Vijay TV Serial; ஒரு சண்டை… உடனே சமாதானம்.. அதான் குழந்தைகள்… பெருசா ப்ளான் போடும் வெண்பா

Vijay TV barathikannamma serial today episode lakhsmi jealous hema: ஹேமாவிடம் சண்டையிட்டு சமாதானமாகும் லட்சுமி, பாரதியை கண்ணம்மா வீட்டு போகவிடாமல் தடுக்க திட்டமிடும் வெண்பா, இன்றைய எபிஷோடில்…

Vijay TV barathikannamma serial today episode lakhsmi jealous hema: ஹேமாவிடம் சண்டையிட்டு சமாதானமாகும் லட்சுமி, பாரதியை கண்ணம்மா வீட்டு போகவிடாமல் தடுக்க திட்டமிடும் வெண்பா, இன்றைய எபிஷோடில்…

author-image
WebDesk
New Update
Vijay TV Serial; ஒரு சண்டை… உடனே சமாதானம்.. அதான் குழந்தைகள்… பெருசா ப்ளான் போடும் வெண்பா

விஜய் டிவியில் ஒளிப்பரப்பாகும் பாரதி கண்ணம்மா சீரியலில் இன்று என்ன நடந்தது என்பதைப் பார்ப்போம்.

இன்றைய எபிஷோடில்…

Advertisment

பாரதி, கண்ணம்மாவோட வீட்டுக்கு போனதையும், குழந்தைகளை வெளியே கூட்டி போனது குறித்தும் சௌந்தர்யாவும் வேணுவும் பேசிக் கொண்டிருக்கிறார்கள். அப்போது அங்கு பாரதி வர, ஃபிரண்ட பார்த்து பேசுனியா என கேட்கிறாள் சௌந்தர்யா. பார்த்துட்டேன் என பாரதி சொல்ல, என்ன பேசுனிங்க என கேட்கிறாள். பாரதி இப்ப அதுவா முக்கியம், எனக்கு பசிக்குது சாப்பாடு போடுங்க என சொல்ல, பாரதியை வெறுப்பேற்றுவதற்காக உப்புமா செய்து வைத்ததை நினைத்து சந்தோஷமாகும் சௌந்தர்யா, பாரதிக்கு உப்புமாவை சாப்பிட கொடுக்கிறாள். உப்புமாவை பார்த்ததும் அதிர்ச்சியாகும் பாரதி, எனக்கு தான் சின்ன வயசில் இருந்து உப்புமா பிடிக்காதே என கேட்க, கண்ணம்மா வீட்டில் நடந்ததை குத்திக் காட்டுகிறாள் சௌந்தர்யா. இதைக்கேட்டு அமைதியாகும் பாரதியிடம், ஹேமாவ பார்க்க போறதுக்கு ஏன் பொய் சொல்ற, நீ இப்ப பண்றது நல்ல விஷயம் தான் அத வெளிப்படைய செய் என சௌந்தர்யா சொல்ல, நா ஹோட்டலில் சாப்பிட்டுக்கிறேன் என வெளியே கிளம்புகிறான்.

publive-image

அடுத்து, கண்ணம்மாவின் சமையலை பாராட்டுகிறாள் ஹேமா. அப்போது, கண்ணம்மாவும் ஹேமாவும் ஜாலியாக பேசிக் கொண்டே, ஹேமாவுக்கு ஊட்டி விடுவதை பார்க்கும் லட்சுமி பொறாமைப்படுகிறாள். கோபத்தில் ஹேமாவின் டிரஸ்களை தூக்கி போடுகிறாள். ஹேமா வந்து ஏன் என கேட்க, சமையல் அம்மா உன்ன மட்டும் தான் கொஞ்சுறாங்க, நீ இங்க இருந்து கிளம்பு என கோபமாக கத்துகிறாள். இதைக்கேட்டு ஹேமா அழுதவாறே, கிளம்ப முடிவெடுக்கிறாள். அப்போது, சமையல் அம்மாவை எனக்கு ரொம்ப பிடிக்கும், அவங்களுக்காக எங்க வீட்ட விட்டுட்டு வந்துட்டேன், அவங்க அளவுக்கு என்மேல பாசம் காட்ட யாருமில்லை என அழுதுக்கொண்டே கிளம்புகிறாள். உடனே மனசு மாறும், லட்சுமி ஹேமாவிடம் மன்னிப்பு கேட்டு, இங்கேயே இரு என சொல்கிறாள். பின்னர் தோழிகள் இருவரும் கட்டிக் கொள்கிறார்கள்.

Advertisment
Advertisements

அடுத்து, பாரதி அடிக்கடி கண்ணம்மா வீட்டுக்கு போறத நினைச்சு கோபமாகிறாள் வெண்பா. இதற்கு ஹேமா தான் காரணம் என சாந்தி ஏத்திவிடுகிறாள். ஹேமா மேல பாசமா இல்ல கண்ணம்மா மேல கோபம் குறைஞ்சிடுச்சா என சந்தேகப்படுகிறாள் வெண்பா. பாரதி இனி கண்ணம்மா வீட்டுக்கு போகாத மாதிரி ஏதாவது செய்யனும் என யோசிக்கிறாள் வெண்பா.

அடுத்ததாக, பைலட் ஆக போவதாக சொன்ன ஹேமாவிடம் பிளைட்ல போயிருக்கியா என லட்சுமி கேட்க, போயிருப்பதாக சொல்கிறாள். அப்போது கண்ணம்மா வந்து தினமும் தூங்குறதுக்கு முன்னாடி யாருக்காவது, மன்னிப்பும், நன்றியும் சொல்லனும் என சொல்கிறாள். லட்சுமியிடம் நீ யாருக்கு சொல்லனும் என கேட்க, ஹேமாவ நா அவளோட வீட்டுக்கு போயிடுனு கோபமா சொல்லிட்டேன், அதுக்காக மன்னிப்பு கேட்டுக்கிறேன். அதுபோல நன்றி டாக்டர் அங்கிளுக்கு சொல்றேன். அவர் எனக்கு படிக்க உதவியிருக்காரு என சொல்கிறாள். அடுத்ததாக, ஹேமா, பாரதியை விட்டு வந்ததால் அவருக்கு மன்னிப்பு கேட்டுக்கிறேன். என்னை நல்லா, அம்மா மாதிரி பார்த்துக்கிறதுக்காக சமையல் அம்மாவுக்கு நன்றி என்று சொல்கிறாள். இருவரும் மாற்றி மாற்றி பாரதிக்கும் கண்ணம்மாவுக்கும் நன்றி சொல்கிறார்கள். இத்துடன் இன்றைய எபிஷோடு நிறைவடைகிறது.

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Barathi Kannamma Serial Today Episode Vijay Tv

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: