Advertisment

Pandian Stores: புதுசா சொல்லுங்கப்பா... எம்டன் மகன் வடிவேலு கதையை நினைவுபடுத்தும் பாண்டியன் ஸ்டோர்ஸ்!

லட்சுமி இறந்துவிட, கண்ணன் வருவதற்கு தாமதமானதால் ஊர்க்காரர்களின் அறிவுறுத்தலுக்கு ஏற்ப மூர்த்தி, ஜீவா, கதிர் 3 பேரும் இறுதிச் சடங்கு செய்கிறார்கள். கடைசி வரை அம்மா முகத்தைப் பார்க்க முடியாத கண்னன்.

author-image
WebDesk
New Update
pandian stores serial, vijay tv, emtan magan, pandian stores, பாண்டியன் ஸ்டோர்ஸ், விஜய் டிவி, பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல், எம்டன் மகன், வடிவேலு, kannan can't see his mother face till funeral, kannan, dhanam, tamil serial news, vadivelu, emtan magan

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் இன்று, பாண்டியன் ஸ்டோர்ஸ் சகோதரர்களின் அம்மா லட்சுமி இறந்துவிட, கண்ணன் வருவதற்கு தாமதமானதால் ஊர்க்காரர்களின் அறிவுறுத்தலுக்கு ஏற்ப மூர்த்தி, ஜீவா, கதிர் 3 பேரும் இறுதிச் சடங்கு செய்கிறார்கள். சிதைக்கு தீ வைத்த பிறகு, வந்து சேரும் கண்ணன், கடைசி வரை அம்மா முகத்தைப் பார்க்க முடியவில்லையே என்று கதறி அழுகிறான்

Advertisment

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் இன்றைய எபிசோடில், கண்ணன் வருவதற்கு முன்பாகவே, சகோதரர்கள் மூர்த்தி, ஜீவா, கதிர் 3 பேரும் தங்களுடைய அம்மா லட்சுமிக்கு செய்ய வேண்டிய இறுதி சடங்குகள் அனைத்தையும் செய்கிறார்கள்.

இதனிடையே, கண்ணனும் திருச்சியில் இருந்து குன்னக்குடிக்கு வந்து கொண்டிருக்கிறான். அப்போது, கண்ணன் மீண்டும் டிரைவரிடம் போன் கேட்க, அவர் தர மறுக்கிறார். இன்னும் ஒரு மணி நேரத்துல ஊருக்கு போயிடலாம் என சொல்லி கண்ணனை அமைதியாக இருக்கச் சொல்கிறார்.

அதற்குள், ஊரில் உள்ளவர்கள் லட்சுமி அம்மாவின் உடலை எடுக்கச் சொல்கிறார்கள். மூர்த்தியும், தனமும் கண்ணன் வராமல் உடலை எடுக்க முடியாது என சொல்கிறார்கள். ஆனால், ஊர்க்காரர்கள், உங்களுடைய குடும்பம் சம்பந்தப்பட்ட விஷயம் மட்டும் கிடையாது. கோயில் நடையை திறக்கணும். கோயிலை மூடி வைத்திருப்ப்பது ஊருக்கு நல்லது இல்லை என சொல்கிறார்கள்.

ஜனார்த்தன், உடலை சுடுகாட்டுக்கு கொண்டுபோய் சடங்கு எல்லாம் செய்வோம். அதுக்குள்ள கண்ணன் வரான்னா பார்ப்போம். இருட்டாகிவிட்டால் உடலை எடுத்துகொண்டு போக முடியாது என சொல்கிறான்.

முருகனும், அக்கா நோயில் இருந்து இறந்தவர் உடம்பு தாங்காது. இவ்வளவு நேரம் போட்டு வைக்க கூடாது என சொல்கிறார். இதையடுத்து, லட்சுமியின் உடலை எடுக்கிறார்கள். தனம், கடைசி வரை கண்ணனை பார்க்க கூடாது என்ற வைராக்கியத்தோடு அத்தை போய்விட்டதாக நினைத்து கதறி அழுகிறாள்.

இதனிடையே, ஊருக்கு வரும் கண்ணன், ஜனார்த்தன் கடை அடைத்திருப்பதை பார்த்து ஒன்றும் புரியாமல் வீட்டிற்கு நடந்து வருகிறான். அப்போது வழியில், தனது தாய்க்கு கண்ணீர் அஞ்சலி போஸ்டர் ஒட்டப்பட்டிருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்து கத்தி கதறுகிறான். ஓடிப் போய், அந்த போஸ்டரைக் கிழித்து எறிந்து விட்டு வீட்டிற்கு ஓடி வருகிறான்.

மனைவி ஐஸ்வர்யா வழியில் அழுது கொண்டிருப்பதை பார்த்த கண்ணன் அவளிடம் என்னாச்சு ஐசு? அம்மா பத்தி போஸ்டர் ஒட்டி இருக்காங்க. நான் அம்மாவை போய் பார்த்துட்டு வர்றேன் ஐசு என சொல்கிறான்.

அதற்கு ஐஸ்வர்யா, கண்ணனைத் தடுத்து இனிமேல் அத்தையை பார்க்கவே முடியாது மாமா. செத்து போயிட்டாங்க என சொல்கிறாள். இதைக்கேட்டு அதிர்ச்சியடையும் கண்ணன், அப்படி எல்லாம் எதுவும் இருக்காது என சொல்கிறான்.

அதற்கு ஐஸ்வர்யா கடைசி வரை நீ அம்மா முகத்தை பார்க்க முடியாத மாதிரி சுடுகாட்டுக்கு கொண்டு போயிட்டாங்க என்று கூறி அழுகிறாள். ஐஸ்வர்யா சொல்வதை கேட்டு நம்பாமல் கண்ணன் கலங்கி நிற்கிறான். ஊர்க்காரர்களும் கண்ணனிடம் லட்சுமி இறந்த விஷயம் பற்றி சொல்கிறார்கள். இதைக்கேட்டு, கண்ணன் தலையில் அடித்து கொண்டு கதறி அழுகிறான். இத்துடன் இன்றைய எபிசோட் நிறைவடைகிறது.

கண்ணன் வருவதற்கு முன்பே அவனுடைய அம்மாவின் உடலை அண்ணன்கள் தகனம் செய்வது, நடிகர்கள் பரத், நாசர், வடிவேலு நடித்த எம்டன் மகன் திரைப்படத்தைப் போல உள்ளது. அதில், வெளியூர் போயிருக்கும் வடிவேலு வருவதற்கு முன்பு அவருடைய அம்மாவின் உடலை தகவனம் செய்துவிடுவார்கள். என்பதைக் குறிப்பிட்டு ரசிகர்கள், புதுசா சொல்லுங்கப்பா... பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் எம்டன் மகன் வடிவேலு கதையை நினைவுபடுத்துகிற மாதிரி இருக்கிறது என்று கம்மெண்ட் செய்து வருகின்றனர்.

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil"

Vijay Tv Pandian Stores Serial Pandian Stores
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment