Advertisment

Vijay TV Serial; ஹேமா பற்றிய உண்மையை கேட்கும் கண்ணம்மா… சௌந்தர்யாவின் பதில் என்ன?

Vijay TV barathikannamma serial today episode saundarya in dilemma: வெண்பாவை அசிங்கப்படுத்திய அஞ்சலி, ஹேமா என்னோட குழந்தையா என சௌந்தர்யாவிடம் கேட்கும் கண்ணம்மா, இன்றைய எபிஷோடில்…

author-image
WebDesk
Sep 06, 2021 13:04 IST
Vijay TV Serial; ஹேமா பற்றிய உண்மையை கேட்கும் கண்ணம்மா… சௌந்தர்யாவின் பதில் என்ன?

விஜய் டிவியில் ஒளிப்பரப்பாகும் பாரதி கண்ணம்மா சீரியலில் இன்று என்ன நடந்தது என்பதைப் பார்ப்போம்.

Advertisment

இன்றைய எபிஷோடில்…

வெண்பாவுக்கு இன்னும் கல்யாணம் ஆகல என அஞ்சலி சொல்ல, அதிர்ச்சியாகிறாள் வெண்பா. உண்மையை தெரிந்துக் கொண்ட கண்ணம்மா, பாரதி மீது வெறுப்பாகிறாள். அப்போது லட்சுமி, வெண்பா, டாக்டர் அங்கிளோட மனைவி இல்லையா என கேட்க, இல்லை என்கிறாள் அஞ்சலி. உடனே ஹேமாவும், அவங்க என் அப்பாவோ பெஸ்ட் ஃபிரண்ட். என் அம்மா இல்லை என்கிறாள். அப்போது ஒரு அம்மா, பாரதியோட மனைவி நீ இல்லையா, அப்புறம் ஏன் சடங்கு செய்ய வந்த, ஃபிரண்ட்ன எல்லா இடத்தும் வர்றதா என கேட்க, எதுவும் சொல்ல முடியாமல் நிற்கிறாள் வெண்பா. அந்த அம்மா மேலும், பொது இடத்தில் எப்படி நடந்துக்கிறதுனு தெரியாது, நீ எல்லாம் என்ன ஜென்மமோ என திட்ட, தெரியாம நடந்திருச்சு என சமாதானப்படுத்துகிறாள் சௌந்தர்யா.

publive-image

பின்னர் கண்ணம்மா வெண்பாவை முறைக்க, தலைகுனிந்தபடி நிற்கிறாள். அப்போது அஞ்சலிக்கு பாரதி ஆசீர்வாதம் செய்ய தொடங்க, கண்ணம்மாவை அழைக்கிறாள் அஞ்சலி. அசிங்கப்பட்டதை நினைத்து கவலைப்படும் வெண்பா, அஞ்சலியை பழிவாங்க துடிக்கிறாள். அப்போது கண்ணம்மாவும் பாரதியும் சேர்ந்து அஞ்சலிக்கு சடங்கு செய்கிறார்கள். இதைப்பார்த்து எரிச்சலாகிறாள் வெண்பா. அப்போது சௌந்தர்யா குடும்பமாக போட்டோ எடுக்கணும் என வெண்பாவிடம் சொல்கிறாள். பாரதியும் கண்ணம்மாவும் அருகருகே நிற்க, அதை கடுப்புடன் போட்டோ எடுக்கிறாள் வெண்பா.

publive-image

அடுத்ததாக, போட்டோவைப் பார்த்து சந்தோஷப்படுகிறார்கள் வேணுவும் சௌந்தர்யாவும். பாரதியும் கண்ணம்மாவும் சீக்கிரம் ஒண்ணு சேரணும் என சௌந்தர்யா சொல்லி கொண்டிருக்க, அங்கு வருகிறாள் கண்ணம்மா. கண்ணம்மாவைப் பார்த்ததும் சௌந்தர்யா எஸ்கேப் ஆக நினைக்க, கண்ணம்மா தடுத்து நிறுத்துகிறாள். பின்னர் எனக்கு உண்மை தெரிஞ்சாகனும் என சொல்லி, பாரதிக்கும் வெண்பாவுக்கும் கல்யாணம் நடக்கலைனு ஏன் சொல்லல என கேட்க, அது பாரதியோட பொய் என்று சொல்கிறார் வேணு. மேலும், பாரதி சத்தியம் வாங்கிட்டதால சொல்ல முடியல என்றும் சொல்கிறார். அப்போது கண்ணம்மா, அவருக்கு இன்னொரு கல்யாணம் ஆகலைனு தெரிஞ்ச, நான் ஒடி வந்து குடும்பம் நடத்த போறேனா என்று சொல்கிறாள். பின்னர் ஹேமா யாரு, ஹேமாவோட அம்மா யாரு என கண்ணம்மா கேட்க, அதிர்ச்சியாகிறாள் சௌந்தர்யா. பதில் சொல்ல முடியாமல் நிற்கும் சௌந்தர்யாவிடம் மீண்டும் மீண்டும் கண்ணம்மா கேட்க, ஹேமாவ நாங்க தத்து எடுத்துருக்கோம் என்று சொல்கிறாள் சௌந்தர்யா.

publive-image

ஆனாலும் சந்தேகம் தீராத கண்ணம்மா, ஹேமா பார்க்குறதுக்கு என்னை மாதிரியே இருக்காளே அது எப்படி என்று கேட்கிறாள். மேலும் ஹேமாவுக்கு எனக்கும் ஏதோ ஒரு உணர்வு இருக்கு காரணம் என்ன எனவும் கேட்கிறாள். அது எப்படி எனக்கு தெரியும் என சௌந்தர்யா சமாளிக்க, எனக்கு இரண்டு குழந்தை பிறந்ததாக டாக்டர் சொன்னாங்க, ஒண்ணு லட்சுமினா, இன்னொரு குழந்தை எங்க என்று கேட்கிறாள் கண்ணம்மா. உனக்கு யாரோ தப்பா சொல்லிருக்காங்க என சௌந்தர்யா சொல்ல, டாக்டர் பொய் சொல்ல மாட்டாங்க, நீங்க பொய் சொல்லாதீங்க என்று கண்ணம்மா சொல்கிறாள். மேலும் எனக்கு பிறந்த இரண்டு குழந்தைகளில் ஒண்ண நீங்க எடுத்து கொண்டு போய் உங்க மகன்கிட்ட கொடுத்து, ஆதரவு இல்லாத குழந்தைனு வளர்க்க சொல்லிருக்கீங்க, அந்த குழந்தைதான் ஹேமா, ஹேமா என் குழந்தை, நான் பெத்த குழந்தை என்கிறாள் கண்ணம்மா. இதைக்கேட்டு அதிர்ச்சியாகிறாள் சௌந்தர்யா. இத்துடன் இன்றைய எபிஷோடு நிறைவடைகிறது.

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

#Barathi Kannamma Serial #Today Episode #Vijay Tv
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment