New Update
/tamil-ie/media/media_files/uploads/2021/09/barathikannamma-sep-8-epi.jpg)
Vijay TV barathikannamma serial today episode venba with gun: பாரதியிடம் நெருக்கமாக அமர்ந்து வெண்பாவை வெறுப்பேற்றும் கண்ணம்மா, அசிங்கப்பட்டதால் தற்கொலைக்கு முயலும் வெண்பா, இன்றைய எபிஷோடில்…
விஜய் டிவியில் ஒளிப்பரப்பாகும் பாரதி கண்ணம்மா சீரியலில் இன்று என்ன நடந்தது என்பதைப் பார்ப்போம்.
இன்றைய எபிஷோடில்…
ஒன்றாக அமர்ந்து சாப்பிடும் பாரதியையும் கண்ணம்மாவையும் பார்க்கும் வெண்பா எரிச்சலாகிறாள். பாரதியை அடிக்கடி உரசி வெண்பாவை வெறுப்பேற்றுகிறாள் கண்ணம்மா. பின்னர் கைகழுவும்போது, பாரதி மேல் கண்ணம்மாவை தள்ளி விடுகிறாள் சௌந்தர்யா. அதன்பின், அத்தைதான் துண்டு கொடுக்க சொன்னாங்க என கண்ணம்மா துண்டை கொடுக்க, வெண்பாவ நான் கல்யாணம் பண்ணலைதான், ஆனா இனிமே பண்ண மாட்டேன்னு சொல்ல முடியாது, அதனால திரும்ப சேர்ந்திரலாம்னு கனவு காணாதே என சொல்லிவிட்டுச் செல்கிறான் பாரதி.
அடுத்து, உங்கள அசிங்கப்படுத்துனத பார்த்து சௌந்தர்யா சந்தோஷப்பட்டதாக சொல்லும் சாந்தி, இனி கண்ணம்மா பாரதிக்கூட சேர்ந்துருவாளே என கேட்கிறாள். மேலும் அஞ்சலி தான் இது எல்லாத்துக்கும் காரணம் என்று சொல்ல, அஞ்சலியை சீக்கிரம் முடிக்க ஏற்பாடு செய்கிறேன் என்கிறாள். பின்னர் அஞ்சலியிடம் சென்று மாத்திரைகளை சரியா எடுத்துக்கிறியா என கேட்க, அடிக்கடி நெஞ்சுவலி வருவதாக சொல்கிறாள். பாரதி எழுதி கொடுத்தது தான், இனி மாத்திரையை அதிகமா எடுத்துக்க என்று சொல்லிவிட்டு செல்கிறாள்.
அடுத்து கண்ணம்மா கிளம்ப தயாராக, அவளை சண்முகம் தடுக்கிறார். கண்ணம்மா பிடிவாதமாக கிளம்ப, சரி என்கிறார். சௌந்தர்யாவைப் பற்றி கேட்க, அவங்க கிளம்பிட்டதாக சொல்கிறார் சண்முகம்.
அடுத்து, லட்சுமியை தூங்க வைக்கும் கண்ணம்மா, இன்னொரு குழந்தைக்கு என்ன ஆச்சு என யோசிக்கிறாள். வெண்பா இன்னொரு குழந்தைய எடுத்திருக்க வாய்ப்பில்லை, அப்ப அவ எங்க இருக்க என மனதுக்குள் நினைக்கிறாள். ஹேமா தான் என்னோட இன்னொரு குழந்தையா என மனதுக்குள் கேள்வி கேட்டுக்கொள்கிறாள்.
அடுத்து, அசிங்கப்பட்டதை நினைத்து, டென்ஷனாகும் வெண்பா, இதையெல்லாம் நான் பாரதிக்காக பண்றேன், ஆனா அவன் கண்ணம்மா மீண்டும் ஏத்துக்க தயாராகிட்டான், அவனுக்காக நான் எத்தனை வருஷம் காத்திருக்கிறது, ஆனா அவன் ஏத்துக்க மாட்டேங்குறான் என புலம்புகிறாள். மேலும் ஹேமா கொலை பண்ணி, கண்ணம்மாவ கொலை பண்ணப் பார்த்து, இவ்வளவு செஞ்சும் பாரதி எனக்கு கிடைக்கல, அதனால் நான் சாகுறதுதான் சரி என துப்பாக்கியை எடுத்து தற்கொலை செய்துக் கொள்ள முயல்கிறாள் வெண்பா. அப்போது அங்கு வரும் பாரதி, வெண்பாவை தடுக்கிறான்.
அப்போது பாரதியிடம் எனக்கு உயிர் வாழவே பிடிக்கல என அவனை கட்டிபிடித்துக் கொள்கிறாள். பாரதி அவளை சமாதானப்படுத்துகிறான். அப்போது வெண்பா, உனக்காக நான் எவ்வளவு தான் அசிங்கப்படுறது என சொல்ல, எனக்கு அங்க நடந்தது எதுவும் பிடிக்கல என்கிறான் பாரதி. அதற்கு நீ எனக்காக பேசல என வெண்பா சொல்ல, சாரி கேட்கிறான் பாரதி. உங்க வீட்டில் உள்ள எல்லோரும் என்னை அசிங்கப்படுத்தும் போதெல்லாம் உனக்காக பொறுத்துக்கிட்டேன், உனக்கெல்லாம் நான் செட் ஆகமாட்டேன், உன்னை ஏமாத்திட்டு போனாளே அந்த கண்ணம்மா அவ தான் சரியா வருவா என்கிறாள் வெண்பா. அப்போது பாரதி எல்லாத்துக்கும் சாரி கேட்க, எனக்குனு யார் இருக்கா, நீ கூட எனக்கு இல்லை என்று கேட்கிறாள் வெண்பா. உடனே பாரதி, கண்ணம்மாவுக்கு விஷயம் தெரிஞ்சா என்ன, அவ கூட போய் வாழப்போறேனா, லட்சுமியை என் மகள்னு சொல்ல போறேனா, அதுவும் நிச்சயமா நடக்காது என்கிறான் பாரதி. பின்னர் துப்பாக்கியை எடுத்துகொண்டு கிளம்புகிறான் பாரதி. இத்துடன் இன்றைய எபிஷோடு நிறைவடைகிறது.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.