விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் கண்ணே கலைமானே தொடர் விரைவில் நிறைவடைய உள்ளதால், அந்த நேரத்துக்கு புதிய சீரியல் புரோமோ வெளியாகி உள்ளது.
தமிழ் பொழுதுபோக்கு தொலைக்காட்சிகளின் பிரதான நிகழ்ச்சியே சீரியல்கள்தான். ஒரு காலத்தில் பெண்கள் மட்டுமே சீரியல் பார்க்கிறார்கள் என்ற கதையெல்லாம் பழங்கதையாகி விட்டது. இப்போது, ஆண்கள் பெண்கள் என எல்லா தரப்பினரும் டிவி சீரியல்களைப் பார்க்கிறார்கள். அதற்கு காரணம், சீரியல்களின் கதையும் கதைக்களமும் காட்சி அமைப்பும் மாறுபட்டு வருகிறது. தமிழ் பொழுதுபோக்கு தொலைக்காட்சிகளில் சன் டிவி மற்றும் விஜய் டிவி இடையே ரசிகர்களைக் கவரும் சீரியல்களை ஒளிபரப்புவதில் ஒரு போட்டியே நிலவி வருகிறது.
விஜய் டிவியில் ஈரமான ரோஜாவே சீரியலை தொடர்ந்து, கண்ணே கலைமானே சீரியலும் நிறைவடையவுள்ளது. இந்த சீரியலின் இறுதிக்கட்ட காட்சிகள் ஒளிபரப்பாகி வருகிறது. பிரைம் டைமில் ஒளிபரப்பான கண்ணே கலைமானே சீரியல் ஆரம்பிக்கப்பட்ட சில மாதங்களுக்குள் கதாநாயகன் மாற்றப்பட்டார். அதுவே ரசிகர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியது.
இந்நிலையில், கண்ணே கலைமானே சீரியல் திடீரென்று நிறைவடையவுள்ளது என்ற செய்தி ரசிகர்களிடையே குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. கடந்த ஆண்டு துவங்கப்பட்ட கண்ணே கலைமானே தொடர் 350 எபிசோடுகளைத் தாண்டி ஒளிபரப்பானலும் டி.ஆர்.பி-யில் பெரிய தாக்கத்தை செலுத்தாததால் இந்த சீரியலை முடிப்பதாகக் கூறப்படுகிறது.
இந்த நிலையில், கண்ணே கலைமானே தொடர் ஒளிபரப்பாகும் நேரத்தில் வரும் டிசம்பர் 4 முதல் மதியம் 1.30 மணிக்கு சக்திவேல் என்ற புதிய தொடர் ஒளிபரப்பாகவுள்ளது. சக்திவேல் தொடருக்கான புரோமோ ஒளிபரப்பாகி வருகிறது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“