New Update
/tamil-ie/media/media_files/uploads/2021/07/bk3.jpg)
Vijay TV barathikannamma serial today episode Hema tells truth:கண்ணம்மாவிடம் சண்டையிடும் பாரதி, சமையல் அம்மா காப்பாற்றியதாக கூறும் ஹேமா இன்றைய எபிஷோடில்…
விஜய் டிவியில் ஒளிப்பரப்பாகும் பாரதி கண்ணம்மா சீரியலில் இன்று என்ன நடந்தது என்பதைப் பார்ப்போம்.
இன்றைய எபிஷோடில்…
ஹேமாவை கடத்தியது கண்ணம்மா தான் என பாரதி குற்றம் சுமத்த, கோபப்படும் கண்ணம்மாவின் அப்பா கஷ்டப்பட்டு உங்க குழந்தைய கண்டுபிடிச்சுருக்கோம், நீங்க இப்படி பேசுறீங்க என கேட்கிறார். அதற்கு பாரதி, உங்கள யாரு தேட சொன்னது, நீங்களே கடத்தி வச்சுட்டு, இப்ப கண்டுபிடிச்ச மாதிரி நாடகம் ஆடுறீங்களா என கேட்கிறான். உடனே கண்ணம்மா, அவளின் அப்பா கூட்டிகிட்டு கிளம்ப முடிவெடுக்கிறாள். கண்ணம்மாவை தடுத்து, சௌந்தர்யா மன்னிப்பு கேட்க, பாரதியோ மீண்டும் கண்ணம்மா மீதே குற்றம் சுமத்துகிறான். இதைக்கேட்டு ஆத்திரப்படும் கண்ணம்மாவின் அப்பா, பாரதியின் சட்டையைப் பிடித்து சண்டையிடுகிறார்.
பாரதியும் திருப்பி சண்டையிட, வேணுவும் சௌந்தர்யாவும் பாரதியை தடுக்கிறார்கள். எல்லா தப்பு நீதான் பண்ண என சௌந்தர்யா பாரதியிடம் சொல்கிறாள். நீயெல்லாம் ஒரு மனுஷா என கண்ணம்மாவும் கேட்க, கோபத்தின் உச்சத்தில் இருக்கிறான் பாரதி. சௌந்தர்யாவும் கண்ணம்மாவுக்கு ஆதரவாக பேசுகிறாள். ஹாஸ்பிட்டல் வந்து ஹேமாவ பார்க்காமா கண்ணம்மா கூட சண்டை போடுறியே என சௌந்தர்யா கேட்க, ஹேமாவ பார்க்குற டாக்டர் தெரிஞ்சவர் தான் போன்ல எல்லாத்தையும் கேட்டுட்டோம் என்கிறாள் வெண்பா. உன்கிட்ட பேசல நீ வாய மூடு என வெண்பாவை அதட்டுகிறாள் சௌந்தர்யா.
பாரதிக்கு மாறிமாறி அட்வைஸ் செய்கிறார்கள் வேணுவும் சௌந்தர்யாவும். அப்போது பாரதி, ஹேமா கண் முழிச்சதும் உண்மை தெரிஞ்சுரும் என சொல்ல, அதை செய் முதல்ல என்கிறாள் கண்ணம்மா. பின்னர் பாரதி, ஹேமாவுக்கு சரியான உடனே நா அமெரிக்க கூட்டி போகப் போறேன் என உறுதியாக சொல்கிறான். உடனே கண்ணம்மா கோபமாக கிளம்புகிறாள். பாரதி மீண்டும் கண்ணம்மா மீதே குற்றம் சுமத்த, பாரதியை அடிக்கிறாள் சௌந்தர்யா.
அடுத்து ஹேமாவை பார்க்க அழைக்கிறார் நர்ஸ். உள்ளே சென்று ஹேமா பார்த்து எல்லோரும் கவலைப்படுகிறார்கள். டாக்டர் ஹேமா நார்மல் ஆகிவிட்டதாக கூறிவிட்டு செல்கிறார். கண் விழிக்கும் ஹேமா, பாரதியைப் பார்த்து அழுகிறாள். எல்லோரும் ஹேமாவுக்கு ஆறுதல் சொல்கிறார்கள். பின்னர் ஹேமா, காரில் இருந்து சமையல் அம்மாவை பார்க்க இறங்க, என்னை சிலர் கடத்திட்டாங்க என நடந்ததைக் கூறுகிறாள். ஹேமா சொல்ல சொல்ல பதற்றமாகிறாள் வெண்பா.
காரில் மாட்டிக்கொண்டதையும், கண்ணம்மா காப்பாற்றியதையும் சொல்கிறாள் ஹேமா. கண்ணம்மா காப்பாற்றியதாக ஹேமா கூற என்ன செய்வதென தெரியாமல் நிற்கிறான் பாரதி. யாரு என்ன கடத்துனாங்க என பாரதியிடம் ஹேமா கேட்க, தெரியல என அழுகிறான் பாரதி.
பின்னர் வெளியில் சௌந்தர்யா பாரதியிடம் இப்பாவது நம்புறியா என கேட்கிறாள். குற்றவுணர்ச்சியில் தலைகுனிந்து நிற்கிறான் பாரதி.கண்ணம்மாவை பற்றி பெருமையாக பேசுகிறாள் சௌந்தர்யா. இத்துடன் இன்றைய எபிஷோடு நிறைவடைகிறது.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.