Vijay TV Serial; பாரதியை வெறுப்பேற்றும் சௌந்தர்யா… கண்ணம்மாவை அம்மாவாக நினைக்கும் ஹேமா

Vijay TV barathikannamma serial today episode soundarya concerns hema: கண்ணம்மாவுடன் செல்பி எடுத்த பாரதியை வெறுப்பேற்றும் சௌந்தர்யா, கண்ணம்மாவை அம்மாவாக நினைக்கும் ஹேமா இன்றைய எபிஷோடில்…

Vijay TV barathikannamma serial today episode soundarya concerns hema: கண்ணம்மாவுடன் செல்பி எடுத்த பாரதியை வெறுப்பேற்றும் சௌந்தர்யா, கண்ணம்மாவை அம்மாவாக நினைக்கும் ஹேமா இன்றைய எபிஷோடில்…

author-image
WebDesk
New Update
Vijay TV Serial; பாரதியை வெறுப்பேற்றும் சௌந்தர்யா… கண்ணம்மாவை அம்மாவாக நினைக்கும் ஹேமா

விஜய் டிவியில் ஒளிப்பரப்பாகும் பாரதி கண்ணம்மா சீரியலில் இன்று என்ன நடந்தது என்பதைப் பார்ப்போம்.

இன்றைய எபிஷோடில்…

Advertisment

ஹேமா, கண்ணம்மாவிடம் நெருங்கி பழகுவதை பாரதியால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை என வேணுவிடம் சொல்கிறாள் சௌந்தர்யா. ஹேமாவை பாரதி அந்த அளவுக்கு நேசிக்கிறான் என சொல்கிறார் வேணு. உண்மையிலே ஹேமா தன்னோட பொண்ணு என தெரியாமல் பாரதி இந்த அளவுக்கு பாசம் வைத்திருப்பது சந்தோஷமா இருக்கு, ஆனா கண்ணம்மா கூட பழகுறதுதான் பிடிக்கல என சௌந்தர்யா சொல்ல, அதற்கு வேணு எல்லா உண்மையும் தெரியுறப்ப பாரதி, என்ன பண்ணுவானு தெரியல என்கிறார். உடனே சௌந்தர்யா எல்லா உண்மையையும் சொல்லி அவன நிக்க வச்சு கேள்வி கேட்கனும் என்கிறாள். அதற்கு பாரதி அமெரிக்கா போகாம இங்க இருக்கணுமே என்கிறார் வேணு.

என்ன மீறி எப்படி கூட்டிட்டு போறானு பார்க்குறேன் என சௌந்தர்யா சொல்ல, அதற்கு வேணு, பாரதி ஹேமாவை வச்சு நம்மள ஒத்துக்க வைப்பான் என்கிறார். அதுக்கு என்ன பண்ணனும் என எனக்கு தெரியும் என்கிறாள் சௌந்தர்யா. மேலும், இப்ப கண்ணம்மா வீட்டில் என்ன பண்ணிக்கிட்டு இருக்கானோ என கவலைப்படுகிறாள் சௌந்தர்யா.

publive-image

Advertisment
Advertisements

அடுத்து, ஹேமாவ கடத்துனது யாருனு நாம கண்டுபிடிக்கனும் என்கிறாள் சௌந்தர்யா. அப்போது அங்கு பாரதியும் ஹேமாவும் வருகிறார்கள். கண்ணம்மாவைப் பற்றி கேட்கிறாள் சௌந்தர்யா. அங்கு நடந்ததை ஒன்னு விடாமல் சொல்கிறாள் ஹேமா. கண்ணம்மா பாரதிக்கு கேசரி கொடுத்ததையும், பாரதி கண்ணம்மாவுக்கு நன்றி சொன்னதையும் சொல்ல, பாரதியை ஆச்சரியமாக பார்க்கிறாள் சௌந்தர்யா. அடுத்து எல்லோரும் ஒண்ணா சேர்ந்து போட்டோ எடுத்ததை ஹேமா காட்ட, ஆச்சரியப்படுகிறாள் சௌந்தர்யா. மேலும், பாரதியை வெறுப்பேற்றுகிறாள் சௌந்தர்யா. எதுவும் சொல்ல முடியாமல் அங்கிருந்து செல்கிறான் பாரதி. அடுத்து, ஒருநாள் கண்ணம்மா மற்றும் லட்சுமியோடு பாரதி சேர்வான் என நம்பிக்கையோடு சொல்கிறாள் சௌந்தர்யா.

அடுத்ததாக, கண்ணம்மாவுக்கு தோசை சுட்டு கொடுக்கிறாள் லட்சுமி. லட்சுமி தோசை சுடும் அழகை ரசிக்கிறாள் கண்ணம்மா. அப்போது லட்சுமி, ஹேமா ஏன் உன்னை சமையல் அம்மானு கூப்பிடுறா என கேட்க அதிர்ச்சியாகிறாள் கண்ணம்மா. ஏன் என லட்சுமியிடம் கேட்க, ஹேமாவ பார்க்கனும் போல தோணுது, ஹேமா வீட்டுக்கு போகலாமா என கேட்கிறாள். அப்புறம் போகலாம் என சமாளிக்கிறாள் கண்ணம்மா.

publive-image

அடுத்து, கொரோனாவை நினைத்து கவலைப்படுகிறாள் கர்ப்பமாக இருக்கும் அஞ்சலி. மேலும் தனக்கு இருக்கும் நெஞ்சுவலி பற்றியும் கவலைப்படும் அஞ்சலி, குழந்தை நல்லபடியா பொறக்கனும் என வேண்டிக்கொள்கிறாள். அடுத்து ஹேமா கண்ணம்மாவை அம்மா என வரைந்து வைத்திருப்பதைப் பார்க்கும் சௌந்தர்யா, கண் கலங்குகிறாள். அப்போது, என்னோட அம்மா பேரு என்ன என கேட்கிறாள் ஹேமா. எங்களுக்கு தெரியாது, உனக்கு தெரியுமா என சௌந்தர்யா கேட்க, தெரியும் என சொல்லும் ஹேமா, கண்ணம்மா தான் எங்க பேர் என சொல்கிறாள். இதைக் கேட்டு அதிர்ச்சி அடைகிறாள் சௌந்தர்யா. இத்துடன் இன்றைய எபிஷோடு நிறைவடைகிறது.

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Barathi Kannamma Serial Today Episode Vijay Tv

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: