Vijay TV Serial; ஹேமாவை பார்க்க பாரதி வருவான்… லட்சுமியை என்ன செய்வது? புது குழப்பம்

Vijay TV barathikannamma serial today episode kannamma attends hema: பாரதி அனுப்பும் ஏசியை திருப்பி அனுப்பும் கண்ணம்மா, குழந்தையை நினைத்து கவலையில் அஞ்சலி, இன்றைய எபிஷோடில்…

Vijay TV barathikannamma serial today episode kannamma attends hema: பாரதி அனுப்பும் ஏசியை திருப்பி அனுப்பும் கண்ணம்மா, குழந்தையை நினைத்து கவலையில் அஞ்சலி, இன்றைய எபிஷோடில்…

author-image
WebDesk
New Update
Vijay TV Serial; ஹேமாவை பார்க்க பாரதி வருவான்… லட்சுமியை என்ன செய்வது? புது குழப்பம்

விஜய் டிவியில் ஒளிப்பரப்பாகும் பாரதி கண்ணம்மா சீரியலில் இன்று என்ன நடந்தது என்பதைப் பார்ப்போம்.

இன்றைய எபிஷோடில்…

Advertisment

ஹேமாவை கண்ணம்மா வீட்டில் விட்டுவிட்டு வரும் பாரதி, அவளை நினைத்து கவலைப்படுகிறான். அவளால என்னை பிரிஞ்சு இருக்க முடியாது, சீக்கிரமே என்கிட்ட வந்துடுவா, தனக்கு தானே சமாதானம் சொல்லிக்கிறான்.

publive-image

அடுத்ததாக, பாரதி மனசு மாறியதை நினைத்து சந்தோஷப்படுகிறார்கள் வேணுவும் சௌந்தர்யாவும். அப்போது, ஹேமா கொடுத்த இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி பாரதியையும் கண்ணம்மாவையும் அடிக்கடி சந்திக்க வைக்கனும் என்கிறாள் சௌந்தர்யா. ஹேமா பார்க்க பாரதி போகும்போதெல்லாம், கண்ணம்மா பத்தி தப்பா நினைக்கிறதை அவன் மாத்திக்கனும். இல்லனா மாத்த வைக்கனும் என்கிறாள். தீடீரென சௌந்தர்யாவுக்கு லட்சுமியின் ஞாபகம் வருகிறது. கண்ணம்மா வீட்டில் லட்சுமி இருக்குறத பார்த்த பாரதி பிரச்சனை செய்வானே என பதறுகிறாள். அதற்கு என்ன செய்யலாம் என இருவரும் தீவிரமாக யோசிக்கிறார்கள்.

Advertisment
Advertisements

அடுத்ததாக, உங்க அப்பாவும் பாட்டியும் என்ன நம்பி உன்ன விட்டுருக்காங்க, என ஹேமாவுக்கு மாத்திரை கொடுத்து சாப்பிட வைக்கிறாள் கண்ணம்மா. அப்போது, அப்பா எப்படி என்ன கொண்டு வந்து விட்டாரு, என நம்ப முடியாமல் கேட்கிறாள் ஹேமா. தெரியலயே என சொல்லும் கண்ணம்மாவிடம், அப்பாவுக்கு உங்க மேல இருக்குற கோபம் குறைஞ்சிருச்சோ என கேட்கிறாள். பின்னர் இங்க இருக்க உனக்கு பிடிச்சிருக்கா என கண்ணம்மா கேட்க, ரொம்ப பிடிச்சிருக்கு என்கிறாள் ஹேமா. நீ வசதியா வாழ்ந்த பொண்ணு, இங்க வசதி கம்மி என கண்ணம்மா சொல்ல, அதெல்லாம் ஒரு பிரச்சனையும் இல்லை என்கிறாள் ஹேமா. பின்னர் ஹேமாவை தட்டி கொடுத்து தூங்க வைக்கிறாள் கண்ணம்மா.

publive-image

அடுத்து, கண்ணம்மாவுக்கு போன் செய்யும் சௌந்தர்யா, ஹேமாவை பற்றி கேட்கிறாள். நீ இங்க வந்திருந்தா இன்னும் நல்லா இருக்கும் என சௌந்தர்யா சொல்ல, பாரதி தப்பா நினைப்பாரு என சொல்கிறாள் கண்ணம்மா. பின்னர், ஹேமாவ பார்க்க பாரதி அடிக்கடி அங்க வருவான், லட்சுமி விஷயம் அவனுக்கு தெரியக்கூடாது என்ன பண்றது என கேட்க, அவ என்ன சமையல் அம்மானு தான் கூப்பிடுவா, பக்கத்துல தான் வீடுனு சொல்லி சமாளிச்சிடலாம் என்கிறாள் கண்ணம்மா.

அடுத்து, ஹேமாவும் கண்ணம்மாவும் விளையாடிக் கொண்டிருக்க, அப்போது ஹேமாவுக்கு வியர்ப்பதை நினைத்து கவலைப்படுகிறாள் கண்ணம்மா. அப்போது, இரண்டு பேர் அங்கு ஏசி கொண்டு வருகிறார்கள். யார் இங்க கொடுக்க சொன்னது என கண்ணம்மா கேட்க, பாரதிங்கிற பேர்ல புக் பண்ணிருக்காங்க என சொல்கிறார்கள். இதைக்கேட்டு அதிர்ச்சியடையும் கண்ணம்மா, ஹேமாவிடம் ஏசி வேணுமா என கேட்க, அவள் வேண்டாம் என்கிறாள். உடனே பாரதி வீட்டுக்கே இதைக்கொண்டுபோய் கொடுக்க சொல்கிறாள் கண்ணம்மா.

publive-image

அடுத்ததாக, கவலையாக இருக்கும் அஞ்சலியிடம் என்ன பிரச்சனை எனக் கேட்கிறாள் சௌந்தர்யா. அஞ்சலி அமைதியாக இருக்க, தைரியமாக இரு என ஆறுதல் சொல்கிறாள். கண்ணம்மாவும் நீயும் இங்க வந்தத நினைச்சு ரொம்ப சந்தோஷமா இருந்துச்சு. ஆனால் கண்ணம்மா, குழந்தை பிறக்குறதுக்கு முன்னாடி பிரிஞ்சு போயிட்டதால, என்னால அவ குழந்தைகள கொஞ்ச முடியல, இப்ப நீ தான் அதெல்லாம் எனக்கு தரணும் என்கிறாள். இதைக்கேட்டு வருத்தமாகிறாள் அஞ்சலி. அப்போது, கண்ணம்மா மட்டும் இங்க இருந்தா உன்ன நல்லா பார்த்துப்பா என சொல்லிவிட்டு செல்கிறாள். குழந்தை பிறந்த பின்னர் நா உங்க எல்லாரையும் விட்டு போய்டுவேன் என மனதுக்குள் அழுகிறாள் அஞ்சலி. இத்துடன் இன்றைய எபிஷோடு நிறைவடைகிறது.

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Barathi Kannamma Serial Today Episode Vijay Tv

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: