/tamil-ie/media/media_files/uploads/2021/03/bharathi-kannamma-3.jpg)
விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் பாரதி கண்ணம்மா சீரியல் நாயகி கண்ணம்மா ரோஷினி, இந்த இடத்திற்கு வருவதற்கு தான் நிறைய போராடியிருப்பதாக கண்ணீர் விட்டு கூறியிருப்பது ரசிகர்கள் இடையே தன்னம்பிக்கையையும் நெகிழ்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாரதி கண்ணம்மா தொடர்தான் இன்றைக்கு தமிழ் தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகும் சீரியல்களில் முன்னணியில் இருக்கிறது. இந்த சீரியலில் கண்ணம்மாவாக நடித்து ரசிகர்களைக் கவர்ந்தவர் நடிகை ரோஷினி ஹரிபிரியன். அதனால், மக்கள் இவரை கண்ணம்மா ரோஷினி என்றே அழைக்கின்றனர்.
விஜய் டிவியின் 6வது ஆண்டு விருது வழங்கும் விழா நிகழ்ச்சி ஏப்ரல் 11ம் தேதி விஜய் டிவியில் ஒளிபரப்பாக உள்ளது. விஜய் டிவி விருது வழங்கும் நிகழ்ச்சிக்கு முன்னோட்டமாக பரிவட்டம், எங்க வீட்டு மகாலட்சுமி, எங்க ஏரியா உள்ள வராதே என பொழுது போக்கு நிகழ்ச்சிகள் ஒளிபரப்பாகிறது. இதில் கடந்த வாரம் பரிவட்டம் நிகழ்ச்சி முடிந்த நிலையில் இந்த வாரம் மார்ச் 21 ஞாயிற்றுக்கிழமை எங்கள் வீட்டு மகாலட்சுமி நிகழ்ச்சி ஒளிபரப்பாகிறது.
இதில், விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சீரியல் நடிகைகள் பங்கேற்கிறார்கள். இதில் நடிப்பு, டாஸ்க்குகளில் வெற்றி பெறும் நடிகை எங்க வீட்டு மகாலட்சுமி வெற்றியாளராக தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள்.
அந்த வகையில், விஜய் டிவி எங்க வீட்டு மகாலட்சுமி நிகழ்ச்சியின் புரோமோ வீடியோவை வெளியிட்டுள்ளார். இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்ட பாரதி கண்ணம்மா சீரியலின் நாயகி கண்ணம்மா ரோஷினி, நான் இந்த இடத்துக்கு வருவதற்கு நிறைய போராடியிருக்கிறேன் என்று கண்ணீர் விட்டபடி கண்ணம்மா கூறும் வார்த்தைகள் ரசிகர்கள் மத்தியில் நெகிழ்ச்சியையும் தன்னம்பிக்கையையும் ஏற்படுத்தியுள்ளது.
கண்ணம்மா ரோஷினி நான் இந்த இடத்துக்கு வருவதற்கு நிறைய போராடியிருக்கிறேன் என்று கண்ணீர் விட்டபடி கூறும் வீடியோ சமூக ஊடகங்களில் ரசிகர்களையும் நெட்டிசன்களையும் ஈர்த்துள்ளது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.