Vijay TV Serial: குடும்பத்தினர் மீது கோபம்... மீண்டும் வெண்பா வலையில் பாரதி?

Vijay TV barathikannamma serial today episode venba wicked thoughts: பாரதியின் ப்ளானை தெரிந்துக் கொள்ள முயற்சிக்கும் சௌந்தர்யா, அஞ்சலி சாகப்போறதை நினைத்து சந்தோஷத்தில் வெண்பா, இன்றைய எபிஷோடில்…

Vijay TV barathikannamma serial today episode venba wicked thoughts: பாரதியின் ப்ளானை தெரிந்துக் கொள்ள முயற்சிக்கும் சௌந்தர்யா, அஞ்சலி சாகப்போறதை நினைத்து சந்தோஷத்தில் வெண்பா, இன்றைய எபிஷோடில்…

author-image
WebDesk
New Update
Vijay TV Serial: குடும்பத்தினர் மீது கோபம்... மீண்டும் வெண்பா வலையில் பாரதி?

விஜய் டிவியில் ஒளிப்பரப்பாகும் பாரதி கண்ணம்மா சீரியலில் இன்று என்ன நடந்தது என்பதைப் பார்ப்போம்.

Advertisment

இன்றைய எபிஷோடில்…

லட்சுமிக்கு ஸ்டெதெஸ்கோப் பயன்படுத்துவது பற்றி சொல்லிக் கொடுக்கிறான் பாரதி. அப்போது லட்சுமி, ஏன் என்ன சமையல் அம்மா கூட அனுப்பல என கேட்கிறாள். கண்ணம்மா மேல் டென்ஷனாகும் பாரதி, எதுவும் சொல்லாமல் பேச்சை மாற்றுகிறான்.

அடுத்து, பாரதி ஏன் இப்படி நடந்துக்கிறான் என எல்லோரும் யோசிக்கிறார்கள். பாரதிக்கு ஏதோ உண்மை தெரிஞ்சிருக்கு, அதான் இப்படி நடந்துக்கிறான், அதுவும் லட்சுமி கண்ணம்மாவோட பொண்ணுனு தெரிஞ்சிருக்கும் என்று சொல்கிறாள் சௌந்தர்யா. அப்போது அகில், இந்த வெண்பா தான் ஏதோ சொல்லி பாரதி மனச மாத்தி வச்சுருக்கா என சந்தேகப்படுகிறான். அதை ஏற்றுக் கொள்ளும் சௌந்தர்யா, ஆனால் லட்சுமியை பத்தி வெண்பாவுக்கு எதுவும் தெரியாதே என்று சொல்கிறாள். ஆனால் வேணு, பாரதி வேற எப்படியோ உண்மை தெரிஞ்சிருக்கு என்று சொல்கிறார். அதற்கு சௌந்தர்யா, எதுவா இருந்தாலும் அடுத்து என்ன செய்றதுனு யோசிப்போம் என்று சொல்கிறாள்.

Advertisment
Advertisements

publive-image

அப்போது அகில், லட்சுமி எப்படியும் இரண்டு நாள்ல அம்மாகிட்ட போகனும் என்று சொல்லவா, அப்ப பாரதி என்ன செய்வான் என்று கேட்க, பாரதி எதிர்பார்க்குறதும் அதைத்தான் என்று சொல்கிறாள் சௌந்த்ரயா. அப்ப பாரதி நமக்கு செக்மேட் வச்சுருக்கான், நாம எப்படியாவது தப்பிக்கனும் என்று சொல்ல, பாரதியோட ப்ளானே வேற என்று சொல்கிறாள் சௌந்தர்யா. உடனே அகில், அப்ப எல்லா உண்மையையும் பாரதிக்கிட்ட சொல்லிரலாம் என்று சொல்ல, அதெல்லாம் கூடாது, இதுல பொறுமையாதான் முடிவெடுக்கனும் என்று அமைதிப்படுத்துகிறாள் சௌந்தர்யா.

publive-image

அடுத்து, வெண்பா குஷியாய் இருப்பதைப் பார்த்து, என்ன விஷயம் என கேட்க, அஞ்சலி இந்த உலகத்த விட்டு போகப்போறா என்று சிரிக்கிறாள். சாந்தி குழம்பி நிற்க, குழந்தையால் அஞ்சலி உயிருக்கு ஆபத்து என விளக்குகிறாள் வெண்பா. அதுக்கு நீங்க தான் காரணமா என சாந்தி கேட்க, அதெல்லாம் இல்ல, அவளுக்கு உண்மையாவே பிரச்சனை இருக்கு என்கிறாள் வெண்பா. இதெல்லாம் உங்களுக்கு எப்படி தெரியும் என சாந்தி கேட்க, பாரதி வீட்டுக்கு போனப்ப அஞ்சலியை செக் பண்ணேன் என்று சொல்கிறாள். அவங்க பெரிய ஹாஸ்பிட்டல்ல சேர்த்து காப்பாத்திருவாங்களே என சொல்ல, இது யாருக்கும் தெரியாது, அஞ்சலி அந்த குடும்பத்துக்காக தியாகம் பண்ண போற, இந்த விஷயம் எனக்கு தெரிஞ்சது தான் இதுல ஹைலைட் என சிரிக்கிறாள் வெண்பா. மேலும் சௌந்தர்யாவுக்கு ஒரு மருமக வீட்ட விட்டு போயிட்ட, இன்னொருத்தி உலகத்த விட்டே போகப்போறா, இந்த சோகத்துல சௌந்தர்யா செத்துருவா, அப்புறம் நானும் பாரதியும் சந்தோஷமா வாழ்வோம் என்கிறாள் வெண்பா. அப்போது இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி அஞ்சலியை கைக்குள் போட்டுக்கொள்ள ஐடியா கொடுக்கிறாள் சாந்தி.

அடுத்து, ஸ்கூலுக்கு வரும் கண்ணம்மாவிடம், லட்சுமியை பற்றி கேட்கிறார் டீச்சர். நல்லா இருப்பதாக கண்ணம்மா சொல்ல, ஹேமா தொடர்ந்து இங்கே படிக்க போவதாக டீச்சர் சொல்கிறார். இதைக்கேட்டு சந்தோஷமடைகிறாள் கண்ணம்மா.

அடுத்து, ஹாஸ்பிட்டலில், பாரதியை பார்க்க வரும் வெண்பாவிடம், யாரை நம்புறதுனே தெரியல, என் குடும்பத்துல உள்ளவங்களே என்ன ஏமாத்துறாங்க என வருத்தப்படுகிறான். இத்துடன் இன்றைய எபிஷோடு நிறைவடைகிறது.

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Vijay Tv Barathi Kannamma Serial Today Episode

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: