Advertisment

Raja Rani 2: கொசுவத்தி மருதாணி மூலம் சரவணனின் ‘லவ்’வை கண்டுபிடித்த சந்தியா!

“நீ குடுத்து வச்ச குமரிதான், இந்த புள்ளை உன்ன காணம்னு பரிதவிச்சு போயிடுச்சுமா. டிரைவர் கண்டக்டர் கிட்ட வண்டி எடுக்கக் கூடாதுனு நிப்பாட்டி வச்சுடுச்சுமா. நல்ல பாசக்கார புள்ளை? என்று சரவணனின் தலையைப் பிடித்து சுற்றுகிறார் பாட்டி.

author-image
WebDesk
New Update
Raja Rani 2: கொசுவத்தி மருதாணி மூலம் சரவணனின் ‘லவ்’வை கண்டுபிடித்த சந்தியா!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் ராஜா ராணி 2 சீரியல் விறுவிறுப்பான திருப்பங்களையும் பரபரப்பான கட்டங்களையும் அடைந்து வருகிறது. ராஜா ராணி 2 சீரியலில் இன்றைய எபிசோடில் நடக்கும் நிகழ்வுகளை சுவாரஸ்யம் குறையாமல் இங்கே காணலாம்.

Advertisment

ராஜா ராணி 2 சீரியலில் நேற்றைய எபிசோடில், சந்தியாவும் சரவணனும் கோயிலுக்கு பொங்கல் வைக்கப் போக வேண்டும் என்பதற்காக சிவகாமி, சந்தியா அர்ச்சனா 3 பேரும் கூடத்தில் ஒன்றாக படுத்துக்கொள்கிறார்கள். அப்போது, சரவணன், சந்தியா இல்லாமல் தூங்கமுடியாமல் இருக்கிறான். அப்போது வெளியே கொசுக்கடி இருப்பதால் சந்தியாவுக்காக சரவணன் கொசுவத்தி வைக்கும்போது அர்ச்சனா தூக்கத்தில் கத்த வீட்டில் திருடன் வந்துவிட்டான் என்று களேபரமாகிவிட்டது. சரவணன் வேகமாக அறைக்குள் சென்றுவிடுகிறான். அதுமட்டுமில்லாமல், அப்போது, சந்தியா கைகள் மீது இருந்த கொசுவை அடிக்கும்போது அவள் கையில் இருந்த மருதாணி சரவணன் கைகளில் ஒட்டிக்கொண்டது.

இன்றைய எபிசோடில், மறு நாள் காலையில், மயில் இந்த கொசுவத்தியை யார் கொண்டுவந்து வைத்தது என்று வீட்டில் எல்லோரிடமும் கேட்டுவிடுகிறார்கள். யாருமே நான் வைக்கவில்லை என்று கூறுகிறார்கள். சரவணனும் 2 மணிக்கு நான் ஏன் கொசு வத்தி வைக்கப்போகிறேன் என்று கூறுகிறான்.

சந்தியா குளித்துவிட்டு கோயிலுக்குப் போக வருகிறாள். அப்போது எதிரே வரும் சரவணன் தலையில் இடித்துக்கொள்கிறாள். அதற்கு அவனிடம் சாரி கேட்கிறாள். அதோடு, தலையில் ஒரு முறை இடித்துக்கொண்டால் கொம்பு முளைக்கும் என்ற சிறிய வயது விளையாட்டுடன் சரவணன் தலையில் மறுபடியும் முட்டிகொள்ள செல்கிறாள். அப்போது, என்ன என்று கேட்கும் சரவணனிடம், நீங்கதானே ராத்திரி கொசுவத்தி வச்சது என்று கேட்கிறாள். அவன் இல்லை என்று மறுக்கிறான். பிறகு அவனுடைய கைகளில் ஒட்டியிருந்த மருதாணியை வைத்து நீங்கதான் என்று சொல்கிறாள். ஆனால், சரவணன் உறுதியாக மறுக்கிறான். எப்படியோ கண்டுபிடித்துவிட்டாள் என்றாலும் சரவணன் ஒத்துகொள்ளாமல் அமைதியாக உங்களுக்கு வேற வேலை இல்லையா. சிஐடி மாதிரி கண்டுபிடிச்சுக்கிட்டு இருக்கீங்க என்று கூறுகிறான். ஆனாலும் சந்தியா, சரவணன் மனதில் இருக்கும் லவ்வை புரிந்துகொள்கிறாள்.

இதையடுத்து, சரவணனும் சந்தியாவும் கோயிலுக்கு போய் பொங்கல் வைக்க கிளம்புகிறாள். சந்தியா, மாமியார் சிவகாமி, மாமனார் சுந்தரம் காலில் விழுந்து ஆசிர்வாதம் வாங்குகிறாள். அவர்கள் சந்தோஷமாக இரும்மா என்று வாழ்த்துகிறார்கள்.

