New Update
/tamil-ie/media/media_files/uploads/2021/09/barathikannamma-sep-22-epi.jpg)
Vijay TV barathikannamma serial today episode barathi change his mind: பாரதியைக் குழப்பும் வெண்பா, வெண்பா கொடுத்த மாத்திரைகளை சாப்பிடவிடாமல் தடுக்கும் பல்லி, குடும்பத்தினரிடம் மனசு விட்டும் பேசும் பாரதி, இன்றைய எபிஷோடில்…
விஜய் டிவியில் ஒளிப்பரப்பாகும் பாரதி கண்ணம்மா சீரியலில் இன்று என்ன நடந்தது என்பதைப் பார்ப்போம்.
இன்றைய எபிஷோடில்…
கண்ணம்மாவோட சித்திக்கூட கண்ணம்மா பக்கம் நியாயம் இருப்பதாக சொல்றாங்க என பாரதி சொல்ல, பாரதியோட இந்த எண்ணத்தை மாத்தணும் என யோசிக்கிறாள் வெண்பா. பின்னர், பொண்டாட்டி துரோகம் பண்ணதுக்கு அப்புறமும், வேற ஒருத்தனுக்கு குழந்தை பெத்ததுக்கு அப்புறமும் அவ பக்கம் நியாயம் இருக்குனு பேசுறியே நீ எவ்வளவு நல்லவன் என கேட்கிறாள் வெண்பா. மேலும், உனக்கு இப்ப இந்த தனிமை கஷ்டமா இருக்கலாம், ஆனா உண்மை ஒண்ணு இருக்கு, எல்லாரும் கண்ணம்மாவ நம்புவாங்க, ஆனா கண்ணம்மா பீச்சுல வேற ஒருத்தன் கூட இருந்தத நம்ம தானே பார்த்தோம் என நடந்ததையெல்லாம் கூறி பாரதியை குழப்புகிறாள். மேலும் உனக்கு குழந்தை பிறப்புக்கான சக்தி இல்லைனு உனக்கு தெரியுமே என வெண்பா சொல்ல, டென்ஷனாகிறான் பாரதி. கண்ணம்மா செய்த துரோகத்தை மறந்துட்டு ஏத்துக்க தயாராகிட்ட, உன் இஷ்டம் என்கிறாள் வெண்பா. உடனே பாரதி அவ செஞ்சத என்னைக்கும் மறக்க முடியாது என்கிறான்.
அடுத்ததாக, கோவிலில் பரிகாரம் செய்துவிட்டு சோர்வாக வரும் அஞ்சலி மற்றும் அகிலிடம், என்ன ஆச்சு என கேட்கிறாள் சௌந்தர்யா. அஞ்சலி பரிகாரம் செய்ததை சொல்ல, அதிர்ச்சியாகும் சௌந்தர்யா, என்கிட்ட ஏன் சொல்லல என கோபமாகிறாள். பின்னர் அகில் நிறைய மாறிவிட்டதை ஆச்சரியமாக பார்க்கிறாள் சௌந்தர்யா. அடுத்து அஞ்சலி சாரி சொல்ல, அகில் நம்ம குழந்தைக்காக தானே செஞ்சேன் என்கிறேன். பின்னர் அஞ்சலி, வெண்பா கொடுத்த மாத்திரைகளை சாப்பிட போக, பல்லி விழுந்து தடுக்கிறது. பல்லி விழுந்ததற்கான பலன், அபாயம் இருப்பதாக காலண்டரில் போட்டிருக்க, மாத்திரைகளை சாப்பிடுவதா வேண்டாமா என யோசிக்கிறாள். அப்போது அகில், நீ நிறைய பயந்து இருக்க, கண்ணம்மா வீட்டில் இரண்டு நாள் இருந்துட்டு வா என்று சொல்கிறான்.
அப்போது அங்கு வரும் பாரதி, எல்லோரையும் அழைத்து ஒரு முக்கியமான விஷயம் சொல்லப்போவதாக சொல்கிறான். பின்னர், கண்ணம்மாவோட கல்யாணத்துக்குப் பின் என்னோட வாழ்க்கையில் வெறுமை தான் மிஞ்சிருக்கு. கண்ணம்மா தப்பு பண்ணிருக்கலாம். ஆனா அவக்கிட்ட நிறைய நல்ல விஷயம் இருக்கு. நீங்களும் அவ பக்கம் தான் இருக்கீங்க, ஏன் அவ பக்கம் உண்மை இருக்க கூடாது என பாரதி சொல்ல, எல்லோரும் ஆச்சரியமாகிறார்கள். பின்னர் பாரதி, நான் தப்பு பண்ணிருக்கலாம், அல்லது நான் நம்புறது பொய்யாக்கூட இருக்கலாம், என்னோட மனசாட்சி என்னை உறுத்துது என அழுதவாறே சொல்கிறான். நடந்ததெல்லாம் இருக்கட்டும், இருக்குற வாழ்க்கையை அவ கூட சேர்ந்து வாழலாம்னு தோணுது, என்னோட வாழ்க்கையில் நானே மண் அள்ளி போட்டுக்கிட்டேன், தப்பு பண்ணிட்டேன் என அழுகிறான். அவனை எல்லோரும் ஆறுதல் படுத்துகிறார்கள். இத்துடன் இன்றைய எபிஷோடு நிறைவடைகிறது.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.