Advertisment

Bharathi Kannamma serial; ஐடியா கொடுத்த சாந்தி… போலீஸ் ஸ்டேசனை விட்டு கண்ணம்மாவை ஒட வைக்கும் வெண்பா

Vijay TV barathikannamma serial today episode Venba threats Kannamma: கண்ணம்மா கூட சேரமாட்டேன் என உறுதியாக சொல்லும் பாரதி, குழந்தையை வைத்து கண்ணம்மாவை மிரட்டும் வெண்பா, இன்றைய எபிஷோடில்…

author-image
WebDesk
New Update
Bharathi Kannamma serial; ஐடியா கொடுத்த சாந்தி… போலீஸ் ஸ்டேசனை விட்டு கண்ணம்மாவை ஒட வைக்கும் வெண்பா

விஜய் டிவியில் ஒளிப்பரப்பாகும் பாரதி கண்ணம்மா சீரியலில் இன்று என்ன நடந்தது என்பதைப் பார்ப்போம்.

Advertisment

இன்றைய எபிஷோடில்…

நான் தப்பு பண்ணிட்டேன் என அழும் பாரதியை எல்லோரும் ஆச்சரியமாக பார்க்கிறார்கள். ஆனால், 8 வருஷ வாழ்க்கையை வீணடிச்சிட்ட, அதுவும் கண்ணம்மாவ வேற ரொம்ப கஷ்டப்படுத்திட்ட என திட்டுகிறாள் சௌந்தர்யா. மேலும் கண்ணம்மா காலில் விழுந்து அவளை கூட்டிட்டு வா என சௌந்தர்யா சொல்ல, நக்கலாக சிரிக்கும் பாரதியை பார்த்து எல்லோரும் அதிர்ச்சியாகிறார்கள். பின்னர் பாரதி நான் சொன்னதையெல்லாம் நம்பிட்டிங்களா, சும்மா நடிச்சேன், உங்க ரியாக்‌ஷன் எப்படி இருக்குனு தெரிஞ்சிக்கதான் அப்படி செஞ்சேன் என சொல்கிறான் பாரதி. மேலும், நான் தப்பு பண்ணிட்டேனு ஒரு பேச்சுக்கு சொன்னா, அவ காலில் விழுந்து கூட்டிட்டு வா சொல்றீங்க, நீங்க ஆசைப்படுறது ஒரு காலத்திலும் நடக்காது என்கிறான்.

publive-image

அடுத்ததாக, பிச்சை ஏன் எடுக்குறாங்க, அவங்களுக்கு யாரும் இல்லையா என லட்சுமி கேட்க, அவங்களுக்கு யாரும் இல்லை என்கிறாள் கண்ணம்மா. அப்போது வெண்பா சொன்னதை நினைத்து தன் குழந்தை எங்க பிச்சை எடுக்குதோ என நினைத்து வருத்தப்படுகிறாள். பின்னர் வெண்பா சொன்னதை நம்ப வேண்டாம், போலீசுக்கு போகலாம் என முடிவெடுக்கிறாள் கண்ணம்மா. பின்னர் அங்கு வரும் குமாரிடம் போலீஸ் ஸ்டேசன் போகணும் என சொல்ல, பதறிவாறே என்ன விஷயம் என கேட்க, அப்புறம் சொல்கிறேன் என அழைத்துச் செல்கிறார்.

publive-image

அடுத்து, உங்களுக்கு கண்ணம்மா இன்னும் போன் பண்ணி மிஸஸ் வெண்பா பாரதி, என் புள்ளைய கொடுங்கனு கெஞ்சனுமே ஏன் செய்யல என சாந்தி ஏத்தி விட, கண்ணம்மாவுக்கு போன் செய்கிறாள் வெண்பா. போனை லட்சுமி எடுத்து கண்ணம்மா போலீஸ் ஸ்டேசன் போயிருப்பதாக சொல்ல பதற்றமாகிறாள் வெண்பா. பின்னர் லட்சுமியிடம் குமாரின் போன் நம்பரை வாங்கிக் கொள்கிறாள். சாந்தியிடம் என்ன செய்யலாம் என கேட்க, சாந்தி ஒரு ஐடியா கொடுக்கிறாள்.

publive-image

பின்னர் குமாருக்கு போன் செய்யும் வெண்பா, கண்ணம்மாவிடம் பேச வேண்டும் என சொல்லி போனை கொடுக்க சொல்கிறார். அதற்குள் போலீஸ் ஸ்டேசன் வந்து விட, உள்ளே செல்லும் கண்ணம்மா, வெண்பாவிடமும் போனில் பேசுகிறாள். அப்போது வெண்பா, கண்ணம்மாவின் குழந்தை அழுவது போல் ஒரு குழந்தையை நடிக்க சொல்லி, கண்ணம்மாவை கேட்க செய்கிறாள். இதைக்கேட்டு கண்ணம்மா பதற, உன் குழந்தை என்கிட்ட இருக்கானு தெரிஞ்சும் போலீஸ்கிட்ட போயிருக்கனா, உனக்கு எவ்வளவு தைரியம், உன் குழந்தையை என்ன பண்ணுவேனு எனக்கு தெரியாது என மிரட்டுகிறாள். மேலும் போலீஸ் ஸ்டேசன விட்டு வெளியே போயிடு என சொல்ல, பதறியவாறே வீட்டுக்கு ஒடுகிறாள் கண்ணம்மா. அப்போது, இனி இந்த மாதிரி பண்ணக்கூடாது என மிரட்டியவாறே போனை வைக்கிறாள் வெண்பா. இத்துடன் இன்றைய எபிஷோடு நிறைவடைகிறது.

publive-image

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Vijay Tv Barathi Kannamma Serial Today Episode
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment