New Update
/tamil-ie/media/media_files/uploads/2021/09/barathikannamma-sep-18-epi.jpg)
Vijay TV barathikannamma serial today episode Barathi gets furious: கண்ணம்மாவை பழிவாங்கும் வெண்பா, அகிலை கோவில் பரிகாரம் செய்ய சம்மதிக்க வைக்கும் அஞ்சலி, இன்றைய எபிஷோடில்…
விஜய் டிவியில் ஒளிப்பரப்பாகும் பாரதி கண்ணம்மா சீரியலில் இன்று என்ன நடந்தது என்பதைப் பார்ப்போம்.
இன்றைய எபிஷோடில்…
கண்ணம்மா என்கிட்ட வசமா மாட்டிகிட்டா என சந்தோஷமாக சொல்கிறாள் வெண்பா. எப்படி என சாந்தி கேட்க, அவளோட இரட்டை குழந்தைகளை பத்தி தெரியும்ணு சொன்னேன், அப்படி கெஞ்ச ஆரம்பிச்சிட்ட என்கிறாள் வெண்பா. அவளை இத வச்சு நல்லா பழிவாங்கணும் என திட்டமிடுகிறாள் வெண்பா.
அடுத்து, கண்ணம்மா வீட்டில் எடுத்த போட்டோக்களை பாரதியிடம் காட்டுகிறாள் ஹேமா. அதைப்பார்த்து வேணுவும் செளந்தர்யாவும் அதிர்ச்சியாகிறார்கள். பின்னர் பாரதி, இருவரிடம் கோபப்பட, உடனே சௌந்தர்யா, கண்ணம்மா என் மருமகள், லட்சுமி என் பேத்தி தான் என்கிறாள். லட்சுமி எப்படி உங்க பேத்தி என பாரதி கேட்க, வேணு பழசையெல்லாம் இப்ப பேச வேண்டாம் என தடுக்கிறார். பின்னர் பாரதி, கண்ணம்மாவ இனி நீங்க பார்க்க கூடாது என சொல்ல, கண்ணம்மா பாவம்டா என்கிறாள் சௌந்தர்யா. உடனே பாரதி அவ பாவம்னா, நான் பாவம் இல்லையா என கேட்கிறான். மேலும், வெண்பாவுக்கு போன் செய்து, வீட்டுக்கு வா என்கிறான். வெண்பாவும் சந்தோஷமாக வருகிறாள்.
வெண்பாவைப் பார்த்து டென்ஷனாகிறார்கள் வேணுவும், செளந்தர்யாவும். அப்போது பாரதி, வெண்பாவை சமைத்து தரச் சொல்கிறான். பின்னர் பாரதியும் வெண்பாவும் ஜாலியாக சமைப்பதைப் பார்த்து கடுப்பாகிறார்கள் வேணுவும் சௌந்தர்யாவும். அப்போது எதுக்காக என்னை திடீர்னு கூப்பிட்டு சமைக்க சொல்ற என கேட்க, எனக்கு புடிச்சவங்க கையால் சாப்பிடணும்னு தோணுச்சு என்கிறான். வெண்பாவும் உனக்கு எப்போதும் சமைத்து தர தயார் என்கிறாள். பாரதி செய்வதையெல்லாம் பார்த்து செம சந்தோஷமாகிறாள் வெண்பா. பின்னர், பாரதிக்கு சாப்பாடு பரிமாறிவிட்டு கிளம்புகிறாள் வெண்பா. அவள் போனப் பின், நீ செய்யுறது சரியா என சௌந்தர்யா கேட்க, நீங்க செஞ்சது மட்டும் சரியா என்கிறான். மேலும், வெண்பாவ நான் எப்ப வேணாலும் கல்யாணம் செய்துக்குவேன் என சொல்லிவிட்டு செல்கிறான்.
அடுத்து, இரண்டாவது குழந்தையை பற்றி நினைத்து அழுகிறாள் கண்ணம்மா. இங்கு அஞ்சலியை அகில் வெளியே கூப்பிட, வேணாம் என கோபமாக சொல்கிறாள். ஏன் கோபப்படுற என அகில் கேட்க, கோவிலில் பரிகாரம் செய்ய கூட்டிட்டு போ என்கிறாள் அஞ்சலி. அகில் தயங்க, அஞ்சலி வற்புறுத்தி சம்மதிக்க வைக்கிறாள். இத்துடன் இன்றைய எபிஷோடு நிறைவடைகிறது.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.