சின்னத்திரையின் முக்கிய சீரியல்களில் ஒன்றாக ராஜா ராணி சீரியலில் சமீபத்தில் வெளியான ரொமான்டிக் ப்ரேமோ இணையத்தில் வைரலாகி வரும் நிலையில், கடுமையான விமர்சனங்களையும் சந்தித்து வருகிறது.
விஜய் டிவியின் முக்கிய சீரியல்களில் ஒன்று ராஜா ராணி 2. ஐபிஎஸ் ஆக வேண்டும் என்ற கனவோடு இருக்கும் ஒரு பெண் திருமணத்திற்கு பின் பல தடைகளை தாண்டி தனது கனவை அடைந்தாரா என்பதை அடிப்படையாக வைத்து திரைக்கதை அமைக்கப்பட்டுள்ள இந்த சீரியல் இல்லத்தரசிகள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
தொழில்நுட்ப வளர்ச்சி அதிகரித்து வரும் இந்த காலகட்டத்தில் சினிமாவை விட சீரியல் மற்றும் டிவி நிகழ்ச்சிகள் ரசிகர்களை மத்தியில் கவனம் ஈர்த்து வருகிறது. குறிப்பாக குழந்தைகள் இந்த நிகழ்ச்சிகளை அதிகம் பார்த்து வருகின்றனர். இதனிடையே பார்வையாளர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க சீரியல் குழுவினர் பல முயற்சிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதில் சில விபரீத முயற்சியாக திரைப்படங்களில் வரும் ரொமான்டிக் மற்றும் பாலியல் தொடர்பான காட்சிகளை தற்போது சீரியலில் வைக்கும் நிகழ்வு அரங்கேறி வருகிறது. சின்னத்திரையில சென்சார் இல்லை என்பதால் குழந்தைகள் பார்ப்பார்கள் என்ற யோசனை இல்லாமல் அவ்வப்போது இந்த மாதிரியான காட்சிகளை ஒளிபரப்பி வருகின்றனர். இதற்கு பலரும் வமர்சனங்கள் வந்தாலும் இந்த மாதிரியான காட்சிகள் வரத்தான் செய்கிறது.
அந்த வகையில் தற்போது இல்லத்தரசிகர்கள் மத்தியிலும் லட்சியத்துடன் வாழும் இளம் பெண்கள் மத்தியிலும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ள ராஜா ராணி சீரியலில் ரொமான்டிக் காட்சிகள் கடும் விமர்சனங்களை சந்தித்து வருகிறது. சொந்த வீ்ட்டில் இருந்தே காசு திருடுவது மற்றும் குடும்பத்தில் உள்ள நபர்களுக்கு துரோகம் செய்வது உள்ளிட்ட பல விமர்சனங்களை ராஜா ராணி சீரியல் வழக்கமான சந்தித்து வருகிறது.
இதில் ராஜா ராணி குடும்பத்தின் 3-வது மகன், ஆதி சொந்த வீட்டில் பணம் திருடியதே ரசிகர்கள் மத்தியில் விமர்சனங்களை பெற்றுள்ள வரும் நிலையில், தற்போது தனது காதலியுடன் ரொமான்ஸ் செய்யும் காட்சிகள் பெரிய விமர்சனங்களை பெற்றுள்ளது. இந்த காட்சியை பார்க்கும் ரசிகர்கள் ஆர்வக்கோளாறில் பேசுற பேச்சு அன்பு வைத்திருக்கிறாயா ஆட்டுக்குட்டி வைத்திருக்கிறாயா என்று அடுத்த வில்லன் இவன் தான்... என்று கூறியுள்ளார்.
மற்றொரு ரசிகர், இதெல்லாம் எப்படி வீட்டில் பேமிலியோடு உட்கார்ந்து பாக்கிறது டேய் கதை இல்லனா இந்த அளவுக்கு எல்லாம் போவிங்களாடா டைரக்டரு என்று கேட்டுள்ளனர். மேலும் குடும்பத்துடன் அமர்ந்து பார்க்கும் இந்த சீரியலில் இந்த மாதிரியான காட்சிகள் எதற்காக என்று இல்லத்தரசிகள் மத்தியில் கடுமையாக விமர்சனங்களை எதிர்கொண்டுள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil