New Update
/tamil-ie/media/media_files/uploads/2021/09/barathikannamma-sep-11-epi.jpg)
Vijay TV barathikannamma serial today episode kannamma confronts tulasi: துளசியும் சரியான பதில் சொல்லாததால் குழப்பத்தில் கண்ணம்மா, துளசியை சௌந்தர்யா ஏன் பார்த்தாங்க யோசிக்கும் பாரதி, வெண்பா, இன்றைய எபிஷோடில்…
விஜய் டிவியில் ஒளிப்பரப்பாகும் பாரதி கண்ணம்மா சீரியலில் இன்று என்ன நடந்தது என்பதைப் பார்ப்போம்.
இன்றைய எபிஷோடில்…
ஹாஸ்பிட்டலில் ஏதோ நடந்திருக்கு என கண்ணம்மா சந்தேகமா கேட்க, நீ தப்பா புரிஞ்சுக்கிட்டு இருக்க என சமாளிக்கிறாள் துளசி. பின்னர் உனக்கு ஏன் இந்த திடீர் சந்தேகம் என துளசி கேட்க, டாக்டர் சொன்னதாக சொல்கிறாள். மேலும் லட்சுமி பிறந்த அன்று அத்தை ஒரு கைக்குழந்தைய அவங்க வீட்டுக்கு கொண்டு வந்துருக்காங்க அதான் எனக்கு சந்தேகமா இருக்கு என்கிறாள் கண்ணம்மா. ஆனால் சௌந்தர்யாவுக்கு கொடுத்த சத்தியத்திற்காக உண்மையை மறைக்கிறாள் துளசி. அப்போது என் இன்னொரு குழந்தையை நான் எங்கே போய் தேடுவேன் என அழுகிறாள் கண்ணம்மா.
அடுத்து, வெண்பா வீட்டிற்கு ஹேமாவை அழைத்து வருகிறான் பாரதி. எதுக்கு இங்க வந்திருக்கீங்க என ஹேமா கேட்க, உனக்கு டிரஸ் எடுக்க உதவத்தான் வெண்பாவ கூட்டிட்டு போக வந்திருக்கோம் என்று சொல்கிறான் பாரதி. அதெல்லாம் வேண்டாம் என ஹேமா சொல்ல, வெண்பா என் நல்ல பிரண்ட், அவள தப்பா நினைக்காத என உள்ளே அழைத்துச் செல்கிறான் பாரதி. ஹேமாவையும் பாரதியையும் பார்த்து ஆச்சரியப்படும் வெண்பாவை, ஷாப்பிங்கிற்கு கூப்பிடுகிறான் பாரதி. அப்போது ஹேமா ரெஸ்ட் ரூம் செல்ல, உண்மையைச் சொல்லு, என்ன விஷயம் என கேட்கிறாள் வெண்பா. அதற்கு பாரதி, எங்க அம்மா இன்னைக்கு ஒரு நர்ஸ் கூட பேசிட்டு இருந்தாங்க, அவ பேரு ஞாபகம் வரமாட்டேங்குது என சொல்ல, தயங்கியவாறே துளசி? என்கிறாள் வெண்பா. துளசிக்கிட்ட எங்க அம்மா ஏதோ ரகசியமா பேசிருக்காங்க, இந்த துளசி, கண்ணம்மா பிரசவத்தின்போது பக்கத்தில் இருந்தவ என சொல்கிறான் பாரதி. உடனே வெண்பா கண்ணம்மாவ நாம கொலை பண்ண டிரைப் பண்ண விஷயம் தெரிஞ்சிருமோ என பதற்றமாகிறாள். பின்னர், இருவரும் துளசியை எதுக்காக சௌந்தர்யா பார்த்தாங்க என யோசிக்கிறாள்.
அடுத்து, பிரசவத்தை நினைத்து பயப்படுகிறாள் அஞ்சலி. அப்போது குறி சொல்லும் பெண்மணி கைராசி பார்ப்பதாக சொல்ல, அதெல்லாம் வேண்டாம் என மறுக்கிறாள். அவர் பிடிவாதமாக கேட்க, ஒத்துக் கொள்கிறாள் அஞ்சலி. பின்னர் அஞ்சலியின் கையைப் பிடித்து பார்க்கும் அவர், உண்மைகள் எல்லாத்தையும் சொல்ல ஆச்சரியமாகிறாள் அஞ்சலி. பின்னர் இருவர் உயிருக்கும் ஆபத்து இருப்பதாக சொல்ல பதற்றமாகிறாள் அஞ்சலி. அப்போது அகில் வந்து, குறி சொல்பவரை வெளியே விரட்டுகிறான்.
அடுத்ததாக, இன்னொரு குழந்தையைப் பற்றி கண்ணம்மா யோசித்துக் கொண்டிருக்கும்போது குமார் அங்கு வருகிறார். அவர் லட்சுமியின் அப்பா பாரதி தானே என கேட்க, அதிர்ச்சியாகிறாள் கண்ணம்மா. எப்படி தெரியும் என கேட்க, நடக்குறத வச்சு கேட்குறேன் என்கிறார் குமார். மேலும், ஹேமா,லட்சுமி இருவரும் பாரதி-கண்ணம்மாவின் குழந்தைகள் என நினைத்து சில விஷயங்களைச் சொல்லிவிட்டு கிளம்ப, என்னோட இன்னொரு குழந்தை ஹேமா தான என குழம்புகிறாள் கண்ணம்மா. இத்துடன் இன்றைய எபிஷோடு நிறைவடைகிறது.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.