Advertisment

Pandian Stores: 'இவரு பழைய காதலி கூட பேசிட்டு இருக்காரே..!' ஊதிவிடும் மீனா

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் இன்றைய எபிசோடில் சத்யமூர்த்தி மல்லியுடன் பேசிக்கொண்டிருப்பதை மீனா தனத்திடம் ஊதிவிடுகிற சுவாரஸியமான நிகழ்வை இங்கே காணலாம்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Vijay TV, Pandian Stores Serial, Pandian Stores serial today episode, Meena Complaint at Dhanam, விஜய் டிவி, பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல், மீனா, மல்லி, சத்யமூர்த்தி, தனம், ஜீவா, கதிர் முல்லை, meena complaint about Sathyamurthy speaking with Malli, malli, mullai kathir, kathir, mullai

விஜய் டிவியின் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் இன்றைய எபிசோடில் சத்யமூர்த்தி மல்லியுடன் பேசிக்கொண்டிருப்பதை மீனா தனத்திடம் ஊதிவிடுகிற சுவாரஸியமான நிகழ்வை இங்கே காணலாம்.

Advertisment

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில், 15 ஆண்டுகளுக்கு முன்பு சத்யமூர்த்தியை திருமணம் செய்துகொள்ள மறுத்து வீட்டை விட்டு ஓடிப்போன மல்லியை தனம் வீட்டுக்கு அழைத்து வருகிறாள். எல்லோரும் திட்டினாலும் பிறகு குடிகார கணவன் என்பதைக் கேள்விப்பட்டு பரிதாபத்துடன் பேசுகிறார்கள். இதனிடையே, வெளியே சென்றிருந்த சத்யமூர்த்தியும் வீட்டுக்கு வந்துவிடுகிறார்.

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் இன்றைய எபிசோடில், முல்லை தனது கணவன் கதிரிடம் பேசும்போது, தனம் அக்கா தனது அக்கா மல்லியிடம் பேசிக்கொண்டிருந்ததைப் பற்றி கூறுகிறாள். தனம் மல்லியிடம், “நீங்க மூர்த்தி மாமாவை விட்டு போனதால தான் எனக்கு இப்படி ஒரு நல்ல கணவர் கிடைச்சாரு, இந்த மாதிரி ஒரு நல்ல குடும்பம் கிடைச்சு இருக்கு” என்று கூறியதாக தெரிவிக்கிறாள்.

இதற்கு, கதிர், “பார்த்தியா, தனம் அண்ணி எப்படி யதார்த்தமா இருக்காங்க, அவங்களுக்கு யார் மேலும் கோபம் இல்ல. வெறுப்பு இல்ல. யார் கஷ்டப்பட்டாலும் அவங்களால பார்த்துகிட்டு சும்மா இருக்க முடியாது. இதெல்லாம் இருக்கும்போது நீ ஏன் வருத்தப்பட்டுக்கிட்டு இருக்க… நீயும் முதல்ல உங்க அக்காகூட சந்தோஷமா பேசு..” என்று சொல்கிறான். அதற்கு முல்லை, “தனம் அக்கா அப்படி சொல்லும் போது, எனக்கும் உங்களை அந்த அளவுக்கு லவ் பண்ணனும்னு தோணுது” என்று கூறி கதிரை அணைத்துக்கொள்கிறாள்.

அடுத்த அறையில், சத்யமூர்த்தி அமர்ந்திருக்க அறைக்கு உள்ளே செல்லும் தனம், “யோசனை எல்லாம் பலமா இருக்கு… இன்னும் தூங்கலையா?” என்று கேட்கிறாள். அப்போது, சத்யமூர்த்தி தனத்திடம் “மல்லி எங்கே தூங்குறாங்க..” என்று கேட்கிறார்.

அதற்கு தனம், “மல்லி அம்மாகூட தூங்குறாங்க..” என்று கூற சத்யமூர்த்தி “அம்மா ஏதவது பேசி அந்த பிள்ளைய கஷ்டப்படுத்திடப் போவுது?” என்று கூற, அதனம் அதற்கு “என்ன ஒரு அக்கறை” என்ரு கூறி கிண்டல் செய்கிறாள்.

சத்யமூர்த்தி தனத்திடம், மல்லியை எங்க பார்த்த என கேட்கும் போது, கோவிலில் பார்த்ததை பற்றி சொல்கிறாள். “அந்த பிள்ளை எங்கயாவது நல்லா இருக்கும்னு பார்த்தா, இப்படி வந்து நிக்குதே” என்று வருத்தத்துடன் கூறுகிறான். “ஆமா மாமா நல்லா குடிப்பாரு போல” என சொல்கிறாள்.

“ஆமா தனம் அந்தாளு இங்க இருக்கும் போதே, நல்லா குடிப்பாரு, மல்லி அந்தாளுகூட் சேர்ந்து போயிருக்குன்னு கேள்வி படும்போதே அதை நினைச்சு தான் நான் கவலைப்பட்டேன்” என்று சத்யமூர்த்தி வருத்தத்துடன் சொல்கிறான்.

தொடர்ந்து பேசும் தனம் “இப்ப அவரோட பையனோட இருக்காங்க போல, அவனுக்கும் மல்லினா ரொம்ப புடிக்கும் போல, இல்லை மல்லியோட பேச்சை வச்சு சொல்றன்.” என்று சொல்கிறாள்.

சத்யமூர்த்தி வெளியே போகலாம் என்று எழுந்திருக்கும்போது தனம் சத்யமூர்த்தியிடம், “எங்க போறீங்க… அத்தை மல்லியை திட்றாங்களானு பார்க்க போறீங்களாக்கும்.” என்று கேட்கிறாள்.

அதற்கு சத்யமூர்த்தி, “அடிப்பாவி… அந்த பிள்ளையை இங்க தங்க வைத்தது என்னைய இப்படி பேசி உயிர வாங்குறதுக்குதானா?” என்று கேட்டு சிரிக்கிறான். பிறகு சும்மா சொன்னேன் என்று சத்யமூர்த்தியை அனுப்புகிறாள்.

காலையில் மல்லி போன் டவர் கிடைக்கவில்லை என்று சொல்லிக்கொண்டு வெளியே வருகிறாள். பாத்ரூமுக்குள் இருகும் சத்யமூர்த்தி, தனம் பெயரை சொல்லிக் கூப்பிட்டு துண்டு எடுத்து தரச் சொல்லி கேட்கிறான். தனம் அங்கே வராததால், மல்லி அருகே கொடியில் இருந்த துண்டு எடுத்து சத்ய மூர்த்திக்கு கொடுக்கிறாள். ஆனால், மூர்த்தி துண்டு கொடுத்தது மல்லி என்று தெரியாது.

பாத்ரூமில் இருந்து வெளியே வரும் சத்யமூர்த்தி, மல்லியைப் பார்த்து “என்னப்பா எழுந்திருச்சிட்டியா?” என்று கேட்கிறான். அதற்கு மல்லி, “எழுந்திருக்காமயா டவல் கொடுப்பாங்க” என்று கேட்கிறாள்.

“நான் தனம்னு நெனச்சு இல்ல துண்டு எடுக்க கேட்டுகிட்டிருந்தேன்” சத்யமூர்த்தி பதிலளிக்கிறான்.

“தனம் உள்ள இருக்காங்க…” என்று மல்லி பதிலளிக்க சரி என்று கூறிவிட்டு செல்லும் சத்யமூர்த்தியிடம் மல்லி “நல்லா இருக்கீங்களா மாமா?” என்று கேட்க உறைந்து போகிறான்.

publive-image

“நான் பாட்டுக்கு கிளம்பி போனாலும், மனசுல ஒரு குற்றவுணர்ச்சி இருந்திட்டே இருந்துச்சி… நீங்க எப்படி இருக்கீங்களோனு” என்று மல்லி கூறுகிறாள்.

“எனக்கு என்ன குறைச்சல் நான் ரொம்ப சந்தோஷமா நல்லாதான் இருக்கேன். மல்லி நீ நல்லா இருக்க இல்ல. என்னா ஒன்னு அவரும் இருந்திருக்கலாம். நானு நீ அவரோட அவரோட எங்கயோ சந்தோஷமா இருக்கன்னு நினைச்சுட்டு இருந்தேன். ஆனா இப்படி ஆகும்ன்னு நினைக்கல…” என சொல்கிறான்.

