Vijay TV Serial; வெண்பாவுக்காக குடும்பத்தை எதிர்க்கும் பாரதி… லட்சுமியை திட்டும் கண்ணம்மா

Vijay TV barathikannamma serial today episode barathi slams family: சீமந்தம் முடிந்தும் அகிலுடன் செல்ல விரும்பும் அஞ்சலி, கிடைக்காததை கேட்க கூடாது லட்சுமியை திட்டும் கண்ணம்மா, இன்றைய எபிஷோடில்…

Vijay TV barathikannamma serial today episode barathi slams family: சீமந்தம் முடிந்தும் அகிலுடன் செல்ல விரும்பும் அஞ்சலி, கிடைக்காததை கேட்க கூடாது லட்சுமியை திட்டும் கண்ணம்மா, இன்றைய எபிஷோடில்…

author-image
WebDesk
New Update
Vijay TV Serial; வெண்பாவுக்காக குடும்பத்தை எதிர்க்கும் பாரதி… லட்சுமியை திட்டும் கண்ணம்மா

விஜய் டிவியில் ஒளிப்பரப்பாகும் பாரதி கண்ணம்மா சீரியலில் இன்று என்ன நடந்தது என்பதைப் பார்ப்போம்.

இன்றைய எபிஷோடில்…

Advertisment

சீமந்தம் நல்லப்படியாக முடிந்ததைப் பற்றி பேசிக் கொண்டிருக்கிறார்கள். அப்போது பாரதி கண்ணம்மாவின் போட்டோ பற்றிக் கேட்கும் அகில், அது மாதிரி நாங்களும் ஒரு போட்டோ எடுக்கணும் என்கிறார். அப்போது பாக்கியா, போட்டோவில் ஒண்ணா இருக்கும் அவங்க, நிஜத்தில் ஒன்றாக இல்லையே என்கிறாள். அதற்கு அகில் நான் அஞ்சலி கூட சாகுற வரைக்கும் இருப்பேன் என்கிறான். ஆனால் அஞ்சலி, நான் கொஞ்ச நாளில் சாகப்போறேன் என மனதுக்குள் அழுகிறாள். பின்னர் அகில் கிளம்புவதாக சொல்ல, என்னை விட்டு போக வேண்டாம் என அழுகிறாள் அஞ்சலி. அகில் சமாதானப்படுத்த முயல, அஞ்சலி விடாமல் அழுவதால் சண்முகம் அழைத்துச் செல்ல சொல்கிறார்.

publive-image

அடுத்து, கண்ணம்மாவை சமாளித்ததைப் பற்றி பேசிக் கொண்டிருக்கிறார்கள் சௌந்தர்யாவும் வேணுவும். அப்போது வேணு, கண்ணம்மா எதையும் நம்பி இருக்க மாட்டா, திரும்ப கண்டிப்பா கேட்ப என சொல்கிறார். அப்போது அங்கு அஞ்சலியும் அகிலும் வர, பாரதியும் வருகிறான். அஞ்சலி சீமந்தத்திற்கு ப்ளான் பண்ணி அந்த கண்ணம்மாவையும் கூட்டிட்டு வந்துட்டிங்கல்ல, நீங்க பெரிய நடிகை என்கிறான் பாரதி. மேலும் வெண்பாவுக்கும் எனக்கும் கல்யாணம் ஆகாததை அஞ்சலிய வச்சு சொல்ல வச்சிட்டிங்களா, அஞ்சலியும் நீயும் நல்லா நடிச்ச என்கிறான். அப்போது அஞ்சலி, நான் எதார்த்தமா தான் சொன்னேன், அத்தைக்கு எதுவும் தெரியாது என்கிறாள். அகில் இதுக்கு நீயும் துணையா இருக்கல்ல என பாரதி கேட்க, உண்மையை தானே சொன்னோம் என்கிறான் அகில்.

Advertisment
Advertisements

publive-image

பின்னர் பாரதி, எதுக்காக வெண்பாவ எல்லோரும் சேர்ந்து அசிங்கப்படுத்தினீங்க என்று கேட்க, நாங்க யாரும் ப்ளான் பண்ணி எதுவும் நடக்கல என்கிறார் வேணு. அப்ப நான் வெண்பாவ அங்க கூப்பிடல, வெண்பா எப்படி அங்க வந்தா என பாரதி கேட்க, அஞ்சலி நான் தான் கூப்பிட்டேன் என்கிறாள். அதன்பின் நீங்க அவள அசிங்கப்படுத்துனதால், அவ தற்கொலை செய்ய போயிட்டா, கடைசி நேரத்தில் நான் காப்பாத்தியிருக்கேன் என்று சொல்கிறான் பாரதி. மேலும் வெண்பா என்னோட பெஸ்ட் பிரண்ட், ஆனா நீங்க அவள அசிங்கப்படுத்துறீங்க என சொல்ல, உன் பொண்டாட்டி மாதிரி நடிச்சாலே அத அசிங்கம் இல்லயா என கேட்டான் அகில். உடனே பாரதி, புருசன விட்டுட்டு இன்னொருத்தன் கூட உறவு வச்சுருந்த கண்ணம்மா பெருசா தெரியுறா, ஆனா நட்ப மதிக்க தெரியல இல்ல, என சொல்லிவிட்டு கோபமாக செல்கிறான்.

அடுத்து, உனக்கு சீமந்தம் நடந்துச்சா என கண்ணம்மாவிடம் கேட்கிறாள் லட்சுமி. நடந்துச்சு என பொய்யாக சொல்கிறாள். உடனே யாரெல்லாம் வந்தாங்க, எல்லா சடங்கும் செஞ்சாங்களா, அந்த சொந்தக்காரங்க எல்லாம் எங்க கேட்கிறாள் லட்சுமி. உனக்கு என்ன குறை வச்சேன் ஏன் இல்லாததையெல்லாம் கேக்குற என திட்டுகிறாள் கண்ணம்மா. அழுதுக் கொண்டே சாரி கேட்கும் லட்சுமியிடம், இது மாதிரி எல்லாம் கேட்ககூடாது என சொல்கிறாள் கண்ணம்மா. நான் தனியா தானே இருக்கேன், ஹேமா மாதிரி யாராவது இருந்தா நல்லா இருக்கும்ணு தான் கேட்டேன், நீ இவ்வளவு திட்டுற, இனி எதையும் கேட்க மாட்டேன் என சொல்லிவிட்டு ஒடுகிறாள் லட்சுமி. பின்னர் லட்சுமியை திட்டியதை நினைத்து வருத்தப்படுகிறாள் கண்ணம்மா.

அடுத்து, சீமந்தம் முடிந்தும் என் கூட வந்தது ரொம்ப சந்தோஷமா இருக்கு என்கிறான் அகில். நம்க்குள்ள இருக்குற காதல் கடைசி வரைக்கும் தொடரணும் என அஞ்சலியின் கைப்பிடித்து சொல்கிறான். சாகுறதுக்கு முன்னாடி உன் கூட ஒவ்வொரு நிமிஷமும் வாழணும் என மனதுக்குள் நினைக்கிறாள் அஞ்சலி. இத்துடன் இன்றைய எபிஷோடு நிறைவடைகிறது.

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Barathi Kannamma Serial Today Episode Vijay Tv

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: