சின்னத்திரை நடிகை ஆல்யா மானசா மீண்டும் கர்ப்பமாகியுள்ளதால், ராஜா ராணி 2 சீரியலின் கதையில் மாற்றம் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
விஜய் டிவியில் வெற்றிகரமாக ஒளிப்பரப்பாகி வரும் சீரியல் ராஜா ராணி 2. டிஆர்பி ரேட்டிங்கிலும் இந்த சீரியல் முன்னிலையில் இருந்து வருகிறது. இந்த சீரியலில் சித்து, ஆல்யா மானசா முக்கிய கதாப்பாத்திரங்களில் நடித்து வருகின்றனர்.
ராஜா ராணி சீரியலில் முதல் பாகத்திலும் ஆல்யா மானசா
குழந்தை பிறப்பிற்கு பின் சிறிய இடைவெளி எடுத்துக் கொண்ட ஆல்யா விஜய்
சோஷியல் மீடியாவில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் ஆல்யா – சஞ்சீவ் ஜோடி, அடிக்கடி தங்களது புகைப்படங்களையும், வீடியோக்களையும் பகிர்ந்து வருவார்கள். இந்நிலையில் ஆல்யா இரண்டாவது முறை கர்ப்பமாக இருப்பதை குறித்து வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளனர்.
ஆல்யா இரண்டாவது முறையாக கர்ப்பமாக உள்ளதை, சஞ்சீவ் சமூக வலைதளங்கள் மூலம் சமீபத்தில் தெரிவித்திருந்தார். கடந்த சில நாட்களுக்கு முன்னர் தான் ஆல்யாவும் இன்ஸ்டாகிராம் உரையாடலில் இதற்கு ஆம் என்று பதிலளித்திருந்தார். இந்நிலையில் சஞ்சீவ் – ஆல்யா தம்பதிகள் தங்களுடைய யூடியூப் சேனலில் அய்லா அக்காவாகிட்டா என்று வீடியோ ஒன்றை பதிவிட்டு உள்ளனர்.
அதில், சஞ்சீவ் சொல்லும்போது நான் 3 மாதம் கர்ப்பமாக இருந்தேன். தற்போது நான்கரை மாத கர்ப்பமாக இருக்கிறேன். ராஜா ராணி 2 சீரியலில் ஐபிஎஸ் அதிகாரியாக நடிக்கும் இந்த நேரத்தில் இரண்டாவது குழந்தை எல்லாம் நாங்கள் திட்டமிடவில்லை. ஆனால், இந்த விஷயம் எங்களுக்கே ஷாக்கிங் சர்ப்ரைசாக தான் இருந்தது. இதைப்பற்றி ராஜா ராணி 2 டீமிடம் சொல்லியிருந்தோம். அவர்கள் சேனல் தரப்பில் பேசிவிட்டு சீரியல் இருந்து ஆல்யாவை நீக்காமல் அதற்கேற்றாற்போல் கதையை மாற்றுவதாக உறுதியளித்திருக்கிறார்கள். இதை கேட்டபோது என்னுடைய கண்களில் கண்ணீர் வந்தது என்று ஆல்யா கூறியிருக்கிறார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil