New Update
/tamil-ie/media/media_files/uploads/2021/09/barathikannamma-sep-20-epi.jpg)
Vijay TV barathikannamma serial today episode kannamma falls sick: கண்ணம்மாவிடம் உண்மையை சொல்ல வலியுறுத்தும் வேணு, இன்னொரு குழந்தையை பத்தி தெரிஞ்சிக்க நான் சொல்றதையெல்லாம் கேட்கணும் என கண்ணம்மாவை மிரட்டும் வெண்பா, இன்றைய எபிஷோடில்…
விஜய் டிவியில் ஒளிப்பரப்பாகும் பாரதி கண்ணம்மா சீரியலில் இன்று என்ன நடந்தது என்பதைப் பார்ப்போம்.
இன்றைய எபிஷோடில்…
கண்ணம்மா குறித்து யோசனையில் இருக்கும் சௌந்தர்யாவிடம் என்ன பிரச்சனை என வேணு கேட்க, பாரதிய நினைச்சா தான் பயமா இருக்கு, ஹேமா கண்ணம்மாவோட பொண்ணுனு தெரிஞ்ச என்ன செய்வானு தெரியலை என்கிறாள். பின்னர் இருவரும் கண்ணம்மாவிற்கு எப்படி இந்த விஷயம் தெரிஞ்சுச்சு என யோசிக்கிறார்கள். வேணு துளசி மீது சந்தேகப்பட, கண்டிப்பா அவ சொல்லிருக்க மாட்டா என்கிறாள் சௌந்தர்யா. பின்னர் வேணுவின் சந்தேகம் வெண்பா மீது திரும்ப, அதுக்கும் வாய்ப்பில்லை என்கிறாள் சௌந்தர்யா. உடனே வேணு, எல்லா உண்மையையும் கண்ணம்மாகிட்ட சொல்லிரலாம் என சொல்ல, தயங்குகிறாள் சௌந்தர்யா.
அடுத்ததாக, பாரதிக்கு அடுத்து என்ன சமையல் செய்துக் கொடுக்கலாம் என சாந்தியுடன் பேசிக் கொண்டிருக்கிறாள் வெண்பா. அப்போது பாரதி வீட்டில் சமைத்ததை சந்தோஷமாக சொல்ல, ஆச்சரியமாகிறாள் சாந்தி.
அடுத்ததாக, தூங்கிக் கொண்டிருக்கும் கண்ணம்மாவை எழுப்புகிறாள் லட்சுமி. கண்ணம்மா விழிக்காததால் பதறிப்போகும் லட்சுமி, பாரதிக்கு போன் செய்கிறாள். பாரதி போனை எடுக்காததால், வெண்பாவுக்கு போன் செய்து சீக்கிரம் வரச்சொல்கிறாள் லட்சுமி. கண்ணம்மா வீட்டிற்கு வரும் வெண்பா, கண்ணம்மாவை செக் பண்ணிவிட்டு, தவறான ஊசியை போடப்போக, கண் விழிக்கிறாள் கண்ணம்மா. அதைப்பார்த்து அதிர்ச்சியாகும் வெண்பா, உங்கம்மாவுக்கான மருந்து என்கிட்ட தான் இருக்கு என லட்சுமியிடம் சொல்லி சமாளிக்கிறாள். பின்னர் லட்சுமி வெண்பாவை டீ குடிக்க சொல்ல, கண்ணம்மா டீ போடுகிறாள். அப்போது லட்சுமி, எங்க வீட்டுக்கு சௌந்தர்யாவும் பாரதியும் மட்டும் தான் வருவாங்க என்கிறாள். பின்னர் லட்சுமி பால் வாங்க செல்ல, இன்னொரு குழந்தை பத்தி பேசி கண்ணம்மாவை வெறுப்பேற்றுகிறாள்.
கண்ணம்மா கோபமாக இப்ப நான் என்ன செய்யணும் என கேட்க, எனக்கு போன் பண்ணி மிஸஸ் வெண்பா பாரதி மேடமா என கேட்கணும் என்கிறாள். உன் குழந்தை உன்கிட்ட வரணும்னா நான் சொல்றத நீ கேட்டு தான் ஆகணும் என வெண்பா சொல்ல, உன் கழுத்த நெரிச்சு கொல்லனும்போல தோணுது என கோபமாகிறாள் கண்ணம்மா. உடனே வெண்பா, அப்ப உன் பொண்ணு பத்தின விஷயம் தெரியாமலே போயிடும், பாவம் உன் பொண்ணு எங்க பிச்சை எடுத்துக்கிட்டு இருப்பாளா என சிரிக்கிறாள். பின்னர் நான் சொல்றது நீ கண்டிப்பா கேட்டாகணும் என வெண்பா சொல்ல, நீ இவ்வளவு கேவலமானவளா என திட்டுகிறாள் கண்ணம்மா. பின்னர் வெண்பாவுக்கு தட்டில் டீ கொடுத்து வெறுப்பேற்றுகிறாள் கண்ணம்மா. இத்துடன் இன்றைய எபிஷோடு நிறைவடைகிறது.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.