ஆனால், சரவணன், உங்களுக்கு சந்தோஷம் என்பது விவகாரத்து வாங்கிச்செல்வதுதானே என்று மனதுக்குள் நினைத்துக்கொள்கிறான். இதையடுத்து இருவரும் கோயிலுக்கு போகிறார்கள். பேருந்தில் இருவரும் ஒரே சிட்டில் அமர்ந்து செல்கிறார்கள். சரவணன் களைப்பில் சந்தியா மீது சாய்ந்தபடி தூங்கிவிடுகிறான். சந்தியா அதை ரசித்து அனுபவித்துகொண்டு வருகிறாள்.

பேருந்து போய்க்கொண்டே இருக்கிறது. சந்தியா, பையில் தண்ணீர் பாட்டில் எடுத்து வைத்தேன் காணவில்லை. தாகமாக இருக்கிறது என்று கூறுகிறாள். அதற்கு சரவணன் கண்டக்டர் கிட்ட தண்ணீர் பாட்டில் கேட்கிறேன் என்று கூறுகிறான். ஆனால், சந்தியா வேண்டாம். நீங்கள் சண்டை போடுவீங்க… கொஞ்ச நேரம்தானே பொறுத்துக்கிறேன் என்று கூறுகிறாள்.

பின்னர், பேருந்து ஒரு கடை அருகே நிறுத்தப்படுகிறது. கண்டக்டர் தண்ணீர் குடிப்பவர்கள், ஏதாவது கடையில் வாங்க வேண்டும் என்றால் இறங்கிப் போய் 5 நிமிடத்துக்குள் வந்துவிடுங்கள் என்று கூறுகிறார். சரவணன் தான் போய் தண்ணீர் பாட்டில் வாங்கி வருவதாகக் கூறுகிறான். ஆனால், சந்தியா தான் போய் வாங்கி வருவதாகக் கூறிவிட்டு செல்கிறாள். அவள் வருவதற்கு தாமதம் ஆகிறது. கண்டக்டர் எல்லோரும் வந்தாகிவிட்டதா என்று கேட்கிறார். சரவணன் தனது மனைவி இன்னும் வரவில்லை கொஞ்ச நேரம் இருங்க என்று கூறுகிறார். அதற்கு கண்டக்டர் எல்லோரும் வந்துட்டாங்க ஏற்கெனவே லேட் ஆகிடுச்சு அவங்க எப்ப வருவாங்க என்று கேட்கிறார். சந்தியா வராததால் பதற்றமாகிறான். சரவணன் இருங்க என்று கண்டக்டரிடம் சண்டை போடுகிறான். அதற்குள் சந்தியா அங்கே வந்துவிடுகிறாள். பிறகு இருவரும் பஸ் சீட்டில் அமர்ந்துகொள்கிறாள்.

சந்தியா வரவில்லை என்று சரவணன் பதற்றமாகி கண்டக்டருடன் சண்டை போட்டுக்கொண்டிருந்ததைப் பார்த்த, பஸ்ஸில் இருந்த ஒரு பாட்டி, சதியாவிடம் உன் புருஷனாமா என்று கேட்டிறார். அதற்கு சந்தியா ஆமாம் என்று கூறுகிறாள். அதற்கு அந்த பாட்டி விட்டுடாதம்மா, என் ராசாத்தி என்று நெட்டி முறிக்கிறார். பிறகு, “நீ குடுத்து வச்ச குமரிதான், இந்த புள்ளை உன்ன காணம்னு பரிதவிச்சு போயிடுச்சுமா. டிரைவர் கண்டக்டர் கிட்ட வண்டி எடுக்கக் கூடாதுனு நிப்பாட்டி வச்சுடுச்சுமா. நல்ல பாசக்கார புள்ளை? என்று சரவணனின் தலையைப் பிடித்து சுற்றுகிறார் பாட்டி. அதற்கு சரவணன், அதெல்லாம் ஒன்னும் இல்லை பாட்டி நான் சாதாரணமாதான் சொன்னேன் என்று கூறுகிறான். அதற்கு அந்த பாட்டி சந்தியாவிடம் விட்டுடாதம்மா நல்ல கவனிச்சுக்கோ. மூஞ்சிக்கு நேரா பாசமா பேசறதைவிட நாம இல்லாத அப்ப நம்ம மேல அக்கறை காட்றதுதான் முக்கியம். நல்லா இருக்கணும்மா என்று இரண்டு கைகளாலும் திருஷ்டி நெட்டி முறிக்கிறார். சந்தியா, சரவணனை காதலுடன் பார்த்து மனதுக்குள் புன்னைக்கிறாள். சந்தியா தண்ணீர் குடித்துவிட்டு தண்ணீர் பாட்டிலை சரவணனுக்கு தருகிறாள். சரவணன் தண்ணீர் குடிக்கிறான். இத்துடன் இன்றைய எபிசோடு நிறைவடைகிறது.

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Alya Manasa Raja Rani 2 Raja Rani 2 Serial Raja Rani
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment