Pandian Stores Serial: விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் நேற்றைய எபிசோடில் ஐஸ்வர்யா கண்ணனுக்கு போன் செய்கிறாள். அண்ணன் கதிர், அண்ணி முல்லை, மீனா பக்கத்தில் இருந்ததால் வெளியே சென்று போனில் பேசுகிறான். அப்போது, ஐஸ்வர்யா அவனை உடனடியாகப் பார்த்து பேச வேண்டும் என்று அழைக்கிறாள். வீட்டில் நண்பன் தன்னை உடனடியாக வர சொன்னதாகக் கூறிவிட்டு கிளம்பிச் செல்கிறான் அங்கே ஐஸ்வர்யாவை சந்தித்திக்கிறான்.
இதையடுத்து பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் இன்றைய எபிசோடில், ஐஸ்வர்யா கண்ணனைப் பார்த்ததும், “என்ன பிரச்னை உனக்கு?” என்று கேட்கிறாள்.
அதற்கு கண்ணன், “காலேஜ் ஃபீஸ் கட்ட பணம் இல்லைனு சொன்ன இல்ல… நான் பணம் தந்தேன் இல்ல… எங்கிட்ட ஏது அவ்வளவு காசு? நாம்பாட்டுக்கு வீட்டில் பணத்தை திருடிட்டேன் ஐசு…” என்று கூறி அமைதியாகிறான்.
இதைக் கேட்டு அதிர்ச்சி அடையும் ஐஸ்வர்யா, “திருடினயா?” என்று கேட்கிறாள்.
ஆமாம் என்று பதிலளிக்கும் கண்ணன், “வீட்ல இருந்த பணத்தை தெரியாம எடுத்துட்டேன். அவங்க தேடிகிட்ட இருந்தாங்க. நாம்பாட்டுக்கு எடுத்துட்டு வந்து உங்கிட்ட கொடுத்துட்டேன். நீ அந்த விஷயம் தெரியாமல் போய் முல்லை அண்ணிகிட்ட சொல்லிட்ட. இப்ப நான்தான் திருடினேன் என்று வீட்ல தெரிஞ்சுடுச்சு… கதிர் அண்ணன் வேற அடிச்சுடுசு…” என்று வருத்தத்துடன் கூறுகிறான்.
ஐஸ்வர்யா வருத்தத்துடன் “இது எதுவும் எனக்கு தெரியாது மாமா…” என்று கூறுகிறாள்.
தொடர்ந்து பேசும் கண்ணன், “இன்னும் இது வேற யாருக்கும் வீட்ல தெரியாது.. கதிர் அண்ணனுக்கும் முல்லை அண்ணிக்கும் மட்டும்தான் வீட்ல இந்த விஷயம் தெரியும். அவங்களாம் கூட பேசாம இருந்தாங்க. என்னடா நம்ம வீட்ல நாமலே திருடிட்டமேனு எனக்கும் ஒரு மாதிரியா ஆகிடுச்சு. பணத்தை எடுக்கும்போதே எனக்கு ஒரு மாதிரி குற்ற உணர்சியாதான் இருந்தது. அவங்களுக்கு உண்மை தெரிஞ்சது அவங்க முகத்தை என்னால பார்க்கவே முடியல… ஹ்ம்… இது எப்ப எங்க பெரிய அண்ணன் பெரிய அண்ணிகளுக்கு எல்லாம் தெரியப் போகுதுனு தெரியல. என்னை அடிக்கிறது திட்றதைவிட நான் திருடினேன் என்பதைத்தான் அவர்களால் தாக்கிக்கவே முடியாது. அதான் மனசு ரொம்ப கஷ்டமாவே இருக்கு… அதான் ஒரு மாதிரியாவே இருக்கேன். மத்தபடி நீ எந்த தப்புமே பண்ணல.” என்று கூறுகிறான்.
கண்ணன் கூறுவதைக் கேட்டு ஐஸ்வர்யா, “எதுக்கு மாமா நீ திருடுன? அதை எங்கிட்ட சொல்லகூட இல்லை.” என்று கேட்கிறாள்.
அதற்கு கண்ணன், “இந்த மாதிரி பணத்தை திருடினேன் என்று உங்கிட்ட வந்து சொல்வாங்களா?” என்று சொல்கிறான்.
ஐஸ்வர்யா: “அப்படி எதுக்கு நீங்க எனக்கு ஃபீஸ் கட்டனும்?” என்று கேட்கிறாள்.
கண்ணன்: “அப்போது நீ ரொம்ப கஷ்டத்துல இருந்த இல்ல ஐசு. ஃபீஸ் கட்டலனா படிப்பே வேணாம். படிப்ப விட்றேன்னு வேற சொன்ன. நீ படிப்பை உடுறத பார்த்துக்கிட்டு நான் எப்படி சும்மா உக்காந்திருக்க முடியும் சொல்லு” என்று கேட்கிறான்.
அதற்கு ஐஸ்வர்யா, “அதுக்காக நீ எவ்ளோ பெரிய சிக்கல்ல மாட்டிகிட்ட பாரு.” என்று கூறுகிறாள்.
கண்ணன், “ஆமாம், ஐசு இதுக்கு முன்னாடி நான் இந்த மாதிரி பண்ணதே இல்லை ஐசு. அதான் ஒரு மாதிரியாவே இருக்கு. பணம் விஷயத்தைவிட நான் செஞ்சென்றதுதான் அண்ணங்களால தாங்கிக்கவே முடியாது. அதான் ஒரு மாதிரியாவே இருக்கு ஐசு.” என்று வருத்தமாக கூறுகிறான்.
ஐஸ்வர்யாவுக்காக கண்ணன் இவ்வளவு பெரிய உதவி செய்திருப்பதைக் கேட்டு, “சாரி மாமா… இதெல்லாம் தெரியாம, நாம்பாட்டுக்கு ஏதேதோ நெனச்சிட்டு இருந்திருக்கிறேன்.” என்று கூறுகிறாள்.
கண்ணன் ஐஸ்வர்யாவிடம், “விடு… இப்பக்கூட நீ எதையும் நினைச்சு வருத்தப்படக்கூடாதுனுதான் இதெல்லாம் சொன்னேன். நீ எந்த தப்புமே பண்ணல. உன்மேல எனக்கு எந்த கோவமும் இல்ல. என் நெலைமை அப்படி. வேற ஒன்னும் இல்லை ஐசு” என்று கூறுகிறான்.
“சாரி மாமா…” என்று கூறு ஐஸ்வர்யா, “எனக்காக இவ்ளோ விஷயம் பண்ணியிருக்க. எனக்காகதான் இவ்ளோ கஷ்டப்பட்டிருக்கேனுகூட எனக்கு தெரியல பாரு.” என்கிறாள்.
இதற்கு கண்ணன், “நான் உணக்காக இவ்ளோ கஷ்டப்பட்டேன்ங்கறதை உங்கிட்ட சொல்றதுக்காக எல்லாம் இதை உங்கிட்ட சொல்லல ஐசு.” என்று கூறுகிறான்.
ஐஸ்வர்யா, “தெரியும் மாமா… எனக்கு ஒரு மாதிரியா இருக்குது. நான் இந்த பணத்தை எப்படியாவது திரும்ப கொடுத்துடறேன் சரியா.” என்கிறான்.
இதற்கு கண்ணன் “ஹே அதெல்லாம் ஒன்னும் வேணாம்” என்று கூற பதிலுக்கு ஐஸ்வர்யா “நான் கொடுத்துடறேன்” என்கிறாள்.
கண்ணன், “நீ எப்படி கொடுப்ப?” என்று கேட்க, ஐஸ்வர்யா, “நா எப்படியாவது வேலைக்குப் போய் கஷ்டப்பட்டு திரும்ப கொடுத்திடறேன். நீ வீட்ல திரும்ப கொடுத்துடு மாமா” என்கிறாள்.
இதைக் கேட்ட கண்ணன், “அப்படியெல்லாம் வேணாம் ஐசு. அதுக்காக எல்லம் ஒன்னும் சொல்ல. நான் வீட்ல எப்படியாச்சு சமாளிச்சுக்கிறேன்.” என்கிறான்.
அதன் பிறகு, ஐஸ்வர்யாவை பக்கத்தில் இறக்கிவிட்டுவிட்டு செல்வதாகக் குறி அழைத்துச் செல்கிறான்.
அந்த நேரம் பார்த்து வழியில் கஸ்தூரி வருவதைப் பார்த்து கண்ணன் வண்டியை நிறுத்தி ஐஸ்வர்யாவை பாதி வழியிலேயே இறக்கிவிட்டுவிட்டு செல்கின்றான்.
கஸ்தூரி, “நான் தனம் வீட்டுக்கு போகிறேன்… நீயும் வா…” என்று அழைக்கிறாள். அதற்கு ஐஸ்வர்யா நான் வரல என்று சொன்னாலும் அவளை கஸ்தூரி வலுக்கட்டாயமாக அழைத்துச் செல்கிறாள். அதற்கு ஐஸ்வர்யா, “எனக்கு அங்க வரவே பிடிக்கல, முழு வீட்டையும் தனம் அக்கா அதிகாரம் பண்ணிட்டு இருக்காங்க…” என்று சொல்கிறாள்.
