல்றாங்க என அழுகிறாள். அதையெல்லாம் நம்பாத என ஆறுதல் படுத்துகிறான் அகில்.

கண்ணம்மாவுக்கு செய்ததை எல்லாம் நினைத்தும் வருத்தப்படுகிறாள் சௌந்தர்யா. எல்லாம் நல்லதுக்காக தானே செஞ்ச என வேணு, சௌந்தர்யாவை ஆறுதல் படுத்துகிறார். சௌந்தர்யா சமாதானம் அடையாமல் அழ, எல்லா உண்மையையும் கண்ணம்மாகிட்ட சொல்லிடு என்கிறார் வேணு. இப்ப சொன்ன கண்ணம்மா என்னை என்ன நினைப்பா, நான் துரோகம் பண்ணிட்டதா சொல்லுவா என அழுகிறாள். கண்ணம்மாவுக்கு சந்தேகம் வந்துருச்சு, அத தெரிஞ்சுக்க அவ நிறைய யோசிப்பா, அவளுக்கு உண்மை தெரிஞ்சிட்ட என்ன செய்வா, ஹேமாவ கூட்டிட்டு போயிடுவாளா, பாரதி ஒத்துக்குவானா என எல்லாத்தையும் நினைத்து அழுகிறாள் சௌந்தர்யா. இத்துடன் இன்றைய எபிஷோடு நிறைவடைகிறது.

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Vijay Tv Barathi Kannamma Serial Today Episode
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment