Advertisment

உள்ளங்கையில் வைத்து தாங்கணும்; அன்புக்காக ஏங்குகிறேன்...’ - கண்கலங்கிய பிரியங்கா!

விஜய் டிவி தொகுப்பாளினி பிரியங்கா தேஷ்பாண்டே சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில், ‘அன்புக்காக ஏங்குகிறேன்’ என்று கண்கலங்கி உணர்ச்சி வசப்பட்டு பேசியுள்ளார்.

author-image
WebDesk
New Update
Priyanka 1

பிரியங்கா தேஷ்பாண்டே (Screenshot from YouTube)

Listen to this article
0.75x 1x 1.5x
00:00 / 00:00

விஜய் டிவி தொகுப்பாளினி பிரியங்கா தேஷ்பாண்டே சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில்,  ‘அன்புக்காக ஏங்குகிறேன்’ என்று கண்கலங்கி உணர்ச்சி வசப்பட்டு பேசியுள்ளார்.

Advertisment

விஜய் டிவி தொகுப்பாளினி பிரியங்கா தேஷ்பாண்டேவை ஒரு யூடியூப் சேனலுக்காக ஜீ தமிழ் டிவி தொகுப்பாளினி அர்ச்சனா ஒரு நேர்காணல் செய்திருக்கிறார். இந்த நேர்காணலில், பிரியங்கா தேஷ்பாண்டே மிகவும் நெகிழ்ச்சியாகவும் உணர்ச்சிவசப்பட்டும் பேசியுள்ளார்.

பிரியங்கா தேஷ்பாண்டே,  “குக்கிங் எனக்கு ரொம்ப பிடிக்கும், ஆனால், நான் ரொம்ப சோம்பேறி, எழுந்திருச்சி போயி அதை செய்யணுமா என்று விட்டுவிடுவேன். மஷ்ரூம் பிரியாணி நல்லா சமைப்பேன்” என்று தெரிவித்துள்ளார்.

உங்கள் வீட்டுக்கு ஒரு குட்டி தேவதை வந்திருப்பதைப் பற்றிக் கூறுங்கள் என்று அர்ச்சனா கேட்டதற்கு,  பிரியங்கா தேஷ்பாண்டே தனது தம்பி மகள் குறித்து, அவள் தன்னை சியா என்று கூப்பிடுவது குறித்தும் மகிழ்ச்சியுடன் பகிர்ந்துகொண்டார்.

“கன்னடத்தில் அத்தையை  ‘அத்யா’ என்று கூப்பிடுவார்கள். வீட்டில் என்னை சின்னு என்று கூப்பிடுவார்கள். சின்னுவையும் அத்யாவையும் சேர்த்து சியா என்று கூப்பிடுவாள். இந்த பெயர் கூட எனக்கு எப்படி கொடுத்தார்கள் என்றால், நான் பிக் பாஸ் நிகழ்ச்சிக்குள் போகும்போது, என் தம்பியும் தம்பியின் மனைவியும் ஒரு புதிர் மாதிரி ஒன்றை ஏற்பாடு செய்தார்கள். ஏதோ பரிசுகொடுக்கப் போகிறார்கள் என்று பார்த்தால், அவள் கர்ப்பமாக இருப்பதாகக் கூறியதால் எனக்கு கையும் புரியவில்லை காலும் புரியவில்லை” என்று தனது மகிழ்ச்சியைப் பகிர்ந்துகொண்டார். 

பிக் பாஸ் விட்டுக்குள் இருக்கும்போது ஒரு பவுச்க்குள் தனது தம்பி அவருடைய மகளைப் போல எழுதிக் கொடுத்த,  ‘டியர் சியா, நீங்க வரும்போது நான் கொஞ்சம் வளர்ந்திருப்பேன், அதுவரை அம்மாவின் வயிற்றில் இருப்பேன்’ என்று எழுதிக் கொடுத்ததை எடுத்துப் பார்த்துக்கொள்வேன் அதை, நினைத்துக்கொண்டே பிக் பாஸ் வீட்டில் இருந்தேன்  என்று பிரியங்கா மிகவும் நெகிழ்ச்சியாகக் கூறினார்.

 பிரியங்கா தேஷ்பாண்டே “தனது தம்பி மகள்  ‘ஹனிவஸ் இஹா’ அவளுக்காக வீட்டுக்கு வரவேண்டும், அவளைப் பார்க்காமல் என்னால் எங்கேயும் போக முடியாது. அவள் வீடியோ காலில்  ‘கம் கம்’ என்று சொல்லும்போது, அந்த ஒரு லவ்வுக்காகத்தான் நான் ரொம்ப ஏங்குகிறேன். அதுதான் வேணும். அந்த லவ்வுதான் என்னை சர்வைவ் செய்ய வைத்திருக்கிறது, என்னுடைய சின்ன வயசு போட்டோ எல்லாம் எடுத்துப் பார்க்கிறேன். அவள் என்ன மாதிரியே இருக்கிறாள். அவள் என்னோட குழந்தை. அவதான் என் முதல் குழந்தை. அவளுக்காக நான் என்ன வேணாலும் செய்வேன்.” என்று என்று மிகவும் நெகிழ்ச்சியாக அழுதுகொண்டே கூறியுள்ளார்.



அன்புக்காக ஏங்குவதாகக் கூறிய பிரியங்கா தேஷ்பாண்டே,  “ அன்புதான் என்னைக்கும் ஜெயிக்கும், லவ் பண்ணுங்க, நான் உங்களுக்கு என்ன வேண்டுமானாலும் தருவேன். என்னை பாசமாக லவ் பண்ண வேண்டும். அந்த அன்பு எனக்கு கிடைக்க வேண்டும். நான் அதைவிட அதிகமாக அவர்களுக்கு கொடுப்பேன்.” என்று கூறியுள்ளார்.

“என்னதான் பிரச்னை இருந்தாலும், நிகழ்ச்சியில் மேடை ஏறி மைக் பிடித்துவிட்டால், எல்லாம் மறந்துப்போய் நிகழ்ச்சியை சிறப்பாக தொகுத்து வழங்குவேன்” என்று பிரியங்கா தேஷ் பாண்டே கூறியுள்ளார். மேலும்,  “நடிகை ராதிகா ஒருமுறை கூறியதை, தானும் கூறுவதாகக் கூறிய பிரியங்கா தேஷ் பாண்டே, என்னை ஏமாற்றாத ஒரு விஷயம் என்னுடைய தொழில்மட்டும்தான். அது உண்மை, என்னை ஏமாற்றாத ஒரு விஷயம் அது என்னுடைய தொழில், அதனால் நான் சம்பாதித்த ஒரு மக்கள் இருக்கிறார்கள். அவர்களுக்காக ஏதாவது செய்ய வேண்டும்” என்று கூறினார்.

மேலும், “என்னுடைய அம்மாவை என்றைக்கு தலைகுனிய வைத்துவிடக் கூடாது. ஏனென்றால், எனக்கும் என் தம்பிக்கும் செய்த தியாகம் கொஞ்ச நஞ்சமல்ல. அதனால், எனது அம்மாவை தலைகுனிய வைக்கமாட்டேன். 26 வருடங்கள் அம்மாதான் என்னுடைய தோழி, எதிரி, எல்லாவற்றையும் அவர்களுடன் பேசலாம். எங்க அம்மா எனக்கு கொடுத்த இந்த இடத்தை நான் தவறாகப் பயன்படுத்த மாட்டேன். அம்மாவை ஒரு ராணி மாதிரி வைத்து பார்த்துக்கொள்வேன். இது வாழ்நாள் முழுவதுமான என்னுடைய உத்தரவாதம்.” என்று பிரியங்கா தேஷ்பாண்டே கூறியுள்ளார்.

வாழ்கையில் அடுத்து என்ன திட்டம் என்ற கேள்விக்கு பதிலளித்த பிரியங்கா தேஷ் பாண்டே,  “5 ஆண்டுகளுக்கு முன்னாள் இப்படி எல்லாம் திட்டம் கிடையாது. சில வகையான நிகழ்ச்சிகள் பண்ண வேண்டும் ஆசை இருக்கிறது. எனக்கு சினிமாவில் எல்லாம் ஆர்வம் இல்லை. நிறைய டிராவல் பண்ணனும், லவ் பண்ணனும், எனக்கு புடிச்ச 2 3 நிகழ்ச்சியைப் பார்க்க வேண்டும். இந்த வருஷம் ரஜினி சாரை பார்க்கணும்னு ஆசை. இதுவரைக்கு அவரை நான் நேர்ல பார்த்தது கிடையாது. அவரைப் பார்க்க வேண்டும்” நடிகர் ரஜினிகாந்த்தை சந்திக்க வேண்டும் என்ற தனது விருப்பத்தை தெரிவித்துள்ளார்.

பிரியங்கா தேஷ்பாண்டேவை நேர்காணல் செய்த தொகுப்பாளினி அர்ச்சனா, “ உன்னை உருகி உருகி காதலிக்க ஒருத்தர் நிச்சயம் வருவார். உன்னை காதலிக்கனும் உனக்கு ஒரு குழந்தையை தரணும்,  ‘தி லயன் கிங்’ படத்துல தூக்கிக் காட்டுவாங்க இல்ல, அது போல இது பிரியங்காவுடைய மகள், உலகம் பார்க்க வேண்டும்.  மலைக்கு மேல இருந்து அந்த குழந்தையைக் காட்டும்போது, ‘தி லயன் கிங்’ படத்துல நிறைய  அனிமல்ஸ் இருக்கும், அதில் ஒரு வயசான குரங்கு இருக்கும் இல்ல, அந்த வயசான குரங்காக இருந்து நான் சந்தோஷப்படணும்” என்று கூறினார். இதைக் கேட்டு பிரியங்கா உணர்ச்சி வசப்பட்டு கண்கலங்கினார். 

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Super Singer Priyanka
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment