New Update
/tamil-ie/media/media_files/uploads/2021/10/barathikannamma-oct-6-epi.jpg)
Vijay TV barathikannamma serial today episode Anjali doubts venba: டைவர்ஸ் பண்ணலாம் என முடிவெடுக்கும் கண்ணம்மா, சந்தோஷத்தில் ப்ரண்ட்ஸ்க்கு பார்ட்டி கொடுக்கும் வெண்பா, இன்றைய எபிஷோடில்…
விஜய் டிவியில் ஒளிப்பரப்பாகும் பாரதி கண்ணம்மா சீரியலில் இன்று என்ன நடந்தது என்பதைப் பார்ப்போம்.
இன்றைய எபிஷோடில்…
உன் பொண்ணு உனக்கு கிடைச்சுட்ட உனக்கு டைவர்ஸ் வேண்டாம் தானே என மனசாட்சி கேட்க, தயங்கி நிற்கிறாள் கண்ணம்மா. குழந்தைக்காக டைவர்ஸ் பண்ணப்போறேன், இந்த 8 வருஷம் தனியா தானே வாழ்றேன் என கண்ணம்மா சொல்ல, டைவர்ஸ்க்கு போகமா உன் குழந்தை உனக்கு கிடைக்க வழியை யோசி, உன் மாமியார்கிட்ட சொன்ன, அவங்க வெண்பாகிட்ட இருந்து மீட்டு கொடுத்திட போறாங்க என மனசாட்சி சொல்கிறாள். இல்லை அப்படி ரிஸ்க் எடுத்து என் குழந்தைக்கு ஏதாவது ஆச்சுனா என கண்ணம்மா கேட்க, அப்ப பாரதிகிட்ட சொல்லு என்கிறது மனசாட்சி. இல்லை கண்டிப்பா அவரு கேட்கமாட்டாரு என கண்ணம்மா சொல்ல, நீதான் டைவர்ஸ் பண்ண நினைக்குற, பாரதி இல்ல, அப்புறம் உன் குழந்தைங்க அப்ப எங்கனு கேட்டா என்ன சொல்லுவா என மனசாட்சி கேட்கிறது. எனக்கு இதவிட்ட வேற வழி இல்லை என்கிறாள் கண்ணம்மா. பின்னர் மனசாட்சி பாரதியை டைவர்ஸ் பண்றது பத்தி நல்லா யோசி என சொல்லிவிட்டு மறைகிறது மனசாட்சி.
அடுத்ததாக, வெண்பா கொடுத்த மாத்திரைகள் மீது அஞ்சலிக்கு சந்தேகம் வர, மாத்திரையை நிறுத்திடலாம் என முடிவெடுக்கிறாள். அப்போது ஹேமா, அகில் கொடுத்ததாக மாத்திரை கொண்டு வந்து கொடுக்கிறாள். அப்போது ஹேமாவிடம் இந்த மாத்திரை போட்டா நெஞ்சுவலி வருது என சொல்ல, அப்புறம் ஏன் மாத்திரை போடுறீங்க என ஹேமா கேட்க, மாத்திரை சாப்பிடுவதா வேண்டாமா என யோசிக்கும் அஞ்சலி மாத்திரை வேண்டாம் என முடிவெடுக்கிறாள்.
பின்னர் அஞ்சலிக்கு போன் செய்யும் வெண்பா, மாத்திரை எல்லாம் சரியா சாப்பிடுறியா என கேட்க, சந்தேகமாகிறாள் அஞ்சலி. வெண்பா மாத்திரை சாப்பிட்டா எதுவும் தொந்தரவு இருக்கா, மயக்கம் வருதா என கேட்க, அதெல்லாம் ஒண்ணும் இல்லை என்கிறாள். மாத்திரை சரியா வேலை செய்யலையோ என சந்தேகமாகும் வெண்பா, மாத்திரை முடிஞ்சா சொல்லு நான் வாங்கி தர்றேன் என சொல்ல, உனக்கு ஏன் இவ்வளவு அக்கறை, நானே பார்த்துக்கிறேன் என போனை வைக்கிறாள் அஞ்சலி. அஞ்சலி மீது சந்தேகம் கொள்கிறாள் வெண்பா.
அடுத்ததாக, ஹேமாவுடன் பாரதி விளையாடிக் கொண்டிருப்பதைப் பார்க்கும் சௌந்தர்யா சந்தோஷமாகிறாள். பின்னர் பாரதி ஏதாவது தப்பா முடிவெடுத்துட்டா என்ன பண்றது என சௌந்தர்யா கேட்க, இப்ப எதுவும் வேணாம் என தடுக்கிறார் வேணு.
அடுத்ததாக, ப்ரண்ட்ஸ்க்கு பார்ட்டி கொடுக்கிறாள் வெண்பா. எல்லாரும் என்ன விஷயம் என கேட்க, சர்ப்ரைஸ் என்கிறாள்.
அடுத்ததாக, பாரதியுடன் ஒன்றாக நிற்கும் புகைப்படத்தை எடுத்து பார்த்து, பழசையெல்லாம் நினைத்துப் பார்க்கும் கண்ணம்மா டைவர்ஸ் பண்ணிடலாம் என முடிவெடுக்கிறாள். பின்னர் புகைப்படத்தை திருப்பி வைக்கும்போது, துணிகளுக்குள் இருந்து பணம் விழுகிறது. அதைப்பார்த்து திகைக்கிறாள் கண்ணம்மா. இத்துடன் இன்றைய எபிஷோடு நிறைவடைகிறது.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.