Vijay TV Serial; சொந்தக்கால்ல நிக்க, கடுமையா உழைக்கணும்… சவாலை பாரதிக்கு நினைவூட்டும் கண்ணம்மா

Vijay TV barathikannamma serial today episode kannamma advice barathi: குடிக்க வேணாம் என பாரதிக்கு அட்வைஸ் சொல்லும் கண்ணம்மா, பாரதியை பார்க்க முடியாமல் டென்ஷனாகும் வெண்பா, இன்றைய எபிஷோடில்…

Vijay TV barathikannamma serial today episode kannamma advice barathi: குடிக்க வேணாம் என பாரதிக்கு அட்வைஸ் சொல்லும் கண்ணம்மா, பாரதியை பார்க்க முடியாமல் டென்ஷனாகும் வெண்பா, இன்றைய எபிஷோடில்…

author-image
WebDesk
New Update
Vijay TV Serial; சொந்தக்கால்ல நிக்க, கடுமையா உழைக்கணும்… சவாலை பாரதிக்கு நினைவூட்டும் கண்ணம்மா

விஜய் டிவியில் ஒளிப்பரப்பாகும் பாரதி கண்ணம்மா சீரியலில் இன்று என்ன நடந்தது என்பதைப் பார்ப்போம்.

இன்றைய எபிஷோடில்…

Advertisment

கண்ணம்மா இரவில் கஷ்டப்படுவதை நினைத்து வருத்தப்படும் பாரதி, ஏன் இவ்வளவு மாவு அரைக்கிறீங்க என கேட்க, மாவு விற்பனை செய்வதாக சொல்கிறாள் கண்ணம்மா. தினமும் இப்படி தான் கஷ்டப்படுறியா, எப்ப தான் தூங்குவ என கேட்க, வேலைனு வந்துட்டா செய்யனும்ல என்கிறாள் கண்ணம்மா. தினமும் 4 மணி நேரம் மட்டும் தூங்குவதாக கண்ணம்மா சொல்ல, ஏன் இவ்வளவு கஷ்டப்படுற என கேட்கிறான் பாரதி. அதற்கு கண்ணம்மா, பல பேர் முன்னாடி வாழ்ந்து காட்டுறேன்னு சவால் விட்டுருக்கேன், அதுக்காக தான் என பதிலடி கொடுக்கிறாள் கண்ணம்மா. இதேமாதிரி, மதியம் சமையல் வேலை, தையல்னு நிறைய வேலைகள் செய்வதாக சொல்லும் கண்ணம்மா, அப்பதான் யாரோடு தயவும் இல்லாம வாழ முடியும் குத்திக் காட்டுகிறாள் கண்ணம்மா. மேலும் இதுதான் என் வாழ்க்கை, என் சொந்த காலில் நிற்கிறேன் அந்த சந்தோஷம் போதும் என்கிறாள்.

publive-image

அடுத்ததாக, பாரதியைத் தேடி கண்ணம்மா வீட்டுத் தெருவுக்கு வரும் வெண்பாவை தடுக்கிறார்கள் காவல்துறையினர். நான் ஒரு டாக்டர், பர்சனல் வேலைய உள்ள போகனும் என திமிராக வெண்பா கேட்க, கொரோனாவுக்கு நிறைய டாக்டருங்க கஷ்டப்பட்டு உழைக்குறாங்க, நீங்க பொறுப்பு இல்லாம நடந்துக்கிறீங்க, கிளம்புங்க என விரட்டுகிறார் போலீஸ் ஒருவர். பின்னர் வெண்பா கெஞ்சி கேட்டும் அவர்கள் விட மறுக்கின்றனர்.

Advertisment
Advertisements

அடுத்து, கண்ணம்மா மாவு பாத்திரத்தை தவற விட, பத்திரமாக மீட்கிறான் பாரதி. ஏதாவது உதவி செய்யட்டும்மா என பாரதி கேட்க, ஒன்னும் வேணாம் போய் தூங்குங்க என்கிறாள் கண்ணம்மா. பாரதி தூங்கப்போக, ஒரு விஷயம் பேசனும் என பாரதியை தடுக்கிறாள் கண்ணம்மா. அப்போது பாரதி, இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி அனுதாபம் தேடப்போறியா என நினைக்க, கண்ணம்மாவோ ஹேமாவுக்காக இனிமே குடிக்காதீங்க என அதிர்ச்சியளிக்கிறாள். பின்னர் ஹேமா, எங்கப்பா எனக்கு ரொம்ப புடிக்கும், எல்லோரும் சாமி மாதிரி கும்பிடுவாங்க, ஆனா குடிக்கிறது மட்டும்தான் எனக்கு பிடிக்கலைனு சொன்னா என்று சொல்கிறாள் கண்ணம்மா. ஹேமாவுக்கு நீங்க ஹீரோவா இருக்கனும் என அட்வைஸ் செய்கிறாள். அசிங்கப்படுத்துவானு நினைச்சா இப்படி சொல்றாளே என கலங்குகிறான் பாரதி.

publive-image

அடுத்து பாரதியை பார்க்க முடியாத டென்ஷனில் வெண்பா, கொரோனாவால் அந்த தெருவ முடிவச்சுருக்காங்க, பாரதியை பார்க்க முடியலை என சாந்தியிடம் கத்துகிறாள். பாரதியும் கண்ணம்மாவும் ஒரே வீட்டில் இருப்பதால், பழைய விஷயங்களை அவங்க பேசி, உண்மை எல்லாம் தெரிஞ்ச இவ்வளவு நாள் கஷ்டப்பட்டதெல்லாம் வீணாகிடும் என கொதிக்கிறாள் வெண்பா.

publive-image

அடுத்ததாக, தூங்க முடியாமல் தவிக்கும் பாரதி, கண்ணம்மா எங்க என தேடுகிறான், அவள் மொட்டை மாடியில் தனியாக தூங்குவதைப் பார்த்து கலங்கி, அவள் அருகில் அமர்ந்து கண்ணம்மாவை கவலையாக பார்க்கிறான் பாரதி. இத்துடன் இன்றைய எபிஷோடு நிறைவடைகிறது.

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Barathi Kannamma Serial Today Episode Vijay Tv

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: