New Update
/tamil-ie/media/media_files/uploads/2021/09/barathikannamma-sep-16-epi.jpg)
Vijay TV barathikannamma serial today episode Venba manipulates kannamma: கல்யாணம் ஆச்சுனு பொய் சொல்லிகிட்டு இருக்கியா என வெண்பாவை அசிங்கப்படுத்தும் கண்ணம்மா, உன் இரண்டாவது குழந்தை எங்க இருக்குனு எனக்கு தெரியும் என கண்ணம்மாவை கதறவிடும் வெண்பா, இன்றைய எபிஷோடில்…
விஜய் டிவியில் ஒளிப்பரப்பாகும் பாரதி கண்ணம்மா சீரியலில் இன்று என்ன நடந்தது என்பதைப் பார்ப்போம்.
இன்றைய எபிஷோடில்…
காரில் வரும் வெண்பாவை வழி மறிக்கிறாள் கண்ணம்மா. பின்னர் உனக்கு கல்யாணம் ஆச்சு என பொய் சொல்றியே, வெட்கமா இல்ல, அந்த ஆளு தான் என்னை வெறுப்பேற்ற அப்படி சொன்ன, உனக்கு அறிவு இல்லயா என கேவலப்படுத்துகிறாள். மேலும், எதுக்கு பாரதி பின்னாடி சுத்திக்கிட்டு இருக்க என கண்ணம்மா கேட்க, பாரதி என் ப்ரண்ட் என்கிறாள். உடனே இவ்வளவு நாள் புருஷனு சொன்ன, இப்ப ப்ரண்டா என நக்கலடித்து, உன்ன நம்பி உன் கூட சுத்துறானே, அந்த கூறு கெட்ட மனுசன் அவன என்ன செய்யுறது என பாரதியையும் சேர்த்து திட்டுகிறாள் கண்ணம்மா. வெண்பா கோபப்பட, தலையில் தட்டுகிறாள் கண்ணம்மா.
உடனே வெண்பா உன் இரண்டாவது குழந்தையைப் பற்றி தெரியுமா என கேட்க, பரிதவிக்கும் கண்ணம்மாவின் தலையில் தட்டி அப்படி வா வழிக்கு என்கிறாள். பின்னர் கண்ணம்மா கெஞ்சிக் கேட்க, பந்தா பண்ணும் வெண்பா முதல்ல என்னை எப்படி எல்லாம் பேசின என்கிறாள். உடனே கண்ணம்மா அதற்காக மன்னிப்புக் கேட்டு, இரண்டாவது குழந்தையைப் பற்றி கெஞ்சிக் கேட்கிறாள். நான் சொல்றேன், அதுக்கு முன்னாடி ஒரு கண்டிஷன் என சீன் போடுகிறாள் வெண்பா. மேலும், கண்ணை கட்டிக்கிட்டு என்கூட வரணும் என வெண்பா சொல்ல, சம்மதித்து கூட செல்கிறாள் கண்ணம்மா.
அடுத்து, கண்ணம்மாவை கண்ணைக் கட்டி அழைத்துச் செல்லும் வெண்பா, நீ தப்பு பண்ணிட்டியே கண்ணம்மா, உன்ன கொல்லப் போறேன் என சிரிக்கிறாள். கண்ணம்மா கண் கட்டை அவிழ்க்க முயற்சிக்க, உன் பொண்ணு இருக்குற இடத்தை சொல்ல மாட்டேன் என மிரட்டுகிறாள். அப்போது போன் செய்யும் பாரதியிடம் பொண்டாட்டி மாதிரி பேசி கண்ணம்மாவை வெறுப்பேற்றுகிறாள். அப்போது கண்ணம்மாவைப் பற்றி வெண்பா கேட்க, கடுப்பாகும் பாரதி, அவள பத்தி பேச வேண்டாம் என சொல்ல சரி அப்புறம் பாக்கலாம் என போனை வைக்கிறாள். அடுத்து கண்ணம்மாவை கடற்கரை ஏரியாவுக்கு அழைத்து வரும் வெண்பா, கண் கட்டை அவிழ்த்து விட்டு கண்ணம்மாவை அலைய விடுகிறாள். கண்ணம்மா அழுது கெஞ்ச, ஒரு பெண்மணியிடம் அழைத்துச் சென்று, இவரிடம் தான் குழந்தை இருக்கு என்கிறாள். அந்த அம்மா வெண்பா சொன்ன தான் குழந்தைய காட்டுவேன் என சொல்ல, வெண்பாவிடம் மீண்டும் கெஞ்சுகிறாள் கண்ணம்மா. அப்போது எனக்கு இரண்டு குழந்தைனு உனக்கு எப்படி தெரியும் என கேட்க, துர்காவிடம் இருந்து தப்பித்து வந்து உன் குழந்தைகளில் ஒண்ணை தூக்கிட்டேன் என சொல்கிறாள் வெண்பா. அந்த குழந்தை இப்ப எங்க என கண்ணம்மா கேட்க, பிச்சை எடுக்குறவங்ககிட்ட கொடுத்துட்டேன், இப்ப உன் குழந்தை அந்த அம்மாகிட்ட பிச்சை எடுத்துக்கிட்டு இருக்கு என சொல்கிறாள். கோபப்படும் கண்ணம்மாவிடம், உன் குழந்தை அந்த வீட்டில் இல்லை, எனக்கு மட்டும் தான் எங்க இருக்குனு தெரியும், நான் அந்த அம்மாகிட்ட சொன்ன, உன் குழந்தையை கடைசி வரை பார்க்க முடியாமல் பண்ணிருவாங்க என வெண்பா சொல்ல, கதறி அழுகிறாள் கண்ணம்மா. இத்துடன் இன்றைய எபிஷோடு நிறைவடைகிறது.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.