scorecardresearch

Vijay TV Serial; ஆஹா… பாரதி திருந்திட்டாருப்பா… வெண்பாவிடம் செம்ம கோபம்!

Vijay TV barathikannamma serial today episode venba argue with barathi: என் வாழ்க்கையில நீ தலையிடாத என வெண்பாவிடம் கோபப்படும் பாரதி, அகிலை வேறு கல்யாணம் பண்ணிக்கனும் என வலியுறுத்தும் அஞ்சலி இன்றைய எபிஷோடில்…

Vijay TV Serial; ஆஹா… பாரதி திருந்திட்டாருப்பா… வெண்பாவிடம் செம்ம கோபம்!

விஜய் டிவியில் ஒளிப்பரப்பாகும் பாரதி கண்ணம்மா சீரியலில் இன்று என்ன நடந்தது என்பதைப் பார்ப்போம்.

இன்றைய எபிஷோடில்…

பாரதி விஷயத்தில் இன்னும் கவனமாக இருக்க வேண்டும் என நினைக்கும் வெண்பா, அவன் ஹேமாவ காரணமா வச்சு கண்ணம்மா வீட்டுக்கு அடிக்கடி போறான், முதல்ல அத சரி பண்ணனும் என திட்டமிடுகிறாள். அப்போது அங்கு வரும் பாரதியிடம் எங்க போன என வெண்பா கேட்க, ஃபிரண்ட பார்த்துட்டு வருவதாக கூறுகிறான். அதுக்கு முன்னாடி எங்க போன என வெண்பா கேட்க, பாரதி அதிர்ச்சியாகிறான். ஹேமாவ பார்க்க கண்ணம்மா வீட்டுக்கு போனேன் என சொல்லும் பாரதியிடம், நீ ரொம்ப மாறிட்ட என்கிறாள்.

பின்னர் பாரதியை கண்ணம்மாவின் பழைய விஷயங்களை வைத்து குத்திக்காட்ட, கோபமாகும் பாரதி, வெண்பாவிடம் கத்துகிறான். ஆனால் வெண்பா அமைதியாக, கண்ணம்மா உனக்கு செஞ்ச துரோகத்த மறந்துட்டியா, உனக்கு சுயமரியாதை இல்லையா என கேட்கிறாள். இப்படி பேசாதே என பாரதி டென்ஷனாக, நீ அசிங்கப்படுறத பார்க்க முடியாமத்தான் உன்கிட்ட இப்படி பேசுறேன், ஹேமாவுக்காக உன் தன்மானத்த விட்டுக்கொடுக்காதே என்கிறாள் வெண்பா. அதற்கு ஹேமா எனக்கு முக்கியம், என் வாழ்க்கையில நீ தலையிடாதே என கோபமாக சொல்லிவிட்டு செல்கிறான் பாரதி.

அடுத்ததாக, லட்சுமியையும் ஹேமாவையும் ஹோட்டலுக்கு அழைத்து வருகிறாள் சௌந்தர்யா. இருவரும் ஐஸ்கிரீம் சாப்பிட்டுக் கொண்டே ஜாலியாக பேசிக்கொண்டு இருக்கிறார்கள். அப்போது சௌந்தர்யா, ஹேமாவிடம் சமையல் அம்மா வீட்டில் எப்படி இருக்க என கேட்க, லட்சுமியும் வந்ததால் ரொம்ப சந்தோஷமாக இருப்பதாக சொல்கிறாள். பின்னர் லட்சுமி எங்க அம்மா ரொம்ப கண்டிப்பா நடந்துப்பாங்க, ஆனா நா நல்லா படிச்சு கலெக்டர் ஆவேன் என சொல்ல, ஹேமா நா அப்பா மாதிரி டாக்டர் ஆவேன் என சொல்கிறாள். அடுத்து இரண்டு பேரும் ஒரே நாளில் பிறந்திருக்கோம் அப்ப நாம ரெண்டு பேரும் ட்வின்ஸ் தான் என பேசிக்கொள்ள, கவலையாகிறாள் சௌந்தர்யா.

அடுத்து, குழந்தையால் தன் உயிர் போகப்போவதை நினைத்து கவலையாக இருக்கிறாள் அஞ்சலி. மேலும் தாய்ப்பாசம் இல்லாமல் குழந்தை ஏங்கப் போவதை நினைத்து வருத்தமாகிறாள் அஞ்சலி. அப்போது அங்கு வரும் அகில், அஞ்சலிக்கு ஆறுதலாக பேசிக்கொண்டிருக்கிறான். பின்னர் எந்த மருத்துவமனையில் குழந்தைப் பெற்றுக்கொள்வது என பேசிக் கொள்கிறார்கள். பின்னர் மெதுவாக, அஞ்சலி, குழந்தை பிறக்கும்போது, எனக்கு ஏதேனும் ஆன, நீ இன்னொரு கல்யாணம் பண்ணிக்கனும் என சொல்கிறாள். இதைக்கேட்டு டென்ஷனாகும் அகில், இப்படியெல்லாம் பேசாதே என சொல்கிறான். இத்துடன் இன்றைய எபிஷோடு நிறைவடைகிறது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Stay updated with the latest news headlines and all the latest Entertainment news download Indian Express Tamil App.

Web Title: Vijay tv barathikannamma serial today episode venba argue with barathi