Advertisment

Vijay TV Serial; ரவுடிகளிடமிருந்து தப்பிக்கும் ஹேமா… கண்ணம்மா மீது பாரதிக்கு இவ்வளவு கோபம் ஏன்?

Vijay TV barathikannamma serial today episode family looks hema: ரவுடிகளிடமிருந்து தப்பித்து ஒடும் ஹேமா, கண்ணம்மாவுக்கு பெயில் வாங்கி கொடுத்ததால் சௌந்தர்யாவிடம் கோபப்படும் பாரதி இன்றைய எபிஷோடில்…

author-image
WebDesk
New Update
Vijay TV Serial; ரவுடிகளிடமிருந்து தப்பிக்கும் ஹேமா… கண்ணம்மா மீது பாரதிக்கு இவ்வளவு கோபம் ஏன்?

விஜய் டிவியில் ஒளிப்பரப்பாகும் பாரதி கண்ணம்மா சீரியலில் இன்று என்ன நடந்தது என்பதைப் பார்ப்போம்.

Advertisment

இன்றைய எபிஷோடில்…

ரவுடிகளிடம் இருந்து தப்பித்த ஹேமா, ஒரு இடத்தில் மறைந்துக் கொள்கிறாள். ரவுடிகள் தேடிக் கொண்டிருக்க, ஒரு லாரிக்கு அடியில் ஒளிந்துக் கொள்கிறாள். அங்கு ஒரு தாத்தா அவளை பார்த்துவிட, ரவுடிகளிடம் காட்டி கொடுக்க வேணாம் என கெஞ்சுகிறாள் ஹேமா. ரவுடிகள் ஹேமாவைப் பற்றி தாத்தாவிடம் கேட்க, அவர் பணம் வாங்கிக் கொண்டு காட்டி கொடுத்து விடுகிறார். உடனே ஹேமா அங்கிருந்து ஓடி ஒரு பழைய காருக்குள் ஒளிந்துக் கொள்கிறாள்.

அப்போது அங்கு ஹேமாவை தேடி அலையும் பாரதி, கார்-ஐ நிறுத்திவிட்டு வெளியில் வருகிறான். இதைப் பார்க்கும் ஹேமா பாரதியிடம் செல்ல நினைக்கிறாள். ஆனால் ஹேமா இருக்கும் காருக்கு அருகில் ரவுடிகள் வர அங்கேயே ஒளிந்து கொள்கிறாள். சிறிது நேரத்தில் பாரதி அங்கிருந்து கிளம்ப, பாரதியின் கார் பின்னாடியே ஒடுகிறாள் ஹேமா. அப்போது ஒரு ரவுடி ஹேமாவை பிடித்து தூக்க, அவனை தாக்கி விட்டு ஒடுகிறாள் ஹேமா.

publive-image

அடுத்ததாக, ஹேமா தப்பித்து விட்டதால் வெண்பாவிடம் என்ன சொல்வது என ரவுடிகள் முழித்துக் கொண்டு இருக்க, அங்கு வருகிறாள் வெண்பா. ஹேமாவை பார்க்க வேண்டும் என வெண்பா சொல்ல, என்ன செய்வது என தெரியாமல் முழிக்கிறார்கள் ரவுடிகள். உள்ளே வந்து பார்க்கும் வெண்பா, ஹேமா அங்கு இல்லாததால் ரவுடிகளை திட்டுகிறாள். மேலும் 2 மணி நேரத்தில் ஹேமாவ இங்க கொண்டு வரணும் என ரவுடிகளுக்கு கட்டளையிடுகிறாள் வெண்பா.

ஒரு பக்கம், கண்ணம்மா ஹேமாவை தேடி அலைகிறாள். இன்னொரு பக்கம் மொத்த குடும்பமும் ஹேமாவை தேடி அலைந்துக் கொண்டிருக்கிறார்கள். அப்போது சௌந்தர்யாவுக்கு போன் செய்யும் வேணு, ஹேமா கிடைத்தாளா என கேட்க இல்லை என சொல்கிறாள். ஹேமாவுக்கு ஏதாவது தப்பா நடந்திருக்குமா என சௌந்தர்யா கேட்க, அப்படியெல்லாம் ஒண்ணும் நடக்காது தைரியமா தேடு என சொல்கிறார் வேணு.

publive-image

ஒரு காருக்கு பின்னாடி ஹேமா ஒளிந்திருக்க, அதன் அருகில் வரும்  கண்ணம்மா ஹேமாவை பார்க்காமல் வேறு பக்கம் செல்கிறாள். ஹேமாவும் வேறு ஒரு பக்கம் ஓடுகிறாள். சௌந்தர்யாவும் அகிலும் ஹேமா போட்டோவைக் காட்டி எல்லோரிடம் கேட்டுக் கொண்டிருக்கிறார்கள். அந்தப் பக்கம் கண்ணம்மாவும் ஹேமாவை தேடி கொண்டிருக்கிறாள்.

அடுத்ததாக வீட்டுக்கு வரும், அகிலும் வேணுவும் ஹேமாவை கண்டுபிடிக்க முடியவில்லை என அஞ்சலியிடம் சொல்கிறார்கள். கண்ணம்மா வீட்டில் பார்த்தீங்களா என அஞ்சலி கேட்க, அங்கேயும் பார்த்துட்டோம் என்கிறான் அகில். அப்போது அங்கு வரும் சௌந்தர்யா ஹேமாவ எப்படி கண்டுபிடிக்கிறது என வேணுவிடம் அழ, போலீஸ் உயரதிகாரிகள் வரை பேசிட்டேன் அவங்களும் தேடிக்கிட்டு இருப்பதாக சொல்கிறார் வேணு.

கண்ணம்மாவை பார்க்க போனிங்களே அது என்ன ஆச்சு என அகில் கேட்க, அப்போது அங்கு வரும் பாரதி, அத நா சொல்றேன் என கோபமாக சொல்கிறான். மேலும் அம்மா, நம்ம ஹேமாவ கடத்துன அந்த கண்ணம்மாவுக்கு பெயில் வாங்கி கொடுத்துட்டாங்க என கத்துகிறான். ஹேமா இன்னும் கிடைக்கல, போலீஸ் நெருங்க முடியாத அளவுக்கு ஹேமாவைக் கொண்டு போய் கண்ணம்மா ஒளிச்சு வச்சிருக்க, ஆனா நீங்க அவளுக்கு பெயில் வாங்கி கொடுத்திருக்கீங்க என சௌந்தர்யாவிடம் கோபப்படுகிறான் பாரதி. இத்துடன் இன்றைய எபிஷோடு நிறைவடைகிறது.

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Vijay Tv Barathi Kannamma Serial Today Episode
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment