Vijay TV Serial; ஹேமாதான் உனக்கு வில்லி; வெண்பாவை குழப்பம் சாந்தி… கண்ணம்மாவுக்காக சண்டையிடும் தோழிகள்!

Vijay TV barathikannamma serial today episode hema lakshmi fight: ஹேமாதான் உங்களுக்கு வில்லி வெண்பாவிடம் சொல்லும் சாந்தி, லட்சுமிக்கும் ஹேமாவுக்கும் சண்டையை சமாதானம் செய்யும் கண்ணம்மா இன்றைய எபிஷோடில்…

Vijay TV barathikannamma serial today episode hema lakshmi fight: ஹேமாதான் உங்களுக்கு வில்லி வெண்பாவிடம் சொல்லும் சாந்தி, லட்சுமிக்கும் ஹேமாவுக்கும் சண்டையை சமாதானம் செய்யும் கண்ணம்மா இன்றைய எபிஷோடில்…

author-image
WebDesk
New Update
Vijay TV Serial; ஹேமாதான் உனக்கு வில்லி; வெண்பாவை குழப்பம் சாந்தி… கண்ணம்மாவுக்காக சண்டையிடும் தோழிகள்!

விஜய் டிவியில் ஒளிப்பரப்பாகும் பாரதி கண்ணம்மா சீரியலில் இன்று என்ன நடந்தது என்பதைப் பார்ப்போம்.

இன்றைய எபிஷோடில்…

Advertisment

ஹேமா, கண்ணம்மா கூட நெருக்கமாவதைப் பார்த்து கவலைப்படுகிறான் பாரதி. அடுத்து, பாரதி உங்கிட்ட பேசினாரா என கேட்க, இன்னும் இல்லை என்கிறாள் வெண்பா. அப்போது, பாரதிக்கு உங்க மேல அன்பு இல்லை, நீங்க அவருக்காக கொலை எல்லாம் பண்ணிருக்கீங்க, கண்ணம்மாவ பிரிச்சிங்க ஆனாலும் எதுவும் நடக்கலையே என சொல்கிறாள் சாந்தி. மேலும், பாரதிக்கு இன்னும் கண்ணம்மா மேல கோபம் இருக்கு, உங்களுக்கு உண்மையான வில்லி ஹேமா தான் என்கிறாள் சாந்தி. இந்த அப்பா பாசம் ரொம்ப ஆபத்து, ஒருவேளை ஹேமா வற்புறுத்தி, கண்ணம்மாவை பாரதி அவர் வீட்டுலேயே இருக்குறதுக்கு கூட்டிட்டு வந்தா என்ன செய்வீங்க என சாந்தி கேட்க, டென்ஷனாகும் வெண்பா சாந்தியை அறைகிறாள். என்னைக்கு இருந்தாலும் பாரதி எனக்குதான், கண்ணம்மாவுடன் சேர்ந்து வாழ இந்த வெண்பா விட மாட்ட என சாவல் விடுகிறாள்.

publive-image

அடுத்து, ஹேமா இன்னும் போன் கூட பண்ணலையே என வருத்தமாக இருக்கிறாள் சௌந்தர்யா. மேலும் குழந்தைங்களை பிரிச்சி வச்சதுக்கு இன்னைக்குதான் அவங்க அம்மா பாசத்த அனுபவிக்க போறாங்க என்கிறாள். அப்போது அங்கு வரும் பாரதி, ஏசி ரிமோட்டை கொடுத்து, தூங்க சொல்கிறான். பின்னர் அவர்களுக்கு தெரியாமல் சௌந்தர்யாவின் செல்போனை எடுத்துக் கொண்டு வெளியே செல்கிறான். பாரதி மாறிட்டான் என வேணு சொல்ல, அவன் என்னோட செல்போனை எடுக்கத் தான் ஏசி ரிமோட்டை கொடுக்க வந்திருக்கான் என சொல்கிறாள் சௌந்தர்யா. எதுக்கு என வேணு புரியாமல் விழிக்க, கண்ணம்மாவுக்கு போன் செய்து ஹேமா பத்தி கேட்கதான் பாரதி போனை எடுத்துக்கிட்டு போனான் என சொல்கிறாள் சௌந்தர்யா.

Advertisment
Advertisements

publive-image

அடுத்ததாக, ஹேமாவும் கண்ணம்மாவும் நட்சத்திரங்களை பார்த்து பேசிக்கொண்டிருக்கிறார்கள். பின்னர், கண்ணம்மா பக்கத்தில் யார் படுப்பது என ஹேமாவுக்கும் லட்சுமிக்கும் வாக்குவாதம் வருகிறது. அப்போது நான் தான் படுப்பேன் அவங்க என்னோட சமையல் அம்மா என ஹேமா சொல்ல, அவங்க என்னோட சொந்த அம்மா என சொல்ல வாயெடுத்த லட்சுமி சொல்லாமல் மௌனமாக நிற்கிறாள். பின்னர் ஹேமா, லட்சுமி பிடித்து தள்ள, அவங்க என்னோட அம்மா என்று சொல்கிறாள் லட்சுமி. உடனே எனக்கும் அம்மா தான் என சண்டை போடுகிறாள் ஹேமா. கண்ணம்மா அங்கு வந்து, உங்க இரண்டு பேருக்கும் நான் அம்மா தான் என இருவரையும் சமாதானப்படுத்துகிறாள்.

publive-image

அப்போது, ஹேமா, உன்ன விட என்னை தான் சமையல் அம்மாவுக்கு அதிகமாக புடிக்கும் என சொல்கிறாள். இதைக்கேட்டு அதிர்ச்சியாகும் கண்ணம்மா இருவருக்கும் நடுவில் தான் படுப்பதாக கூறி சமாளிக்கிறாள். பின்னர், எங்க அப்பா எப்போதும் கதை சொல்வாரு, நீங்களும் சொல்லுங்க என ஹேமா கேட்க, கதை சொல்கிறாள் கண்ணம்மா. கதை சொல்லிக்கொண்டிருக்கும் போதே இருவரும் தூங்கிவிடுகிறார்கள். அப்போது, கண்ணம்மாவுக்கு போன் செய்கிறான் பாரதி, சௌந்தர்யா தான் கூப்பிடுவதாக நினைத்து போனை எடுக்கிறாள் கண்ணம்மா. அவளின் குரலைக் கேட்டதும் பேச முடியாமல் தவிக்கிறான் பாரதி. பின்னர் பாரதி தான் என கண்டுபிடிக்கும் கண்ணம்மா, ஹேமாவைப் பற்றி கேட்கிறான்.  இத்துடன் இன்றைய எபிஷோடு நிறைவடைகிறது.

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Barathi Kannamma Serial Today Episode Vijay Tv

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: