Prajin - Sandra Amy: சினிமா நட்சத்திரங்களைப் போலவே சீரியல் பிரபலங்களும் ரசிகர்களால் கூர்ந்து கவனிக்கப்படுகிறார்கள். எந்தளவுக்கு என்றால் குறிப்பிட்ட சீரியல் நட்சத்திரம் யாரை திருமணம் செய்துக் கொள்கிறார், அவர்களின் குழந்தைகள் என்ன செய்கின்றன, விடுமுறைக்கு எங்கே சென்றார்கள் போன்ற தகவல்களை முனைப்புடன் தெரிந்து வைத்துக் கொள்கிறார்கள்.
சேத்தன் – தேவதர்ஷினி , ஸ்ரீகுமார் – ஷமிதா, சஞ்சீவ் – ப்ரீத்தி, போஸ் வெங்கட் - சோனியா என்று இந்த சீரியல் ஜோடியின் பட்டியல் நீளும். இதில் பிரஜின் - சாண்ட்ரா ஜோடியும் முக்கியமானவர்கள்.
Advertisment
Advertisements
தொலைக்காட்சி தொகுப்பாளினியாகவும், சீரியல்கள் நடிகையாகவும் பிரபலமானவர் சாண்ட்ரா. இவர் சன் மியூஸிக்கில் தொகுப்பாளராக இருந்த பிரஜினை திருமணம் செய்துக் கொண்டார். விஜய் டிவியில் ஒளிபரப்பான ‘சின்னத்தம்பி’ சீரியலில் நடித்த பிரஜின், தற்போது ‘அன்புடன் குஷி’ சீரியலில் நடித்துக் கொண்டிருக்கிறார். பிரஜினுக்கும் சாண்ட்ராவுக்கும் திருமணமாகி 10 ஆண்டுகள் கழிந்த நிலையில், குழந்தை பெற்றுக் கொள்ளாமல் இருந்தனர்.
இந்நிலையில் 10 வருட இல்வாழ்க்கையில் தங்களுக்கு குழந்தை பிறக்கப் போகும் விஷயத்தை பிரஜின்-சான்ட்ரா தம்பதியினர் தங்களது சமூக வலைதள பக்கத்தில் பகிர்ந்துக் கொண்டர். இரட்டை பெண் குழந்தைகள் பிறந்த பிறகு, விஜய் டிவி நிகழ்ச்சியில் அந்தத் தருணத்தையும், 10 வருடமாக அவர்கள் கடந்து வந்த கடினமான தருணத்தையும் உருக்கமாக வெளிப்படுத்தினார் பிரஜின். ஆனால் அந்தக் குழந்தைகளை இதுவரை வெளியுலகுக்கு காட்டாமல் இருந்தனர். இப்போது அந்தக் குழந்தைகள் இருவரும் 1 வயதைக் கடந்திருக்கிறார்கள். தற்போது மித்ரா, ருத்ராவின் படத்தை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார் பிரஜின். ஆனால் இப்போதும் அவர்களது முகம் தெரியவில்லை. குழந்தைகள் இருவரும் பின்னால் திரும்பி நின்றுக் கொண்டிருக்கும்படியான படத்தை தான் பதிவிட்டுள்ளார்.
கொரோனா வைரஸ் காரணமாக பிறந்தநாள் கொண்டாடவில்லை எனவும், எல்லாம் சரியாகி கொண்டாட்டங்கள் முடிந்ததும், அவர்களின் முகத்தை பதிவிடுகிறேன் எனவும் குறிப்பிட்டுள்ளார் பிரஜின்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்”