New Update
/tamil-ie/media/media_files/uploads/2021/08/barathikannamma-aug-24-epi.jpg)
Vijay TV barathikannamma serial today episode barathi enquires lakshmi: கண்ணம்மாவையும் லட்சுமியையும் நினைத்து கவலைப்படும் சண்முகம், லட்சுமியோட அப்பா யாருனு தெரிஞ்சிக்க முயலும் பாரதி, இன்றைய எபிஷோடில்…
விஜய் டிவியில் ஒளிப்பரப்பாகும் பாரதி கண்ணம்மா சீரியலில் இன்று என்ன நடந்தது என்பதைப் பார்ப்போம்.
இன்றைய எபிஷோடில்…
நான் தான் உன்னோட தாத்தா என கண்ணம்மாவின் அப்பா சொல்ல, சந்தேகத்துடன் எப்படி என கேட்கிறாள் லட்சுமி. அஞ்சலியை நீ சித்தினு கூப்பிடுறதால என்னை இனி தாத்தானு கூப்பிடலாம் என்று சமாளிக்கிறார் கண்ணம்மாவின் அப்பா. கண்ணம்மாவையும் லட்சுமியையும் நினைத்து கவலைப்படும் கண்ணம்மாவின் அப்பா, லட்சுமியை கொஞ்சிவிட்டு கிளம்புகிறார். லட்சுமி தாத்தா என கூப்பிட்டு அவரை சந்தோஷப்படுத்துகிறாள்.
அடுத்து, அஞ்சலியை பார்க்க வரும் வெண்பா, எப்படி இருக்க என கேட்கிறாள். அடிக்கடி நெஞ்சு வலி வருவதாக கூறும் அஞ்சலி, வீட்டில் யார்கிட்டயும் இத சொல்ல வேண்டாம் என கேட்டுக் கொள்கிறாள். சலிப்புடன் சரி என சொல்லும் வெண்பா, பாரதி எழுதியதாக மருந்து சீட்டை கொடுக்கிறாள். பாரதிக்கு விஷயம் தெரியுமா என பதற்றமாகும் அஞ்சலியிடம், பாரதிக்கு எதுவும் தெரியாது, நீ இந்த மருந்துகளை தவறாமல் எடுத்துக்கோ என்று சொல்கிறாள் வெண்பா.
அடுத்து, ஏன் யாருக்கிட்டேயும் என் அம்மா கண்ணம்மானு சொல்ல வேணாம்னு சொன்னே, இப்ப அதனால் உன்ன பிரிஞ்சு இருக்கேன் என கவலைப்படுகிறாள் லட்சுமி. மேலும் சீக்கிரம் என்ன வந்து கூட்டிட்டு போ என மனதுக்குள் அழுகிறாள் லட்சுமி.
அடுத்து, கண்ணம்மாவின் அப்பா சண்முகத்தை திட்டிக் கொண்டிருக்கிறாள் பாக்கியா. கண்ணம்மாவை நினைத்து கவலைப்படும் சண்முகத்திடம், உன் பொண்ணு தலையெழுத்து அது, அஞ்சலிக்கூட அப்ப சண்டை போட்டதால்தான் இப்ப கண்ணம்மா கஷ்டப்படுறா என்று சொல்கிறாள் பாக்கியா. பின்னர் லட்சுமியை நினைத்து சண்முகம் கவலைப்பட்டு பேச, பாரதிக்கிட்ட எல்லா உண்மையையும் சொல்ல வேண்டியது தானே என கேட்கிறாள் பாக்கியா. அது ரொம்ப கஷ்டம், கண்ணம்மாவ தப்பா நினைச்ச மாதிரி, லட்சுமியை தப்பா நினைச்சிட்ட கஷ்டமாயிடும் என்று சண்முகம் சொல்ல, நடக்குறது நடக்கட்டும் என ஆறுதல் சொல்கிறாள் பாக்கியா.
கண்ணம்மா ஏன் லட்சுமி என்னோட பொண்ணு என ஒத்துக்க மாட்டேங்கிறா என யோசிக்கிறான் பாரதி. அப்போது அங்கு வரும் லட்சுமியிடம், திட்டுனதுக்காக மன்னிப்பு கேட்கிறான். பின்னர் லட்சுமி, ஏன் எல்லார்கிட்டயும் கோபம நடந்துக்கிறீங்க என கேட்க, இனி கோபபட மாட்டேன் என்று உறுதியளிக்கிறான் பாரதி. அப்போது, லட்சுமி ஹேமாவோட அம்மா யாரு, அவங்க எங்க, அவங்களுக்கு என்ன ஆச்சு என்று கேட்கிறாள். பதற்றமாகும் பாரதி, அத விடு உன்னோட அப்பா யாரு? இதுவரைக்கும் அவர பார்த்திருக்கியா? என கேட்கிறான். அதற்கு பார்த்ததே இல்லை என லட்சுமி சொல்கிறாள். மேலும், பிறந்ததிலிருந்து இதுவரைக்கும் ஒரு தடவை கூட எங்க அப்பாவ பார்த்ததில்லை, என்று சொல்கிறாள். உடனே பாரதி, உங்க அம்மாகிட்ட அப்பா பார்க்கணும்னு கேக்கலையா என கேட்க, உங்க அப்பா துபாய்ல இருக்காரு, வர்றப்ப பார்த்துக்கோனு சொல்வாங்க, இதுவரை போன்ல கூட பேசினது இல்லை என்று சொல்கிறாள் லட்சுமி. பாரதி உடனே, அப்பா இல்லாத புள்ளைக்கு என்னை அப்பாவாக்க கண்ணம்மா டிரை பண்றாளா என நினைக்கும் பாரதி, எத்தனை நாளைக்கு மறைக்குறானு பார்ப்போம் என மனதுக்குள் நினைக்கிறான். இத்துடன் இன்றைய எபிஷோடு நிறைவடைகிறது.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.