Vijay TV Serial; இன்னொரு குழந்தைக்கு என்ன ஆச்சு… சௌந்தர்யா மீது சந்தேகப்படும் கண்ணம்மா

Vijay TV barathikannamma serial today episode kannamma doubts soundarya: இன்னொரு குழந்தைக்கு என்ன ஆச்சு என குழப்பத்தில் கண்ணம்மா, ஹேமாவ பார்த்துக்கிட்டதுக்கு உன் பொண்ண படிக்க வைக்கிறேன் என கண்ணம்மாவிடம் உன் பொண்ணு எங்க என கேட்கும் பாரதி, இன்றைய எபிஷோடில்…

Vijay TV barathikannamma serial today episode kannamma doubts soundarya: இன்னொரு குழந்தைக்கு என்ன ஆச்சு என குழப்பத்தில் கண்ணம்மா, ஹேமாவ பார்த்துக்கிட்டதுக்கு உன் பொண்ண படிக்க வைக்கிறேன் என கண்ணம்மாவிடம் உன் பொண்ணு எங்க என கேட்கும் பாரதி, இன்றைய எபிஷோடில்…

author-image
WebDesk
New Update
Vijay TV Serial; இன்னொரு குழந்தைக்கு என்ன ஆச்சு… சௌந்தர்யா மீது சந்தேகப்படும் கண்ணம்மா

விஜய் டிவியில் ஒளிப்பரப்பாகும் பாரதி கண்ணம்மா சீரியலில் இன்று என்ன நடந்தது என்பதைப் பார்ப்போம்.

இன்றைய எபிஷோடில்…

Advertisment

இரட்டை குழந்தைகள் பிறந்த விஷயம் கண்ணம்மாவுக்கு தெரிந்துவிட்டதால், என்ன சொல்லி சமாளிப்பது என பதற்றமாகிறாள் சௌந்தர்யா. கண்ணம்மா காலில் விழுந்தால் தான் இந்த பிரச்சனையை சமாளிக்க முடியும் என சௌந்தர்யா சொல்ல, சமாளிப்போம் என ஆறுதல் சொல்கிறார் வேணு.

publive-image

அடுத்து, கண்ணம்மா, இரட்டை குழந்தைகள் பற்றி டாக்டர் சொன்னதை நினைத்து, இன்னொரு குழந்தை எங்க, என்ன ஆச்சு என யோசிக்கிறாள். வெண்பா தான் ஏதாவது பண்ணிருக்கணும் என சந்தேகப்படுகிறாள். பின்னர், குழந்தை பிறக்கறதுக்கு முன்னாடி, துர்கா வெண்பாவ இழுத்துட்டு போயிட்டார், அதனால் வெண்பா இத செய்றதுக்கு வாய்ப்பில்லை என முடிவெடுக்கும் கண்ணம்மா, கர்ப்பமா இருந்தப்ப அத்தை தான் எல்லா விஷயத்தையும் பார்த்துக்கிட்டாங்க, டாக்டர்க்கிட்ட போன போதும் அத்தை கூட வந்தாங்க, அவங்களுக்கு இதப்பத்தி தெரியுமா, என்ன பண்றது என கவலைப்படுகிறாள்.

Advertisment
Advertisements

publive-image

அடுத்து, ஹேமா, கண்ணம்மாவிடம் எங்க அப்பா கனவில் வந்தார், அவர பார்க்கணும் போல் இருக்கு என சொல்கிறாள். உன்ன உங்க வீட்டில் கொண்டு போய் விட்டுறேன் என கண்ணம்மா சொல்ல, சந்தோஷமாகிறாள் ஹேமா. பின்னர் ஹேமா, தன் தோழியோடு போனில் பேசுவதை பார்க்கும் கண்ணம்மா, என் பொண்ணு அங்க இருக்கா, அவரு பொண்ணு இங்க இருக்கா, இதெல்லாம் ஏன் நடக்குது, இன்னொரு பொண்ண பத்தி அத்தைக்கிட்ட கேட்கணும் என முடிவெடுக்கிறாள். அப்போது சோகமாக, இருக்கும் கண்ணம்மாவிடம் உங்க பொண்ணு ஞாபகம் வந்துருச்சா என கேட்கிறாள் ஹேமா. ஆமா என சொல்லும் கண்ணம்மா, உன்ன பிரியுறதும் கஷ்டமா இருக்கு என்கிறாள். ஹேமாவிடம், அடிக்கடி இங்க வரணும் என சொல்லி அழைத்துச் செல்கிறாள் கண்ணம்மா.

publive-image

அடுத்து, பாரதி ஹாஸ்பிட்டலுக்கு கிளம்பாததால், கண்ணம்மா வந்தால் என்ன செய்வது என கவலையாகிறாள் சௌந்தர்யா. அப்போது ஹேமாவோடு வருகிறாள் கண்ணம்மா. பின்னர், ஹேமா பாரதியிடம் போய் கொஞ்சிக்கொண்டிருக்க, கண்ணம்மாவைப் பார்த்ததும், சமையல் அம்மா என போய் கட்டிக்கொள்கிறாள் லட்சுமி. இதையெல்லாம் பதற்றத்துடன் பார்க்கும் சௌந்தர்யா, என்ன நடக்க போகுதோ என ஒளிந்துக்கொள்கிறாள். வேணு, எதுவா இருந்தாலும் சமாளிக்கணும் என சொல்ல, அவங்க என்ன பேசிக்கிறாங்கனு பார்ப்போம் என மறைந்து இருந்து பார்க்கிறாள். அப்போது, பாரதி, ஹேமாவ பார்த்துக்கிட்டதுக்கு நன்றி என சொல்லி, உனக்கு ஏதாவது பணம் கொடுக்கனும் என சொல்ல, நான் அன்பை விக்கிறதில்ல என காட்டமாக சொல்கிறாள். உடனே பாரதி, உன் பொண்ண கூட்டிட்டு வா, லட்சுமியை படிக்க வைப்பதுப்போல் படிக்க வைக்கிறேன் என சொல்கிறான். ஆனால், கண்ணம்மா உங்க பெருந்தன்மைக்கு நன்றி, என் பொண்ண எனக்கு படிக்க வைக்க தெரியும் என கோபமாக கூறுகிறாள்.  இத்துடன் இன்றைய எபிஷோடு நிறைவடைகிறது.

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Barathi Kannamma Serial Today Episode Vijay Tv

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: