பிக் பாஸ் தமிழ் சீசன் 7: விதியை மறந்து நடந்தக் கொண்ட விசித்ரா, யுகேந்திரன்; பிக் பாஸ் கொடுத்த அதிரடி தண்டனையால் புது சிக்கல்
பிக் பாஸ் வீட்டிற்குள் விதிமுறைகளை மீறி நடந்துக் கொண்ட விசித்ரா மற்றும் யுகேந்திரனுக்கு பிக் பாஸ் அதிரடி தண்டனையைக் கொடுத்துள்ளார்.
Advertisment
ரசிகர்கள் ஆவலுடன் எதிர்ப்பார்த்த விஜய் டிவியின் பிக் பாஸ் நிகழ்ச்சி கடந்த 1 ஆம் தேதி தொடங்கியுள்ளது. கடந்த ஆறு சீசன்களைப் போல் இந்த 7 ஆவது சீசனையும் கமல்ஹாசனே தொகுத்து வழங்குகிறார். தமிழ் மட்டுமல்லாமல் ஹிந்தி, தெலுங்கு, மலையாளம், கன்னடம் என பிராந்திய மொழிகளிலும் ஒளிப்பரப்பாகி வரும் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு ரசிகர்கள் நல்ல வரவேற்பு அளித்து வருகின்றனர். இதில் போட்டியாளர்களாக பங்கேற்பவர்களுக்கு சினிமாத் துறையில் நல்ல எதிர்காலம் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுவதால், இதில் கலந்துக் கொள்ள பலரும் ஆர்வம் தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் அக்டோபர் 1 ஆம் தேதி தொடங்கிய பிக்பாஸ் 7வது சீசனில், கூல் சுரேஷ், பூர்ணிமா ரவி, ரவீனா தாஹா, பிரதீப் ஆண்டனி, நிக்சன், வினுஷா தேவி, மணிசந்திரா, அக்ஷயா உதயகுமார், ஜோவிகா விஜயகுமார், ஐஷு, விஷ்ணு விஜய், மாயா கிருஷ்ணன், சரவண விக்ரம், யுகேந்திரன், விசித்ரா, பவா செல்லதுரை, அனன்யா ராவ், விஜய் வர்மா உள்ளிட்ட 18 போட்டியாளர்கள் களமிறங்கியுள்ளனர்.
இந்த முறை பிக் பாஸில் இரண்டு வீடுகள் உள்ளன. இரண்டாவது வீட்டிற்கு ஸ்மால் (சின்ன) பாஸ் வீடு என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு வாரமும் கேப்டனால் தேர்ந்தெடுக்கப்பட்ட 6 பேர் இந்த வீட்டிற்கு செல்வார்கள். ஸ்மால் பாஸ் வீட்டிற்குள் இருப்பவர்கள் பிக்பாஸ் வீட்டிற்குள் நுழைய அனுமதி இல்லை. எந்த டாஸ்கிலும் பங்குபெற கூடாது. மேலும், பிக்பாஸ் வீட்டிற்குள் இருப்பவர்கள் சாப்பிடும் உணவை ஸ்மால் பாஸ் வீட்டிற்குள் இருப்பவர்கள் தான் சமைக்க வேண்டும். மற்ற வீட்டு வேலைகளையும் அவர்களே செய்யவேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
Advertisment
Advertisements
இந்தநிலையில், முதல் வார கேப்டனாக கடைசியாக வீட்டிற்குள் நுழைந்த விஜய் வர்மா தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். விஜய் வர்மாவை அதிகம் ஈர்க்காதவர்கள் என்று ஐஷு, நிக்சன், பவா செல்லதுரை, அனன்யா, வினுஷா, ரவீனா ஆகிய ஆறு பேரும் இரண்டாவது வீடான ஸ்மாஸ் பாஸ் வீட்டிற்குச் செல்ல வேண்டும் என்று பிக்பாஸ் தெரிவித்தார்.
இதற்கிடையில் நேற்று நடைபெற்ற முதல் வார எவிக்ஷன் நாமினேஷனில் ஜோவிகா, ஐஷு, ரவீனா, அனன்யா, செல்லதுரை, யுகேந்திரன், பிரதீப் என ஏழு பேர் நாமினேட் செய்யப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் இன்று வெளியான முதல் ப்ரோமோ வீடியோவில், ஸ்மால் பாஸ் வீட்டில் இருப்பவர்கள் மட்டுமே சமைக்க வேண்டும் என்ற விதியை மீறி பிக்பாஸ் வீட்டிற்குள் இருக்கும் விசித்ரா மற்றும் யுகேந்திரன் கிச்சனில் சென்று சமைத்ததால், அவர்கள் இருவரும் இனி ஸ்மால் பாஸ் வீட்டில் தான் இருக்க வேண்டும் என்று பிக்பாஸ் அறிவித்துள்ளார்.
உடனே பிரதீப், ஸ்மால் பாஸ் வீட்டில் நாமினேட் ஆகாத இருவரை பிக்பாஸ் வீட்டிற்கு அனுப்ப பிக்பாஸிடம் கோரிக்கை வைத்தார். இதற்கு விசித்ரா எதிர்ப்பு தெரிவிக்க, விசித்ரா- பிரதீப் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது விசித்ரா, எங்க இரண்டு பேருக்கு சமமா அங்க யாரு இருக்கா என கேள்வி எழுப்பினார். இத்துடன் ப்ரோமோ முடிவடைகிறது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெறhttps://t.me/ietamil“