இதற்கு கஸ்தூரி, “நீ சொன்னாலும் சொல்லலனாலும் அவ அந்த வீட்டுக்கு ராணிடி, சின்ன வயசுலே அங்க வாக்கப்பட்டு போய், அவுங்க எல்லாத்தையும் ஆளாக்குனவ அவள்” என்று சொல்கிறாள்.
தொடர்ந்து பேசும் கஸ்தூரி, “எனக்கும் கூட தனத்தை பிடிக்காது. ஆனா என்ன பண்றது என் வீட்டுக்காரர், உன் பாட்டி எல்லாரும் தனம் போல இந்த உலகத்துல பொண்ணு இருக்குமான்னு சொல்லுவாங்க. நீ வேணா பாரு கண்ணனுக்கும், தனம் சொல்ற பேச்சை கேட்டு நடக்குற ஒரு பொண்ண தான் கல்யாணம் பண்ணி வைப்ப பாரு..” என சொல்கிறாள்.
கஸ்தூரி சொன்னதைக் கேட்டு, “ஐஸ்வர்யா, கண்ணனுக்கு லவ் மேரேஜ் தான் நடக்கும்” என சொல்கிறாள்.
இதனிடையே, வீட்டில் கதிர் தனியாக சமைத்துக் கொண்டிருக்க, ஓரவுத்திகள் தனம், மீனா, முல்லை மூன்று பேரும் வெளியே உட்கார்ந்து பேசி கொண்டிருக்கிறார்கள்.
அப்போது மீனா, தனத்திடம் முல்லை என்கிட்ட ஒரு கதை சொன்னாங்க, அதை பற்றி கேட்கலாமா என்று கேட்கிறாள்.
“என்ன கதை?” என்று தனம் கேட்கும் போது, “மூர்த்தி மாமா கல்யாணம் நின்னு, அவரை கல்யாணம் பண்ணிக்கவான்னு நீங்க கேட்டிங்களாமே. மாமா மேல அவ்வளவு லவ்வா” என்று கேட்கிறாள். மீனா சொன்னதைக் கேட்டு தனம் வெட்கப்படுகிறாள், இதைப் பார்த்து மீனா, “அப்படி எல்லாம் விட முடியாது, மாமாகிட்ட என்ன பிடிச்சுச்சுன்னு இப்ப சொல்லணும்” என்று குறும்பாக கேட்கிறாள்.
மீனாவின் கேள்விக்கு தனம் வெட்கப்பட்டு லேசாக சிரித்துவிட்டு, “மாமாவ சின்ன வயசுல இருந்து தெரியும். அவ்வளவு கஷ்டப்பட்டு தனியா நிற்கும் போது, நானும் கூட நிற்கனும்னு ஆசைப்பட்டேன். இங்க வந்த பிறகு ஜீவா, கதிர், கண்ணன் எல்லாத்தையும் பிடிச்சது. எல்லாரையும் வளர்த்து ஆளாக்கனும்னு நினைச்சேன்” என்று சொல்கிறாள்.
இதற்கு மீனா, “இதெல்லாம் ரொம்ப பெரிய விஷயம் அக்கா…” என மீனா சொல்கிறாள். இதைக் கேட்டு தனம், “நான் இந்த வீட்டுக்கு காமிச்ச அன்பை விட, இந்த வீடு என்மேல அவ்வளவு அன்பு காமிச்சு இருக்கு…” என சொல்கிறாள்.
அப்போது வீட்டுக்கு கஸ்தூரியும், ஐஸ்வார்யாவும் வருகிறார்கள். அவர்கள் பின்னாடியே கண்ணனும் வருகிறான். இதைப் பார்த்ததும் தனம், “நீ என்னடா இவுங்ககூட வர்ற?” என தனம் கண்ணனிடம் கேட்கிறாள். அதற்கு கண்ணன், “நான் என் பிரெண்ட்ட பார்த்துட்டு வர்றேன்” என சொல்கிறான்.
அப்போது சமைத்து எடுத்து வரும் கதிர், அனைவருக்கும் தட்டில் சாப்பாடு பரிமாறி கொடுக்கிறான். சாப்பாடு அருமையாக இருக்கிறது என அனைவரும் சொல்கிறார்கள்.
பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலின் இன்றைய எபிசோடு இத்துடன் நிறைவடைகிறது. அடுத்த எபிசோடில், கண்ணன் வீட்டில் இருந்து பணத்தை எடுத்து ஐஸ்வர்யாவுக்கு ஃபீஸ் கட்டிய விவகாரம் அனைவருக்கும் தெரிய வருமா என்பது இனி வரும் எபிசோடில் தெரியுமா? என்பதைப் பார்ப்போம்.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil”
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.