அந்த நேரம் வெளியே வரும் கதிர், அவர்கள் பேசி கொண்டிருப்பதை பார்த்துவிட்டு தொந்தரவு செய்ய வேண்டாம் என்று மீண்டும் உள்ளே செல்கிறான். கொஞ்சம் நேரத்தில், அங்கே வெளியே போவதற்கு வரும் ஜீவாவை வெளியே போக வேண்டாம் என்று கதிரும் தடுத்து நிறுத்துகிறான். ஜீவா என்ன என்று கேட்க, சத்யமூர்த்தியும் மல்லியும் வெளியே பேசிக்கொண்டிருப்பதைக் கேட்கிறான். “பழைய அன்பு போல பேசிகிட்டு இருக்காங்க…” என்று கதிர் ஜாலியாக கிண்டலாக சொல்கிறான்.

publive-image

அப்போது அங்கே வரும் மீனா, “உன்னை துண்டை காயப்போட சொன்னா, இங்க நின்னு அரட்டை அடிச்சிட்டு இருக்கியா” என ஜீவாவிடம் கேட்கிறாள். அப்போது, சத்யமூர்த்தியும் மல்லியும் பேசுவதைப் பார்த்து, “என்ன இவர் பழைய காதலிகூட பேசிட்டு இருக்காரா? பார்த்தால் இவர்கள் சும்மா பேசுவது போல தெரியலயே… இல்லடா இதையெல்லாம் சும்மாவிடக் கூடாது. இப்போ என்ன பண்றன் பாரு…” என சொல்லிவிட்டு தனத்தை அழைத்துக்கொண்டு வந்து காட்டுகிறாள்.

தனம் அதிர்ச்சி அடைவாள் என்று எதிர்பார்த்தால், தனம் அவர்கள் பேசுவதைப் பார்த்துவிட்டு, “இதை காமிக்கதான் கூட்டிட்டு வந்தயா, அவர் என்ன பேசிட போறாரு… நல்லா இருக்கியா பா, மதுரைல எங்க இருக்க. உங்க ஊர்ல பருப்பு விலை எவ்வளவு இதைத்தான் பேசுவாரு…? என்று சிரித்து கொண்டே கூறுகிறாள். அதற்குப் பிறகு, “இதைக் காட்டதான் என்ன தரதரனு இழுத்துட்டு வந்தியா” என்று கேட்டு மீனாவின் தலைமேல் தட்டிவிட்டு தனம் உள்ளே செல்கிறாள்.

இதைக் கேட்டு ஜீவா மீனாவிடம், “ஏண்டி உனக்கு இந்த மொக்கை தேவையா” என்று கேட்டு கிண்டல் செய்கிறான்.

இதைக் கேட்டு குழம்பிப் போன மீனா, நான் இப்போ ஒன்னு செய்யறேன். இந்த டவலை காயபோட போற மாதிரி போய் அவங்க என்ன பேசுறாங்கனு கேட்டுவிட்டு வர்றேன்” என்று சொல்கிறாள்.

இதையடுத்து, மல்லியை அழைக்க முருகன் வருகிறான். அனைவரிடமும் சொல்லிவிட்டு கிளம்புகிறாள். அதனை தொடர்ந்து வெளியே செல்லும் மூர்த்தியும் தம்பிகளும் இடத்தை ரிஜிஸ்டர் பண்ணிவிட்டு வீட்டிற்கு வருகின்றனர். அப்போது மீனா, “இடத்தை யார் பேர்ல ரிஜிஸ்டர் பண்ணி இருக்கீங்க…” என்று கேட்கிறாள். அதற்கு சத்யமூர்த்தி, “நாலு பேர் பெயர்லையும் ரிஜிஸ்டர் பண்ணியாச்சு” என சொல்கிறான். அப்போது, அந்த இடத்தில் என்ன பிசினஸ் ஆரம்பிப்பது என பேசுகிறார்கள்.

அடுத்த காட்சியில், ஐஸ்வர்யா கண்ணனின் வருகைக்காக காத்திருக்கிறாள். அப்போது டிப் டாப்பாக ஸ்டையால ஒருவன் காரில் வந்து இறங்குகிறான். அவன் ஐஸ்வர்யாவைப் பார்க்கிறான். இத்துடன் இன்றைய எபிசோட் நிறைவடைகிறது.

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil"

Vijay Tv Pandian Stores Serial Pandian Stores Kathir Mullai
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment