New Update
/tamil-ie/media/media_files/uploads/2021/09/barathikannamma-sep-7-epi.jpg)
Vijay TV barathikannamma serial today episode barathi sits with kannamma: ஹேமா தத்து எடுத்த குழந்தை என சொல்லும் சௌந்தர்யா, நம்ப மறுக்கும் கண்ணம்மா, மீண்டும் வெண்பாவை வெறுப்பேற்றும் அஞ்சலி, இன்றைய எபிஷோடில்…
விஜய் டிவியில் ஒளிப்பரப்பாகும் பாரதி கண்ணம்மா சீரியலில் இன்று என்ன நடந்தது என்பதைப் பார்ப்போம்.
இன்றைய எபிஷோடில்…
ஹேமா என்னோட குழந்தை என கண்ணம்மா சொல்ல, அதிர்ச்சியாகிறார்கள் வேணுவும் சௌந்தர்யாவும். என்னை குழந்தை கடத்துறவனு சொல்ல வர்றியா, உன்மேல் இவ்வளவு நாள் காட்டுன பாசத்துக்கு எங்க மேலேயே பழி போடுறியா என்று கேட்கிறாள் சௌந்தர்யா. அப்போது, சௌந்தர்யா சொல்வது உண்மைதான் என்கிறார் வேணு. நம்பாத கண்ணம்மா, ஹேமா என்னோட குழந்தை என்கிறாள். ஆனால் சௌந்தர்யா அதனை மறுக்கிறாள். அப்போதும் விடாத கண்ணம்மா, ஹேமாவோட பிறந்த நாளும் லட்சுமியோட பிறந்த நாளும் ஒரே நாளில் வருதே அது எப்படி என கேட்கிறாள். இதைக்கேட்டு திகைக்கும் சௌந்தர்யா, லட்சுமி பிறந்த நேரத்தில் தத்து எடுத்ததால் அதையே ஹேமா பிறந்த நாளா வச்சுக்கிட்டோம் என சமாளிக்கிறாள். அப்போது அங்கு வரும் பாரதி, சௌந்தர்யாவை உள்ளே அழைக்க, தப்பித்தோம் என ஒடுகிறாள்.
அடுத்து, வெண்பா சீமந்தத்தில் இருந்து பாதியில் கிளம்ப, அவளை தடுக்கிறாள் அஞ்சலி. நான் எதுவும் உள்நோக்கத்தோடு செய்யலை என சமாதானம் செய்கிறாள். அப்போது அங்கு வரும் பாரதி, வெண்பாவை உள்ளே கூப்பிட, எனக்கு பிடிக்கலை என்கிறாள். எனக்கும் இங்க இருக்க பிடிக்கலை தான், அஞ்சலிக்காகத் தான் இருக்கேன் என பாரதி சொல்ல, நான் தானே அவமானப்பட்டேன் என்கிறாள் வெண்பா. அப்போது பாரதி எனக்காக உள்ளே வா என கூப்பிட, உனக்காக 100 தடவை அசிங்கப்பட்டுட்டேன் என வெறுப்புடன் உள்ளே வருகிறாள்.
அடுத்து சீமந்தம் நல்லப்படியா முடிந்ததைப் பற்றி பேசிக் கொண்டிருக்கிறார்கள் அஞ்சலியும் பாக்கியாவும். அப்போது பாக்கியா, பாரதி மற்றும் வெண்பா பற்றிக் கேட்க, வெண்பாவ அவமானப் படுத்ததான் அப்படி செஞ்சேன் என்கிறாள் அஞ்சலி. அப்போது அங்கு வரும் அகில், அதே விஷயத்துக்காக அஞ்சலியைப் பாராட்டுகிறான். மேலும் சண்முகத்திடம் நடந்ததையெல்லாம் கூறுகிறான். அடுத்து உள்ளே வரும் சௌந்தர்யா, அஞ்சலிக்கு நன்றி சொல்கிறாள். மேலும் கண்ணம்மாவுக்கு உண்மை தெரிஞ்சது சந்தோஷமா இருக்கு என்கிறாள்.
அடுத்து, லட்சுமி பாரதி கையைப் பிடித்து சாப்பிட கூப்பிட, கையைத் தட்டி விடுகிறான். பின்னர் குழந்தைக்கிட்ட கோபப்படக்கூடாது என, லட்சுமியை சமாதானம் செய்து சாப்பிடக்கூப்பிடுகிறான். அப்போது லட்சுமி, வெண்பாவ உங்க மனைவினு தப்பா நினைச்சிட்டேன் என பாரதியிடம் சாரி கேட்கிறாள். பின்னர் பாரதியும் கண்ணம்மாவும் தெரியாமல் அருகருகே அமர்ந்து சாப்பிட உட்காருகிறார்கள். அவர்களுக்கு பக்கத்திலேயே அவர்கள் குழந்தையும் இடம் மாறி அமருகின்றன. பாரதி, கண்ணம்மா பக்கத்தில் தெரியாமல் உட்கார்ந்துவிட்டோம் என தெரிந்தவுடன் எழுந்திருக்க முயல, அஞ்சலி வந்து உட்காரச் சொல்கிறாள். பாரதி வேறு இடத்தில் உட்கார முயல, கடைசியாக வேறு வழி இல்லாமல் கடைசியாக கண்ணம்மா அருகே சாப்பிட உட்காருகிறான். அப்போது அங்கு வரும் அதைப்பார்த்து கடுப்பாகிறாள். இத்துடன் இன்றைய எபிஷோடு நிறைவடைகிறது.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.