Vijay TV Serial: மாமியார் சொன்னா ஒத்துக்கணும்... பிடிவாத கண்ணம்மாவை வழிக்கு கொண்டுவந்த சௌந்தர்யா!

Vijay TV barathikannamma serial today episode anjali secret letter to akhil: கண்ணம்மா வீட்டில் ஏசியை மாட்ட போராடும் சௌந்தர்யா, அகிலுக்கு ரகசியாக லெட்டர் எழுதும் அஞ்சலி, இன்றைய எபிஷோடில்…

Vijay TV barathikannamma serial today episode anjali secret letter to akhil: கண்ணம்மா வீட்டில் ஏசியை மாட்ட போராடும் சௌந்தர்யா, அகிலுக்கு ரகசியாக லெட்டர் எழுதும் அஞ்சலி, இன்றைய எபிஷோடில்…

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Vijay TV Serial: மாமியார் சொன்னா ஒத்துக்கணும்... பிடிவாத கண்ணம்மாவை வழிக்கு கொண்டுவந்த சௌந்தர்யா!

விஜய் டிவியில் ஒளிப்பரப்பாகும் பாரதி கண்ணம்மா சீரியலில் இன்று என்ன நடந்தது என்பதைப் பார்ப்போம்.

இன்றைய எபிஷோடில்…

Advertisment

என்னோடு இருந்ததைவிட, கண்ணம்மா வீட்டில் ஹேமா சந்தோஷமாக இருப்பதாக நினைக்கிறான் பாரதி. ஹேமா அங்க ஏசி இல்லாமல் கஷ்டப்படுவாளே, என நினைக்கும் பாரதி, தன்னுடைய ஏசியை ஆஃப் செய்கிறான். அப்போது அங்கு வரும் சௌந்தர்யா, ஏன் ஏசி போடலை என கேட்க, ஹேமா அங்க ஏசி இல்லாம கஷ்டப்படுவா அதான் எனக்கும் வேண்டாம் என சொல்கிறான் பாரதி.

publive-image

அடுத்த நாள், கண்ணம்மா வீட்டுக்கு வருகிறாள் சௌந்தர்யா. அவளைப் பார்த்ததும் சந்தோஷப்படும் ஹேமாவிடம், காரில் போய் ஏசி போட்டு கொஞ்ச நேரம் இரு என போகச் சொல்கிறாள். பின்னர் சௌந்தர்யா தான் வாங்கி வந்த ஏசியை மாட்டச் சொல்ல, இதெல்லாம் எதுக்கு என தடுக்கிறாள் கண்ணம்மா. இங்க யாருக்கும் ஏசி வேண்டாம், ஹேமாவும் ஏசி இல்லாமல் இருப்பா என கண்ணம்மா சொல்ல, ஹேமா ஏசியில் இருக்குறதுக்காக காருக்கு போயிருக்காள், உன்கூட இருக்குறதுக்காக ஏசி வேண்டாம்னு ஹேமா சொல்லிருக்கா, என சொல்லி கண்ணம்மாவை சம்மதிக்க வைக்கிறாள் சௌந்தர்யா.

Advertisment
Advertisements

publive-image

கண்ணம்மா மீண்டும், எனக்கு இப்படி வாங்கிக்கிறது புடிக்கல என சொல்ல, நீ வேணா என்னை யாரோனு நினைக்கலாம், ஆனா என்னைக்கும் நீ என் மருமகள், உனக்கு செய்ய நா யாருக்கிட்ட கேட்கனும், நா இத ஹேமாவுக்காக வாங்கல, லட்சுமிக்காக வாங்கினேன் என சொல்கிறாள். இது சரியா வராது, உங்க பிள்ளை ஏதாவது சொல்வாரு என சொல்ல, பாரதி மாறிக்கிட்டு வர்றான் என சமாதானம் செய்கிறாள். உடனே கண்ணம்மா, என் மேல இருக்குற தப்பான பார்வை மாறிடுச்சா இல்ல, லட்சுமியை அவரு புள்ளைய ஏத்துக்கிட்டாரா? ஹேமாவுக்காக சுயநலமா நடந்துக்குறாரு என வெறுப்பாக சொல்கிறாள் கண்ணம்மா.

அப்போது சௌந்தர்யா, பாரதி மாறிட்டான், ஹேமாவுக்காக வீட்டில் எல்லா ஏசியையும் ஆஃப் பண்ணிட்டான் என சொல்ல, அவர் என்ன லூசா என கேட்கிறாள் கண்ணம்மா. சௌந்தர்யா சிரித்துக் கொண்டே ஏசியை மாட்ட சொல்கிறாள். கண்ணம்மா தடுக்க, உன் சுயமரியாதையை மாமியாருக்கிட்ட காட்டாதே, பாரதி நிச்சயமா மாறிட்டான் என சொல்லி சமாளிக்கிறாள் சௌந்தர்யா.

publive-image

அடுத்து, குழந்தைப் பிறப்பில் தான் இறந்து விடுவதை அகிலிடம் சொல்ல முடியாமல், டைரியில் ரகசியமாக அகிலுக்கு லெட்டர் எழுதுகிறாள் அஞ்சலி. அதன்பின், அங்கு வரும் அகில், அஞ்சலி வேறு ஒரு கல்யாணம் பண்ணிக்க கொள்ள சொன்னதை நினைத்து கோபமாக இருக்கிறான். பின்னர் அகிலை சமாதானம் செய்கிறாள் அஞ்சலி. ஆனால் அகில் அதை நினைத்து, அஞ்சலியிடம் கோபமாக பேசிவிட்டு, டென்ஷனாக கிளம்புகிறான்.

அடுத்ததாக, வீடியோ கேம்ஸ் விளையாடுவது நல்லது இல்லை, அப்பா விளையாட விட மாட்டாரு என ஹேமா சொல்ல, உங்க அப்பா ரொம்ப கண்டிப்பானவரா என கண்ணம்மா கேட்க, எங்க அப்பா ரொம்ப நல்லவரு என்கிறாள். உங்க அப்பாவ உனக்கு எவ்வளவு பிடிக்கும் என கேட்க, எனக்கு ரொம்ப பிடிக்கும் என கைகளை விரித்து சொல்கிறாள் ஹேமா. இத்துடன் இன்றைய எபிஷோடு நிறைவடைகிறது.

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Barathi Kannamma Serial Today Episode Vijay Tv

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: