New Update
/tamil-ie/media/media_files/uploads/2021/08/barathikannamma-aug-18-epi.jpg)
Vijay TV barathikannamma serial today episode kannamma leaves lakshmi: லட்சுமியை பிரிந்து கவலைப்படும் கண்ணம்மா, அகிலிடம் கோபப்படும் அஞ்சலி, இன்றைய எபிஷோடில்…
விஜய் டிவியில் ஒளிப்பரப்பாகும் பாரதி கண்ணம்மா சீரியலில் இன்று என்ன நடந்தது என்பதைப் பார்ப்போம்.
இன்றைய எபிஷோடில்…
கீழே இறங்கி வரும் லட்சுமி, எல்லோரும் ஒன்றாக இருப்பதைப் பார்த்து அதிர்ச்சியாகிறாள். பின்னர் கண்ணம்மாவை அம்மா என கூப்பிட வாயெடுத்தவள், சமையல் அம்மா என்று கூப்பிட, நிம்மதி அடைந்தாள் கண்ணம்மா. பின்னர் லட்சுமியிடம் எப்படி இருக்க என கேட்க, இப்ப நல்லா இருக்கேன் என்று சொல்கிறாள். அதன்பின், லட்சுமியைக் கூட்டிக் கொண்டு கண்ணம்மா வெளியே கிளம்ப முயல, லட்சுமியை பிடித்து இழுக்கிறான் பாரதி. பின்னர் லட்சுமியிடம், உனக்கு உடம்பு இன்னும் சரியா குணமாகல, நான் உன்னை நல்ல பார்த்துக்கிறேன் என்று சொல்ல, நானும் நல்ல பார்த்துக்குவேன் என்று சொல்கிறாள் கண்ணம்மா. மேலும், லட்சுமியோட அம்மா என்னை நம்பி விட்டுருக்காங்க, நான் அவங்க கிட்ட ஒரு டாக்டர் வீட்டில் இருக்குறதா சொல்ல முடியாது என்கிறாள்.
அதற்கு பாரதி கூலாக, லட்சுமிக்கு நான் நிறைய உதவி செஞ்சுருக்கேன், அதனால் என் கூட இருக்கட்டும் என சொல்ல, அவங்க போன் பண்ண எப்படி பேசுறது என கேட்கிறாள் கண்ணம்மா. அவங்க நம்பர என்கிட்ட கொடு நான் பேச வைக்கிறேன் என்று சொல்கிறான் பாரதி. சௌந்தர்யா உடனே நீ செய்யுறது நல்லா இல்லை என சொல்ல, கண்ணம்மாவால் எல்லா குழந்தைகள பார்த்துக்கிறது கஷ்டம், அதனால் லட்சுமி இங்க இருக்கட்டும் என முடிவாக சொல்கிறான் பாரதி. இதனால் எதுவும் சொல்ல முடியாமல் கிளம்புகிறாள் கண்ணம்மா.
பின்னர், பாரதி இன்னும் மாறாததை நினைத்து எல்லோரும் கவலைப்படுகிறார்கள். கண்ணம்மா கஷ்டப்படுவதைப் பார்த்து கவலையாக கிளம்புகிறார் கண்ணம்மாவின் அப்பா.
அடுத்து, பாரதிக்கு எப்படி உண்மை தெரிஞ்சது என யோசிக்கிறாள் கண்ணம்மா. மேலும் லட்சுமியை நினைத்து கவலைப் படுகிறாள். லட்சுமியை எப்படியாவது கூட்டிட்டு வரணும் என முடிவெடுக்கிறாள் கண்ணம்மா. கண் விழிக்கும் ஹேமா, லட்சுமிக்கு என்ன ஆச்சு என கேட்க, நல்லா இருப்பதாக சொல்கிறாள். லட்சுமி எங்க என கேட்க, பாரதி உங்க வீட்டில் கூட்டிட்டு போய் வச்சுருக்காரு என்று சொல்கிறாள்.
அடுத்து, அஞ்சலியிடம், என்ன பிரச்சனை என கேட்கிறான் அகில். அஞ்சலி எதுவும் இல்லை என சமாளிக்கிறாள். ஆனால் அகில், அஞ்சலிக்கு குழந்தை குறித்து நிறைய அட்வைஸ் செய்கிறான். இதனால், அஞ்சலி இயல்பாக இருப்பது மாறி காட்டிக் கொள்கிறாள். பின்னர் அகில், வெண்பாவ நம்ப முடியாது, வேற ஒரு டாக்டர பார்ப்போம் என சொல்ல, அதெல்லாம் எதுவும் வேணாம் என கோபமாக தடுக்கிறாள் அஞ்சலி.
அடுத்து, லட்சுமியை நினைத்து கவலைப்படும் கண்ணம்மா, லட்சுமி அவளோட அப்பா கூட தானே இருக்க என சமாதானம் ஆனாலும், பாரதியின் இந்த மாற்றத்தை நினைத்து வருத்தப்படுகிறாள். லட்சுமியிடம் அம்மா அப்பா பத்தி பாரதி கேட்ட, லட்சுமி என்ன சொல்வாள் என்று பதற்றப்படுகிறாள். இத்துடன் இன்றைய எபிஷோடு நிறைவடைகிறது.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.