Vijay TV Serial; கண்ணம்மாவோடு ரொமான்ஸில் பாரதி… என்ன செய்யப் போகிறாள் வெண்பா

Vijay TV barathikannamma serial today episode kannamma's good teaching: குழந்தைகளுக்கு குட் டச், பேட் டச் குறித்து விளக்கும் கண்ணம்மா, பாரதியும் கண்ணம்மாவும் ரொமான்ஸ் செய்வதாக கதறும் வெண்பா, இன்றைய எபிஷோடில்…

Vijay TV barathikannamma serial today episode kannamma's good teaching: குழந்தைகளுக்கு குட் டச், பேட் டச் குறித்து விளக்கும் கண்ணம்மா, பாரதியும் கண்ணம்மாவும் ரொமான்ஸ் செய்வதாக கதறும் வெண்பா, இன்றைய எபிஷோடில்…

author-image
WebDesk
New Update
Vijay TV Serial; கண்ணம்மாவோடு ரொமான்ஸில் பாரதி… என்ன செய்யப் போகிறாள் வெண்பா

விஜய் டிவியில் ஒளிப்பரப்பாகும் பாரதி கண்ணம்மா சீரியலில் இன்று என்ன நடந்தது என்பதைப் பார்ப்போம்.

இன்றைய எபிஷோடில்…

Advertisment

தூங்கி கொண்டிருக்கும் கண்ணம்மாவை காதலுடன் பார்க்கும் பாரதி, நல்ல வாழ்க்கையை நீ தவற விட்டுவிட்டதாகக் கூறி அவளது கன்னத்தை தொட முயற்சிக்கிறான். அப்போது கண்ணம்மா கண் விழிக்க, இருவருக்குள்ளும் காதல் பொங்குகிறது. பின்னர் பாரதி, நான் உன் புருசன் தானே, உன் பக்கத்தில வரக்கூடாதா என கேட்கிறான். இதைக்கேட்டு கண்ணம்மா ஆனந்த கண்ணீருடன், மாமா என அழைக்கிறாள். பின்னர் இருவரும் காதலுடன் கட்டிப்பிடித்து கொள்கிறார்கள். இப்படியாக கனவு காணும் வெண்பா, அதிர்ச்சியுடன் எழுந்து கத்துகிறாள். சாந்தி வந்து, அவளை இது கனவு என சமாதானப்படுத்துகிறாள். அப்போது, கண்ணம்மா ஏதோ ப்ளான் பண்ணி தான் பாரதியை தங்க வச்சுருக்க என கோபப்படுகிறாள்.

publive-image

அடுத்து, விளையாடி கொண்டிருக்கும் ஹேமாவிடம் உங்க அப்பா எந்திரிருட்டாரா என கண்ணம்மா கேட்க, நீங்களே போய் பாருங்க என்கிறாள். தூக்கி கொண்டிருக்கும் பாரதி, நன்றாக போர்த்தி விடுகிறாள். பின்னர் குழந்தைகளிடம், பொம்மையை வைத்து ’குட் டச், பேட் ட்ச்’ குறித்து விளக்குகிறாள் கண்ணம்மா. அப்போது எழுந்து வரும் பாரதி, கண்ணம்மா சொல்லிக் கொடுப்பதை ஆச்சரியமாக பார்த்து, ஹேமாவுக்கு இப்படி ஒரு அம்மா வேணும் என நினைக்கிறான். பின்னர் பாரதியும், பெண் குழந்தைகளைப் போலவே, ஆண் குழந்தைகளுக்கும் ஒழுக்கமாக நடக்க கத்துக் கொடுக்கனும், யாராவது தப்பா தொட்ட பயப்படாம ’டோண்ட் டச்’ சொல்லனும் என்று சொல்கிறான்.

Advertisment
Advertisements

publive-image

அடுத்து, குழந்தைகள் இருவரும் கண்ணம்மாவை வரைகிறார்கள். அங்கு வரும் பாரதியிடம், இருவரும் வரைந்ததை காட்ட ஆச்சரியத்தோடு, கண்ணம்மாவையும் காதலோடு பார்க்கிறான். பின்னர் கிளம்புவதாக கூறி, அவனது டிரஸ்ஸை கேட்கிறான். குழந்தைகளிடம் பாரதி கிளம்புவதாக கூற, வேலைக்கு போய்ட்டு ராத்திரி தூங்க இங்கேயே வந்துருங்க என்கிறாள் லட்சுமி. அப்போது மாநகராட்சி ஊழியர் வந்து, உங்க 4 பேருக்கும் கொரோனா இல்லை என்று சொல்கிறார். குழந்தைகளிடம் சொல்லிவிட்டு கிளம்புகிறான் பாரதி. இத்துடன் இன்றைய எபிஷோடு நிறைவடைகிறது.

publive-image

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Barathi Kannamma Serial Today Episode Vijay Tv

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: