Vijay TV Serial; கண்ணம்மா வரமாட்டா… பாரதிக்கு ஜோடி நான் தான், வெண்பாவின் புதுக்கணக்கு

Vijay TV barathikannamma serial today episode venba new plan: நான் ஒரு அனாதை என லட்சுமியிடம் கோபப்படும் கண்ணம்மா, அஞ்சலி சீமந்தத்தில் புதுக்கணக்கு போடும் வெண்பா, இன்றைய எபிஷோடில்…

Vijay TV barathikannamma serial today episode venba new plan: நான் ஒரு அனாதை என லட்சுமியிடம் கோபப்படும் கண்ணம்மா, அஞ்சலி சீமந்தத்தில் புதுக்கணக்கு போடும் வெண்பா, இன்றைய எபிஷோடில்…

author-image
WebDesk
New Update
Vijay TV Serial; கண்ணம்மா வரமாட்டா… பாரதிக்கு ஜோடி நான் தான், வெண்பாவின் புதுக்கணக்கு

விஜய் டிவியில் ஒளிப்பரப்பாகும் பாரதி கண்ணம்மா சீரியலில் இன்று என்ன நடந்தது என்பதைப் பார்ப்போம்.

Advertisment

இன்றைய எபிஷோடில்…

அஞ்சலி வளைகாப்புக்கு போவதைப் பற்றி பேசிக் கொண்டிருக்கீறார்கள் லட்சுமியும் கண்ணம்மாவும். ஆனால் யார் வீட்டுக்கு போகப் போறோம் என்பதை கண்ணம்மா கூறாததால், எங்க போறோம் என கேட்டுக்கொண்டே இருக்கிறாள். மேலும் ஏன் நமக்கு சொந்தக்காரங்க இல்லை என லட்சுமி கேட்க, நான் ஒரு அனாதை என கோபமாக பேசுகிறாள் கண்ணம்மா. மேலும், உனக்கு இங்க இருக்க பிடிக்கலனா, அந்த டாக்டர் வீட்டுக்கு போ, அங்க நிறைய பேர் இருக்காங்க என காட்டமாக சொல்கிறாள் கண்ணம்மா. பின்னர் லட்சுமி சாரி கேட்கிறாள்.

publive-image

அடுத்ததாக, சீமந்தம் நல்லபடியா நடக்குமா என வேணு கேட்க, பாக்கியா ஆசைப்பட்டு கேட்டாங்க அதான் ஒத்துக்கிட்டேன், போய் பார்த்தா தான் தெரியும் என்கிறாள் சௌந்தர்யா. அப்போது அங்கு வரும் பாரதி, சீமந்தத்திற்கு நான் வரல என சொல்ல, எல்லோரும் அதிர்ச்சியாகிறார்கள். அகில் ஏன் என கேட்க, ஹாஸ்பிட்டலில் சின்ன வேலை இருக்கு, நான் கொஞ்சம் லேட்டா வர்றேன் என சமாளிக்கிறான் பாரதி. பின்னர் பாரதி, அகிலை அஞ்சலிக்கு துணையாக அங்கே சீக்கிரம் போகச் சொல்கிறான்.

publive-image

அடுத்து, அஞ்சலி வீட்டில் வளைகாப்பிற்கான வேலைகள் மும்முரமாக நடந்துக் கொண்டிருக்கிறது. பாக்கியா, கண்ணம்மா வருவாளா என கேட்க, கண்டிப்பா வருவா என்கிறார் சண்முகம்.

Advertisment
Advertisements

அடுத்ததாக, அஞ்சலி வளைகாப்புக்கு எப்படி போறது என யோசிக்கிறாள் வெண்பா. பின்னர் அஞ்சலிக்கு போன் செய்து, சீமந்தத்திற்கு என்னை ஏன் கூப்பிடல என கேட்க, கூப்பிடணும் என்று நினைச்சேன் என்கிறாள் அஞ்சலி. வெண்பா வருவதாக கூறி, சாந்தியோடு கிளம்ப முடிவெடுக்கிறாள். சாந்தி ஏன் அங்க போறீங்க என கேட்க, கண்ணம்மா அங்க வரமாட்டா, அப்ப நான் அங்க நின்னா பாரதிக்கூட சேர நல்ல வாய்ப்பா இருக்கும் என தன் ஐடியாவை சொல்கிறாள் வெண்பா. பட்டுப்புடவையில் அழகாய் இருக்கும் வெண்பாவைப் பார்த்து, பாரதிக்கூட நீங்க நின்னா, புருஷன் பொண்டாட்டி மாதிரி இருக்கும் என்கிறாள் சாந்தி.

publive-image

அடுத்ததாக, கண்ணம்மா போட்டோவை ஹாலில் மாட்டும் சண்முகத்திடம், இந்த போட்டோவை இங்க ஏன் மாட்டுனீங்க என கேட்கிறாள். எனக்கு பிடிச்சிருக்கு அதான் என சொல்லும் சண்முகத்திடம், இந்த போட்டோவால ஏதாவது பிரச்சனை வந்தா என்ன பண்றது, மொதல்ல எடு என சொல்கிறாள் பாக்கியா. பாரதி பார்க்கணும் தான் போட்டோ மாட்டிருக்கேன், என் பொண்ணு கண்ணம்மா பட்ட கஷ்டம் எல்லாம் அவருக்கு தெரியணும். அது இல்லாம இந்த போட்டோ பார்த்து பாரதி மனசு மாற வாய்ப்பிருக்கு என்கிறார் சண்முகம். அதெல்லாம் எதுவும் நடக்காது, தேவையில்லாம எதுவும் புது பிரச்சனைய கிளப்பிறாத என கண்டிக்கிறாள் பாக்கியா. இத்துடன் இன்றைய எபிஷோடு நிறைவடைகிறது.

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Barathi Kannamma Serial Today Episode Vijay Tv

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: