New Update
/tamil-ie/media/media_files/uploads/2021/09/barathikannamma-sep-14-epi.jpg)
Vijay TV barathikannamma serial today episode Venba gets Suspicious: சௌந்தர்யா எதையோ மறைப்பதாக சந்தேகப்படும் பாரதி, ஹேமா பற்றிய உண்மையை தெரிந்துக் கொள்ள விரும்பும் கண்ணம்மா, இன்றைய எபிஷோடில்…
விஜய் டிவியில் ஒளிப்பரப்பாகும் பாரதி கண்ணம்மா சீரியலில் இன்று என்ன நடந்தது என்பதைப் பார்ப்போம்.
இன்றைய எபிஷோடில்…
கண்ணம்மா லட்சுமிக்கு சாப்பாடு ஊட்டி விட, டாக்டர் அங்கிள் வீட்டில் விதவிதமா சமைச்சாங்க எப்படி என கேட்கிறாள் லட்சுமி. அவங்க பணக்காரங்க நிறைய செய்வாங்க என்கிறாள் கண்ணம்மா. பின்னர் இரண்டாவது குழந்தையைப் பற்றி வெண்பாகிட்ட கேட்கணும் என முடிவெடுக்கிறாள் கண்ணம்மா.
அடுத்ததாக, அஞ்சலி நிறைய பயப்படுறா என அகில் சொல்ல, அதெல்லாம் இப்ப ஒரு பிரச்சனை இல்லை என சொல்கிறார் வேணு. பின்னர் சௌந்தர்யா, கண்ணம்மா உன்கிட்ட ஏதாவது கேட்டாளா என அகிலிடம் கேட்க, இல்லை என்கிறான். ஆனால் கண்ணம்மாவுக்கு சந்தேகம் வந்துருச்சு, அவங்க கண்டுபிடிச்சிடுவாங்க என அகில் சொல்ல, பதற்றமாகிறாள் சௌந்தர்யா. பின்னர் அகில், நாம இந்த பிரச்சனையில் ஹேமா, லட்சுமியை தான் கவனமாக பார்க்க வேண்டும்.
அடுத்து அங்கு வரும் அஞ்சலியிடம், பிரக்னன்சியை நினைத்து கவலைப்படாதே என்கிறாள் சௌந்தர்யா. அப்போது அங்கு வரும் பாரதியைப் பார்த்து எல்லாரும் பதற்றமாக, என்ன விஷயம் என கேட்கிறான் பாரதி. ஒண்ணுமில்லை என அகில் சமாளித்து, அங்கு வரும் ஹேமாவுடன் லட்சுமியை பார்க்க கிளம்புகிறான். ஆனால் சௌந்தர்யா, இந்த நேரத்தில் ஹேமா கண்ணம்மா வீட்டுக்கு போறது சரியா என யோசிக்கிறாள். அப்போது ஹேமா பாரதியையும் கூட அழைக்க, நான் வரல, நீயும் போக வேணாம், லட்சுமியை இங்க வர சொல்லு என்கிறான். ஆனால் ஹேமா நான் போயிட்டு வர்றேன் என கேட்க, சௌந்தர்யா போக வேணாம் என்கிறாள். ஹேமா கெஞ்ச, அகில் கூட்டி போவதாக சொல்கிறான். உடனே சௌந்தர்யா அகிலை தடுக்க, சந்தேகமாகிறான் பாரதி. பின்னர் ஹேமாவை போகச் சொல்கிறான் பாரதி.
அடுத்ததாக, டென்ஷனாக இருக்கும் வெண்பாவிடம் உங்களுக்கு பாரதியோட கல்யாணம் ஆகலனு எல்லாருக்கும் தெரிஞ்சது நல்லதுதான் என சாந்தி சொல்ல, ஏன் நான் கனவுல நல்லா இருக்குறது உனக்கு பிடிக்கலையா என கேட்கிறாள் வெண்பா. கனவு காண்பதை விட்டுட்டு நிஜத்தில் பாரதி கூட வாழ்றதுக்கு யோசிங்க என சொல்கிறாள் சாந்தி. உடனே வெண்பா நான் டென்ஷனாக இருப்பதற்கு காரணம், கண்ணம்மாவுக்கு இரண்டு குழந்தைங்க என்கிறாள். அப்ப இன்னொரு குழந்தை யாரு என சாந்தி கேட்க, ஹேமா என்கிறாள் வெண்பா. இதைக்கேட்டு அதிர்ச்சியடையும் சாந்தி, அப்படினா ஹேமா எப்படி பாரதி வீட்டில் என கேட்கிறாள். எனக்கும் அது புரியலை, இந்த சௌந்தர்யா நிறைய வேலை பார்த்துருக்காங்க, என்னை ஏமாத்திட்டாங்க என்கிறாள் வெண்பா.
அடுத்ததாக, குழந்தைக்கு ஆபத்து என்பதை நினைத்து கவலைப்படுகிறாள் அஞ்சலி. அப்போது மீண்டும் கைராசி பார்க்கும் பெண் அங்கு வருகிறார். அவர் அஞ்சலியின் பிரச்சனைக்கு பரிகாரம் ஒன்றை செய்ய சொல்கிறார். இத்துடன் இன்றைய எபிஷோடு நிறைவடைகிறது.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.