Vijay TV Serial; பாரதிக்கும் வெண்பாவுக்கும் கல்யாணம் ஆகல… உண்மையை உடைத்த அஞ்சலி

Vijay TV barathikannamma serial today episode anjali expose venba: ஹேமா தான் என்னோட இன்னொரு குழந்தையா? சந்தேகப்படும் கண்ணம்மா, பாரதிக்கும் வெண்பாவுக்கும் கல்யாணம் ஆகலை, உண்மையை உடைத்த அஞ்சலி, இன்றைய எபிஷோடில்…

Vijay TV barathikannamma serial today episode anjali expose venba: ஹேமா தான் என்னோட இன்னொரு குழந்தையா? சந்தேகப்படும் கண்ணம்மா, பாரதிக்கும் வெண்பாவுக்கும் கல்யாணம் ஆகலை, உண்மையை உடைத்த அஞ்சலி, இன்றைய எபிஷோடில்…

author-image
WebDesk
New Update
Vijay TV Serial; பாரதிக்கும் வெண்பாவுக்கும் கல்யாணம் ஆகல… உண்மையை உடைத்த அஞ்சலி

விஜய் டிவியில் ஒளிப்பரப்பாகும் பாரதி கண்ணம்மா சீரியலில் இன்று என்ன நடந்தது என்பதைப் பார்ப்போம்.

இன்றைய எபிஷோடில்…

Advertisment

அஞ்சலி சீமந்தத்தில் கண்ணம்மாவை பார்த்து பாரதி முறைக்க, அப்போது சௌந்தர்யா மாவு பிஸினஸ் பற்றி கண்ணம்மாவிடம் கேட்கிறாள் சௌந்தர்யா. உடனே பாரதி, வெண்பா தனது மனைவி என கண்ணமமாவிடம் காட்டிக் கொள்ளும் விதமாக வீட்டை நல்லா பூட்டிவிட்டாயா என வெண்பாவிடம் கேட்கிறான். இதைக்கேட்டு எல்லோரும் கடுப்பாக, உனக்கு இந்த புடவை ரொம்ப நல்லா இருக்கு என வெண்பாவிடம் சொல்லி, கண்ணம்மாவை வெறுப்பேற்றுகிறான் பாரதி. வெண்பாவும் பாரதியும் கணவன் மனைவியாக பேசிகொள்வதைப் பார்க்கும் கண்ணம்மா எரிச்சலாகி அங்கிருந்து கிளம்புகிறாள்.

publive-image

அடுத்து, லட்சுமியும் ஹேமாவும் ஜாலியாக பேசிக்கொண்டிருக்க, அங்கு வரும் அகில் அவர்களுடன் விளையாடுகிறான். அடுத்ததாக கண்ணம்மா, வெண்பாவிடம் எல்லா பொறுப்பையும் சௌந்தர்யா ஒப்படைத்து விட்டதாக தனியே வந்து புலம்புகிறாள். அப்போது ஹேமா விளையாடிக் கொண்டிருப்பதைப் பார்க்கும் கண்ணம்மா, என்னோட இன்னொரு குழந்தை ஹேமாவா என சந்தேகப்படுகிறாள். சௌந்தர்யாவிடம் இதைப்பற்றி நிச்சயம் கேட்க வேண்டும் என கண்ணம்மா முடிவெடுக்கும்போது அங்கு வருகிறாள் சௌந்தர்யா. கண்ணம்மா நிற்பதைப் பார்த்ததும் சௌந்தர்யா, உங்க சித்தி கூப்பிடுறாங்க என பேச்சை மாற்றுகிறாள். கண்ணம்மா ஒரு முக்கியமான விஷயம் பேசணும் என சௌந்தர்யாவிடம் சொல்ல, உள்ளே என்னை கூப்பிடுறாங்க என பொய்யாக சொல்லிவிட்டு ஓடுகிறாள். ஒருவேளை ஹேமா, வெண்பாவோட குழந்தையா இருந்தா என்ன செய்வது என யோசிக்கிறாள் கண்ணம்மா.

Advertisment
Advertisements

publive-image

அடுத்து, கண்ணம்மாவை தவிர்ப்பதற்காக அஞ்சலி சீமந்தம் நடக்கும் இடத்தில் நடுவில் போய் நின்றுக் கொள்கிறாள் சௌந்தர்யா. கண்ணம்மாவை கூட்டி வர சொல்லி லட்சுமியிடம் வேணு சொல்ல, பாரதி இப்போதும் சமையல் அம்மாவா என நக்கலாக கேட்கிறான். இல்லை எப்போதும் அம்மா என பதில் சொல்கிறாள் லட்சுமி. பின்னர் பாரதி வெண்பாவுடன் சேர்ந்து செல்ஃபி எடுக்கிறான். இதைப்பார்த்து எல்லோரும் எரிச்சலாகிறார்கள். அப்போது ஒருவர், அஞ்சலி உனக்கு பெண் குழந்தை வேணுமா? ஆண் குழந்தை வேணுமா? என்று கேட்க, அதான் வீட்டில் ஏற்கனவே மகாலட்சுமி மாதிரி ஹேமா இருக்காளே, ஆண் குழந்தை தான் வேணும் என்கிறாள் வெண்பா. அதைக்கேட்டு அகில் கோபப்பட முயல, அவனை சமாதானப்படுத்துகிறாள் சௌந்தர்யா. உடனே கண்ணம்மாவும் அங்கிருந்து வெளியே வருகிறாள்.

publive-image

அப்போது, வெண்பாவுக்கும் பாரதிக்கும் திருமணம் ஆகாததை வெளிப்படுத்த திட்டமிடுகிறாள் அஞ்சலி. கண்ணம்மாவிடம் வந்து, அந்த வெண்பா எதுக்கு இங்க வந்தாணு தெரியலை என சொல்லி கண்ணம்மாவை சமாதானப்படுத்துகிறார் சண்முகம். பின்னர் அஞ்சலி சீமந்தம் நடக்கிறது. எல்லோரும் வந்து அஞ்சலியை வாழ்த்துகின்றனர். அப்போது வெண்பா, சீமந்தம் நடக்குதா சீக்கிரமே இவளுக்கு காரியம் நடக்க போகுது என மனதுக்குள் நினைக்கிறாள். பின்னர் சௌந்தர்யா, பாரதியை கூப்பிட, பாரதி கூட நாமும் சேர்ந்து போன எல்லோரும் கணவன் மனைவினு நினைச்சுருவாங்க, இதான் சரியான நேரம் என பாரதி கூட செல்கிறாள் வெண்பா. இதைப்பார்த்து கடுப்பாகும் அஞ்சலி, சீமந்தத்தில் கல்யாணம் ஆகாதவங்க ஆசீர்வாதம் பண்ணலாமா என பாக்கியத்திடம் கேட்க, பண்ணலாம் ஏன் இப்ப கேட்குற எனக் கேட்கிறாள் பாக்கியா. வெண்பாவுக்கு இன்னும் கல்யாணம் ஆகலையே என உண்மையை உடைக்கிறாள் அஞ்சலி. இத்துடன் இன்றைய எபிஷோடு நிறைவடைகிறது.

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Barathi Kannamma Serial Today Episode Vijay Tv

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: